<p><span style="color: rgb(255, 0, 0);">பர்தா பெண்ணின் </span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">பரிபூரண ஓவியம்</span></p>.<p>பர்தா பெண்ணை வரைவது</p>.<p>அத்தனை எளிது.</p>.<p>அவளது அலங்காரங்களில்</p>.<p>கவனம் செலுத்தவேண்டியதில்லை</p>.<p>அவளது ஆடை நிறம் குறித்த குறிப்புகள் எதுவும் தேவையில்லை.</p>.<p>பர்தா பெண்ணின் கைகள் மட்டும்</p>.<p>தொலைவிலிருந்தும் தெரியலாம்ஞ்</p>.<p>ஒரு குழந்தையைப் பற்றியபடியோ</p>.<p>புத்தகங்களை மார்போடு அணைத்தபடியோ</p>.<p>தாயின் தோழியின் கரம் பற்றியோ</p>.<p>கணவனின் கரம் பற்றியோ</p>.<p>எதுவோ ஒன்றாய்ஞ் </p>.<p>முக லாவண்யங்களுக்கும்</p>.<p>உணர்ச்சிகளுக்கும்</p>.<p>முக்கியத்துவமில்லை என்றாலும்</p>.<p>கண்களுக்கான சிறு இடைவெளியில்</p>.<p>அவள் காண்கிற உலகின் வண்ணங்களை உங்களால் இனம்காண முடிந்தால்</p>.<p>ஒரு பரிபூரண பர்தா பெண்ணை</p>.<p>ஓவியமாக்கிவிட முடியும்.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - நர்மதாகுப்புசாமி</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">கடவுள்</span></p>.<p>சற்று முன்தான் கடவுளைப் பார்த்தேன்</p>.<p>சரியாக ராயப்பேட்டை ஹைரோடில்</p>.<p>கொஞ்சமாக அழுக்குப் படிந்த</p>.<p>வெள்ளை வேட்டி சட்டையில்,</p>.<p>’பசிக்கிறது நாலு இட்லி வாங்கித் தா’ என்றார்</p>.<p>அமைதியாக உண்டவர்</p>.<p>கண்ணீரைத் துடைத்தவாறு</p>.<p>கையெடுத்து</p>.<p>எனை வணங்கிச் சென்றார்.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - ராஜ்குமார் நடராஜ்</span> </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">பேரன்பு கொண்ட...</span></p>.<p>மைக்கின் பொத்தல்கள் அடைத்துக்கொள்கின்றன</p>.<p>மாவட்டச் செயலாளரின்</p>.<p>எச்சில் தெறிக்கும் பேச்சில்</p>.<p>ஐந்தாண்டு கால</p>.<p>ஹிட்லர் ஆட்சி</p>.<p>ஐந்தாண்டு கால</p>.<p>கொடுங்கோல் ஆட்சி</p>.<p>ஐந்தாண்டு கால</p>.<p>அடக்குமுறை ஆட்சியென</p>.<p>வார்த்தைஜாலத்துக்கு</p>.<p>நேரம் ஒதுக்கி செருமி செருமி</p>.<p>அக்வாஃபீனாவை அண்ணாத்துகிறார்.</p>.<p>நொடிக்கொரு</p>.<p>நகைச்சுவைத் துணுக்குச் சொல்லி</p>.<p>தான் மட்டும் சிரித்து</p>.<p>ஒன்றியம் பகுதியென</p>.<p>மேடையில் வீற்றிருப்பவர்களையும்</p>.<p>சிரிக்கவைக்க முயலும்</p>.<p>மாவட்டத்துக்கு</p>.<p>ரெண்டு இன்னோவா</p>.<p>நாலு கோழிப்பண்ணை</p>.<p>மூணடுக்கு மாடி</p>.<p>இன்க்லூடிங் அஞ்சி பொட்டபுள்ள...</p>.<p>சட்டமன்றத் தேர்தலுக்கு</p>.<p>ஒத்திகைபார்த்து</p>.<p>பெட்டி மாற்றிக்கொண்டதோடு</p>.<p>பொதுக்கூட்டம் முடிந்தது.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);">- வினையன்</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">வாக்குமூலம்</span></p>.<p>இந்தச் சமூகத்துக்கு</p>.<p>நான் இறுதியாகக்</p>.<p>கூறவிரும்பும் செய்தி எதுவெனில்</p>.<p>இனிவரும் காலங்களில்</p>.<p>சொல்லும்படியாக</p>.<p>எந்தவொரு முக்கியச் செய்தியும்</p>.<p>இருக்கப்போவதில்லை’</p>.<p>என்பதே.</p>.<p>அ.கார்த்திகேயன்</p>.<p>ஓவியம்: ஜி.ராமமூர்த்தி</p>
<p><span style="color: rgb(255, 0, 0);">பர்தா பெண்ணின் </span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">பரிபூரண ஓவியம்</span></p>.<p>பர்தா பெண்ணை வரைவது</p>.<p>அத்தனை எளிது.</p>.<p>அவளது அலங்காரங்களில்</p>.<p>கவனம் செலுத்தவேண்டியதில்லை</p>.<p>அவளது ஆடை நிறம் குறித்த குறிப்புகள் எதுவும் தேவையில்லை.</p>.<p>பர்தா பெண்ணின் கைகள் மட்டும்</p>.<p>தொலைவிலிருந்தும் தெரியலாம்ஞ்</p>.<p>ஒரு குழந்தையைப் பற்றியபடியோ</p>.<p>புத்தகங்களை மார்போடு அணைத்தபடியோ</p>.<p>தாயின் தோழியின் கரம் பற்றியோ</p>.<p>கணவனின் கரம் பற்றியோ</p>.<p>எதுவோ ஒன்றாய்ஞ் </p>.<p>முக லாவண்யங்களுக்கும்</p>.<p>உணர்ச்சிகளுக்கும்</p>.<p>முக்கியத்துவமில்லை என்றாலும்</p>.<p>கண்களுக்கான சிறு இடைவெளியில்</p>.<p>அவள் காண்கிற உலகின் வண்ணங்களை உங்களால் இனம்காண முடிந்தால்</p>.<p>ஒரு பரிபூரண பர்தா பெண்ணை</p>.<p>ஓவியமாக்கிவிட முடியும்.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - நர்மதாகுப்புசாமி</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">கடவுள்</span></p>.<p>சற்று முன்தான் கடவுளைப் பார்த்தேன்</p>.<p>சரியாக ராயப்பேட்டை ஹைரோடில்</p>.<p>கொஞ்சமாக அழுக்குப் படிந்த</p>.<p>வெள்ளை வேட்டி சட்டையில்,</p>.<p>’பசிக்கிறது நாலு இட்லி வாங்கித் தா’ என்றார்</p>.<p>அமைதியாக உண்டவர்</p>.<p>கண்ணீரைத் துடைத்தவாறு</p>.<p>கையெடுத்து</p>.<p>எனை வணங்கிச் சென்றார்.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - ராஜ்குமார் நடராஜ்</span> </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">பேரன்பு கொண்ட...</span></p>.<p>மைக்கின் பொத்தல்கள் அடைத்துக்கொள்கின்றன</p>.<p>மாவட்டச் செயலாளரின்</p>.<p>எச்சில் தெறிக்கும் பேச்சில்</p>.<p>ஐந்தாண்டு கால</p>.<p>ஹிட்லர் ஆட்சி</p>.<p>ஐந்தாண்டு கால</p>.<p>கொடுங்கோல் ஆட்சி</p>.<p>ஐந்தாண்டு கால</p>.<p>அடக்குமுறை ஆட்சியென</p>.<p>வார்த்தைஜாலத்துக்கு</p>.<p>நேரம் ஒதுக்கி செருமி செருமி</p>.<p>அக்வாஃபீனாவை அண்ணாத்துகிறார்.</p>.<p>நொடிக்கொரு</p>.<p>நகைச்சுவைத் துணுக்குச் சொல்லி</p>.<p>தான் மட்டும் சிரித்து</p>.<p>ஒன்றியம் பகுதியென</p>.<p>மேடையில் வீற்றிருப்பவர்களையும்</p>.<p>சிரிக்கவைக்க முயலும்</p>.<p>மாவட்டத்துக்கு</p>.<p>ரெண்டு இன்னோவா</p>.<p>நாலு கோழிப்பண்ணை</p>.<p>மூணடுக்கு மாடி</p>.<p>இன்க்லூடிங் அஞ்சி பொட்டபுள்ள...</p>.<p>சட்டமன்றத் தேர்தலுக்கு</p>.<p>ஒத்திகைபார்த்து</p>.<p>பெட்டி மாற்றிக்கொண்டதோடு</p>.<p>பொதுக்கூட்டம் முடிந்தது.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);">- வினையன்</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">வாக்குமூலம்</span></p>.<p>இந்தச் சமூகத்துக்கு</p>.<p>நான் இறுதியாகக்</p>.<p>கூறவிரும்பும் செய்தி எதுவெனில்</p>.<p>இனிவரும் காலங்களில்</p>.<p>சொல்லும்படியாக</p>.<p>எந்தவொரு முக்கியச் செய்தியும்</p>.<p>இருக்கப்போவதில்லை’</p>.<p>என்பதே.</p>.<p>அ.கார்த்திகேயன்</p>.<p>ஓவியம்: ஜி.ராமமூர்த்தி</p>