<p><span style="color: rgb(255, 0, 0);">ஞாயிற்றுக்கிழமை </span></p>.<p>கறிக்குழம்பாகி மதியப் பசி தீர்க்க</p>.<p>வாசலில் இன்னமும்</p>.<p>உயிரோடு படுத்திருக்கிறது கோழி.</p>.<p>மஞ்சளும் அருவாமனையும் அருவாளும்</p>.<p>செய்யப்போகும் கொலையை நினைத்தாலும்</p>.<p>சலனமின்றித் தயாராக அமர்ந்திருக்கின்றன</p>.<p>முற்றத்துத் திண்ணையில்.</p>.<p>அப்பா செய்தித்தாளில்</p>.<p>அம்மா சமையலறையில்</p>.<p>தங்கை துணி துவைப்பில்</p>.<p>தம்பி தொலைக்காட்சியில்</p>.<p>நான் அலைபேசியில்</p>.<p>அழகான ஞாயிற்றுக்கிழமை</p>.<p>தன் கோரப்பற்களைக் காட்டிக் காட்டி</p>.<p>பயமுறுத்துகிறது.</p>.<p>மௌனமாய்ப் படுத்தபடியிருக்கும்</p>.<p>கால்கள் கட்டப்பட்ட கோழியுடன்</p>.<p>பேரென்ன... உன் பேரென்ன</p>.<p>எனக் கேட்கிறான் மோனிக்குட்டி.</p>.<p>மோப்பம் பிடித்துவிட்ட காகமொன்று</p>.<p>நெல்லி மரத்தின் மேலமர்ந்து கரைகிறது.</p>.<p>எவற்றையும் கண்டுகொள்ளாமல்</p>.<p>வைக்கோல் போரில் வைக்கோல் திருடுகிறது</p>.<p>ஒற்றைச் சிட்டுக்குருவி.</p>.<p>எதையும் சொல்லாது நானும்</p>.<p>எதையும் சொல்லாது நீயும்</p>.<p>பாரமேறி அழுத்திக்கொண்டிருக்கிறது</p>.<p>எதையும் சொல்லாத</p>.<p>இந்த ஞாயிற்றுக்கிழமை.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - சௌவி</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">கதைசொல்லி 'டெடிபியர்கள்’</span></p>.<p>ஒற்றை மகளைக்</p>.<p>கட்டிக்கொடுத்த வீடுகளில்</p>.<p>மகள் ஆடிய ஊஞ்சல்களில்</p>.<p>நிச்சயம்</p>.<p>ஒரு 'டெடிபியர்’</p>.<p>ஆடிக்கொண்டிருக்கும்.</p>.<p>அந்த மகளைப் பற்றிய</p>.<p>கதைகளைச்</p>.<p>சொல்லிக்கொண்டு.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - ஆர்.ஜவஹர் பிரேம்குமார்</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">நல்ல வெயில்</span></p>.<p>தர்பூசணி வெட்டி</p>.<p>கோடையைத் திறந்துவைத்தார்</p>.<p>சாலையோர வியாபாரி</p>.<p>தாம்சனின் அணு மாதிரியை</p>.<p>சிறுசிறு துண்டுகளாகக்</p>.<p>கூறுபோட்டார்</p>.<p>மண்டை பிளந்திருந்த</p>.<p>பழத்தின் சிவந்த முகத்தில்</p>.<p>விதைகள் ஆயிரங்கண்களாக</p>.<p>நீர் வடிந்திருந்தது.</p>.<p>வெட்டிய பழமொன்றின்</p>.<p>கீற்றைக்</p>.<p>கவ்விச் சுவைத்து</p>.<p>தாம்சன் சொன்ன</p>.<p>எலெக்ட்ரான்களைத் துப்பியபடி</p>.<p>'’என்னா வெயில்...' என்று</p>.<p>சலித்துக்கொண்டேன்.</p>.<p>'நல்ல வெயில் சார்...'</p>.<p>என்றார் வியாபாரி.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - மு.மகுடீசுவரன்</span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);">ஞாயிற்றுக்கிழமை </span></p>.<p>கறிக்குழம்பாகி மதியப் பசி தீர்க்க</p>.<p>வாசலில் இன்னமும்</p>.<p>உயிரோடு படுத்திருக்கிறது கோழி.</p>.<p>மஞ்சளும் அருவாமனையும் அருவாளும்</p>.<p>செய்யப்போகும் கொலையை நினைத்தாலும்</p>.<p>சலனமின்றித் தயாராக அமர்ந்திருக்கின்றன</p>.<p>முற்றத்துத் திண்ணையில்.</p>.<p>அப்பா செய்தித்தாளில்</p>.<p>அம்மா சமையலறையில்</p>.<p>தங்கை துணி துவைப்பில்</p>.<p>தம்பி தொலைக்காட்சியில்</p>.<p>நான் அலைபேசியில்</p>.<p>அழகான ஞாயிற்றுக்கிழமை</p>.<p>தன் கோரப்பற்களைக் காட்டிக் காட்டி</p>.<p>பயமுறுத்துகிறது.</p>.<p>மௌனமாய்ப் படுத்தபடியிருக்கும்</p>.<p>கால்கள் கட்டப்பட்ட கோழியுடன்</p>.<p>பேரென்ன... உன் பேரென்ன</p>.<p>எனக் கேட்கிறான் மோனிக்குட்டி.</p>.<p>மோப்பம் பிடித்துவிட்ட காகமொன்று</p>.<p>நெல்லி மரத்தின் மேலமர்ந்து கரைகிறது.</p>.<p>எவற்றையும் கண்டுகொள்ளாமல்</p>.<p>வைக்கோல் போரில் வைக்கோல் திருடுகிறது</p>.<p>ஒற்றைச் சிட்டுக்குருவி.</p>.<p>எதையும் சொல்லாது நானும்</p>.<p>எதையும் சொல்லாது நீயும்</p>.<p>பாரமேறி அழுத்திக்கொண்டிருக்கிறது</p>.<p>எதையும் சொல்லாத</p>.<p>இந்த ஞாயிற்றுக்கிழமை.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - சௌவி</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">கதைசொல்லி 'டெடிபியர்கள்’</span></p>.<p>ஒற்றை மகளைக்</p>.<p>கட்டிக்கொடுத்த வீடுகளில்</p>.<p>மகள் ஆடிய ஊஞ்சல்களில்</p>.<p>நிச்சயம்</p>.<p>ஒரு 'டெடிபியர்’</p>.<p>ஆடிக்கொண்டிருக்கும்.</p>.<p>அந்த மகளைப் பற்றிய</p>.<p>கதைகளைச்</p>.<p>சொல்லிக்கொண்டு.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - ஆர்.ஜவஹர் பிரேம்குமார்</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">நல்ல வெயில்</span></p>.<p>தர்பூசணி வெட்டி</p>.<p>கோடையைத் திறந்துவைத்தார்</p>.<p>சாலையோர வியாபாரி</p>.<p>தாம்சனின் அணு மாதிரியை</p>.<p>சிறுசிறு துண்டுகளாகக்</p>.<p>கூறுபோட்டார்</p>.<p>மண்டை பிளந்திருந்த</p>.<p>பழத்தின் சிவந்த முகத்தில்</p>.<p>விதைகள் ஆயிரங்கண்களாக</p>.<p>நீர் வடிந்திருந்தது.</p>.<p>வெட்டிய பழமொன்றின்</p>.<p>கீற்றைக்</p>.<p>கவ்விச் சுவைத்து</p>.<p>தாம்சன் சொன்ன</p>.<p>எலெக்ட்ரான்களைத் துப்பியபடி</p>.<p>'’என்னா வெயில்...' என்று</p>.<p>சலித்துக்கொண்டேன்.</p>.<p>'நல்ல வெயில் சார்...'</p>.<p>என்றார் வியாபாரி.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - மு.மகுடீசுவரன்</span></p>