<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>ஒதுங்கிய சரித்திரம் </strong></span></p>.<p><strong>தி</strong>ருநெல்வேலி போகும் வழியில்<br /> கயத்தாற்றில் தட்டுப்படும்<br /> சிவாஜி சாயல்கொண்ட<br /> வீரபாண்டியகட்டபொம்மன்சிலை<br /> ஒரு மோர்க்காரி<br /> சில சமயம் சுற்றுலாப் பேருந்து<br /> உறுதியாக ஒரு நாய்<br /> எப்போதும் உண்டு<br /> விநாடியில் கடந்தாலும்<br /> காட்டிக் கொடுக்கப்பட்டு<br /> தூக்கில் இடப்பட்டவனின்<br /> தோற்ற ஆன்மாவை<br /> நாசி உணரும்<br /> இப்போது<br /> புதிய தங்க நாற்கரச் சாலை<br /> கயத்தாற்றுக்குள் நுழைவதில்லை<br /> பாலத்தின் கீழ்<br /> எங்கோ இருக்கிறான்<br /> பாஞ்சாலங்குறிச்சிக்காரன்<br /> உங்கள் பயணப் பாதையில்<br /> உங்களுக்கு நிகழ இருந்த<br /> பத்து நிமிட சரித்திரத் துக்கம் நீக்கப்பட்டுவிட்டது<br /> இனி காணாததை எல்லாம்<br /> காண வேண்டியதில்லை<br /> என ஒதுக்கப்பட்டதில்<br /> தனக்கும் சந்தோஷம் என்கிறான் கட்டபொம்மன்<br /> பெரிய பெரிய ஆங்கில எழுத்துகள்<br /> பொறிக்கப்பட்ட கன்டெய்னர்கள் விரைகின்றன<br /> தூத்துக்குடி வழி கொழும்புக்கு.</p>.<p><strong>- சாம்ராஜ் </strong></p>.<p><span style="color: #339966"><strong>கடவுளை நேசித்தல் </strong></span></p>.<p><strong>க</strong>டவுளை ஒருபோதும்<br /> நான் நேசித்ததேயில்லை.</p>.<p>பயம், துக்கம், நோய், விபத்து<br /> பயணம் செய்யும்போது<br /> அம்மாவின் முந்தானையாய்<br /> அவருடைய பேர் பிடித்துப்<br /> பதுங்கி இருப்பேன்.</p>.<p>அவமானம், நிராசையின்போது<br /> அவரை நிந்தித்திருக்கிறேன்.</p>.<p>ஆசைகள் பலிக்க<br /> உண்டியலில் காசு போட்டு<br /> டீல் பேசி வியாபாரியாக்கி<br /> இருக்கிறேன் அவரை.</p>.<p>நாள் கிழமையில்<br /> அவர் பேர் சொல்லி<br /> விதவிதமாய்<br /> உண்டிருக்கிறேன்.</p>.<p>ஒரு படத்துக்குள் அடைத்து<br /> வீட்டில் வைத்தவுடன்<br /> அவர் அதில் மட்டும் இருப்பதாக<br /> நம்பி இருக்கிறேன்.</p>.<p>அவர் தந்ததை<br /> அவருக்கே படைத்து<br /> நான் செலுத்தியது எனப்<br /> பெருமையுற்றிருக்கிறேன்.</p>.<p>எனக்குத் தந்தது<br /> போதும் என நினைத்து<br /> எப்போதாவது அவர் எனக்கு<br /> வஞ்சகம் செய்திருப்பாரோ எனச்<br /> சந்தேகப்பட்டிருக்கிறேன்.</p>.<p>என்னை முன்னேறவிடாமல்<br /> தடுத்ததுபோல் திட்டி இருக்கிறேன்.<br /> என்னை எப்போது உயர்த்துவாய் என<br /> எந்நேரமும் கேட்டபடி இருக்கிறேன்.</p>.<p>என்னை யாராவது<br /> காயப்படுத்தும்போது<br /> கேட்க மாட்டாயா நீ எனக்<br /> கத்தித் தீர்த்திருக்கிறேன்.</p>.<p>கடவுளை ஒருக்காலும்<br /> நான் நேசித்ததே இல்லை என்ற<br /> உண்மையை உணரும்போது<br /> சங்கடமாக இருக்கிறது<br /> அவராவது என்னை<br /> நேசித்திருப்பாரா என்று.</p>.<p><strong>- தேனம்மை லெட்சுமணன் </strong></p>.<p><span style="color: #993366"><strong>ரயில் - சில சித்திரங்கள் </strong></span></p>.<p><strong>கா</strong>டுமேடெல்லாம்<br /> தறிகெட்டு ஓடினாலும்<br /> அறிவிக்கப்பட்ட<br /> நடைமேடையில்<br /> இடுப்பை மெதுவாய்<br /> வளைத்து நெளித்து<br /> காத்திருப்போரின்<br /> கால்களை எல்லாம்<br /> நக்கியபடி வந்து நிற்கும் ரயில்<br /> ஆக சாந்தமான ஒரு<br /> வளர்ப்புப் பிராணி<br /> என்பதை அறிக.</p>.<p> 'எப்போ கார் வாங்கப்<br /> போறீங்க?’ பின் சீட்டிலிருந்து<br /> மனைவி கேட்கிறாள்.<br /> டூ வீலர் லோனுக்கான தவணை<br /> எப்போது முடியும் என்பதை<br /> யோசித்துக்கொண்டிருக்கிறேன் நான்.<br /> 'ரயில் வாங்கலாம்பா’ என்கிறான்<br /> பெட்ரோல் டேங்கில்<br /> உட்கார்ந்திருக்கும்<br /> என் பிள்ளை.</p>.<p>அன்றாடம் பார்க்கும்<br /> ரயில்தான் என்றாலும்<br /> ஆற்றில்<br /> துவைத்துக்கொண்டிருப்பவர்கள்<br /> அண்ணாந்து பார்க்கவே செய்கிறார்கள்<br /> பாலத்தில் போகும் ரயிலை.</p>.<p><strong>- எஸ்.பாபு</strong></p>
<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>ஒதுங்கிய சரித்திரம் </strong></span></p>.<p><strong>தி</strong>ருநெல்வேலி போகும் வழியில்<br /> கயத்தாற்றில் தட்டுப்படும்<br /> சிவாஜி சாயல்கொண்ட<br /> வீரபாண்டியகட்டபொம்மன்சிலை<br /> ஒரு மோர்க்காரி<br /> சில சமயம் சுற்றுலாப் பேருந்து<br /> உறுதியாக ஒரு நாய்<br /> எப்போதும் உண்டு<br /> விநாடியில் கடந்தாலும்<br /> காட்டிக் கொடுக்கப்பட்டு<br /> தூக்கில் இடப்பட்டவனின்<br /> தோற்ற ஆன்மாவை<br /> நாசி உணரும்<br /> இப்போது<br /> புதிய தங்க நாற்கரச் சாலை<br /> கயத்தாற்றுக்குள் நுழைவதில்லை<br /> பாலத்தின் கீழ்<br /> எங்கோ இருக்கிறான்<br /> பாஞ்சாலங்குறிச்சிக்காரன்<br /> உங்கள் பயணப் பாதையில்<br /> உங்களுக்கு நிகழ இருந்த<br /> பத்து நிமிட சரித்திரத் துக்கம் நீக்கப்பட்டுவிட்டது<br /> இனி காணாததை எல்லாம்<br /> காண வேண்டியதில்லை<br /> என ஒதுக்கப்பட்டதில்<br /> தனக்கும் சந்தோஷம் என்கிறான் கட்டபொம்மன்<br /> பெரிய பெரிய ஆங்கில எழுத்துகள்<br /> பொறிக்கப்பட்ட கன்டெய்னர்கள் விரைகின்றன<br /> தூத்துக்குடி வழி கொழும்புக்கு.</p>.<p><strong>- சாம்ராஜ் </strong></p>.<p><span style="color: #339966"><strong>கடவுளை நேசித்தல் </strong></span></p>.<p><strong>க</strong>டவுளை ஒருபோதும்<br /> நான் நேசித்ததேயில்லை.</p>.<p>பயம், துக்கம், நோய், விபத்து<br /> பயணம் செய்யும்போது<br /> அம்மாவின் முந்தானையாய்<br /> அவருடைய பேர் பிடித்துப்<br /> பதுங்கி இருப்பேன்.</p>.<p>அவமானம், நிராசையின்போது<br /> அவரை நிந்தித்திருக்கிறேன்.</p>.<p>ஆசைகள் பலிக்க<br /> உண்டியலில் காசு போட்டு<br /> டீல் பேசி வியாபாரியாக்கி<br /> இருக்கிறேன் அவரை.</p>.<p>நாள் கிழமையில்<br /> அவர் பேர் சொல்லி<br /> விதவிதமாய்<br /> உண்டிருக்கிறேன்.</p>.<p>ஒரு படத்துக்குள் அடைத்து<br /> வீட்டில் வைத்தவுடன்<br /> அவர் அதில் மட்டும் இருப்பதாக<br /> நம்பி இருக்கிறேன்.</p>.<p>அவர் தந்ததை<br /> அவருக்கே படைத்து<br /> நான் செலுத்தியது எனப்<br /> பெருமையுற்றிருக்கிறேன்.</p>.<p>எனக்குத் தந்தது<br /> போதும் என நினைத்து<br /> எப்போதாவது அவர் எனக்கு<br /> வஞ்சகம் செய்திருப்பாரோ எனச்<br /> சந்தேகப்பட்டிருக்கிறேன்.</p>.<p>என்னை முன்னேறவிடாமல்<br /> தடுத்ததுபோல் திட்டி இருக்கிறேன்.<br /> என்னை எப்போது உயர்த்துவாய் என<br /> எந்நேரமும் கேட்டபடி இருக்கிறேன்.</p>.<p>என்னை யாராவது<br /> காயப்படுத்தும்போது<br /> கேட்க மாட்டாயா நீ எனக்<br /> கத்தித் தீர்த்திருக்கிறேன்.</p>.<p>கடவுளை ஒருக்காலும்<br /> நான் நேசித்ததே இல்லை என்ற<br /> உண்மையை உணரும்போது<br /> சங்கடமாக இருக்கிறது<br /> அவராவது என்னை<br /> நேசித்திருப்பாரா என்று.</p>.<p><strong>- தேனம்மை லெட்சுமணன் </strong></p>.<p><span style="color: #993366"><strong>ரயில் - சில சித்திரங்கள் </strong></span></p>.<p><strong>கா</strong>டுமேடெல்லாம்<br /> தறிகெட்டு ஓடினாலும்<br /> அறிவிக்கப்பட்ட<br /> நடைமேடையில்<br /> இடுப்பை மெதுவாய்<br /> வளைத்து நெளித்து<br /> காத்திருப்போரின்<br /> கால்களை எல்லாம்<br /> நக்கியபடி வந்து நிற்கும் ரயில்<br /> ஆக சாந்தமான ஒரு<br /> வளர்ப்புப் பிராணி<br /> என்பதை அறிக.</p>.<p> 'எப்போ கார் வாங்கப்<br /> போறீங்க?’ பின் சீட்டிலிருந்து<br /> மனைவி கேட்கிறாள்.<br /> டூ வீலர் லோனுக்கான தவணை<br /> எப்போது முடியும் என்பதை<br /> யோசித்துக்கொண்டிருக்கிறேன் நான்.<br /> 'ரயில் வாங்கலாம்பா’ என்கிறான்<br /> பெட்ரோல் டேங்கில்<br /> உட்கார்ந்திருக்கும்<br /> என் பிள்ளை.</p>.<p>அன்றாடம் பார்க்கும்<br /> ரயில்தான் என்றாலும்<br /> ஆற்றில்<br /> துவைத்துக்கொண்டிருப்பவர்கள்<br /> அண்ணாந்து பார்க்கவே செய்கிறார்கள்<br /> பாலத்தில் போகும் ரயிலை.</p>.<p><strong>- எஸ்.பாபு</strong></p>