<p><span style="color: rgb(255, 0, 0);">பெ</span>ருநகரப் பேருந்துப் பயணத்தில் மீண்டும் ஈஸ்வரிச் சித்தியை </p>.<p>எதிர்கொள்ள நேரும் என நினைத்துப்பார்த்ததில்லை.</p>.<p>அவளென்னை இனங்காணா வடிவில் பெருத்திருக்கிறேன் போலும்</p>.<p>காக்கை பார்வையில் விலக்கிக் கடக்கிறது</p>.<p>அவளது உத்வேகம்.</p>.<p>கூந்தலில் சூடிய ஊதாப்பூக்கள்</p>.<p>கிராமத்தில் அவள் உடன் தூக்கிய வண்ணம் மரமேறிய காலத்தின்</p>.<p>அதே நிறத்துடன் இருந்தன</p>.<p>அவை மரம் விட்டு மரம் தாவி இந்தப் பயணத்தில்</p>.<p>உடன் நுழைந்ததெங்கனமோ?</p>.<p>பெருநகரக் கடற்கரையைப் பாய்ந்து கிழித்துச்செல்லும் பயணம்.</p>.<p>பயணத்தை நிறுத்தி இறங்கி வழிநடக்கும் அவளை</p>.<p>ஓங்கிக் கத்திப் பின்தொடர்ந்த மனம்</p>.<p>அவள் ஏற்றியிறக்கிய மரக்கிளையெல்லாம் தாவ...</p>.<p>கடந்து செல்லும் ஈஸ்வரிச் சித்தியை</p>.<p>வாழ்ந்துகொண்டிருக்கும் ஈஸ்வரிச் சித்தி</p>.<p>அறிய மாட்டாள் என்பதல்லோ பெருந்துயரம்!</p>.<p>மரக்கிளையில் இருக்கும் ஈஸ்வரிச் சித்தி</p>.<p>பழைய நற்தருணம்</p>.<p>மரக்கிளையில்தான் இருப்பு</p>.<p>ஊதாப்பூக்கள் அவளது அடையாளம்</p>.<p>ஊதாப்பூக்களின் நிறமொன்றே</p>.<p>ஈஸ்வரிச் சித்தி என்றாலும் பிழையில்லை.</p>.<p>பேருந்துப் பயணத்தில் மீண்டுமொரு மரக்கிளையில் எனையேற்றி</p>.<p>பயணிக்கிறது கடற்காற்றின் சித்து.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);">பெ</span>ருநகரப் பேருந்துப் பயணத்தில் மீண்டும் ஈஸ்வரிச் சித்தியை </p>.<p>எதிர்கொள்ள நேரும் என நினைத்துப்பார்த்ததில்லை.</p>.<p>அவளென்னை இனங்காணா வடிவில் பெருத்திருக்கிறேன் போலும்</p>.<p>காக்கை பார்வையில் விலக்கிக் கடக்கிறது</p>.<p>அவளது உத்வேகம்.</p>.<p>கூந்தலில் சூடிய ஊதாப்பூக்கள்</p>.<p>கிராமத்தில் அவள் உடன் தூக்கிய வண்ணம் மரமேறிய காலத்தின்</p>.<p>அதே நிறத்துடன் இருந்தன</p>.<p>அவை மரம் விட்டு மரம் தாவி இந்தப் பயணத்தில்</p>.<p>உடன் நுழைந்ததெங்கனமோ?</p>.<p>பெருநகரக் கடற்கரையைப் பாய்ந்து கிழித்துச்செல்லும் பயணம்.</p>.<p>பயணத்தை நிறுத்தி இறங்கி வழிநடக்கும் அவளை</p>.<p>ஓங்கிக் கத்திப் பின்தொடர்ந்த மனம்</p>.<p>அவள் ஏற்றியிறக்கிய மரக்கிளையெல்லாம் தாவ...</p>.<p>கடந்து செல்லும் ஈஸ்வரிச் சித்தியை</p>.<p>வாழ்ந்துகொண்டிருக்கும் ஈஸ்வரிச் சித்தி</p>.<p>அறிய மாட்டாள் என்பதல்லோ பெருந்துயரம்!</p>.<p>மரக்கிளையில் இருக்கும் ஈஸ்வரிச் சித்தி</p>.<p>பழைய நற்தருணம்</p>.<p>மரக்கிளையில்தான் இருப்பு</p>.<p>ஊதாப்பூக்கள் அவளது அடையாளம்</p>.<p>ஊதாப்பூக்களின் நிறமொன்றே</p>.<p>ஈஸ்வரிச் சித்தி என்றாலும் பிழையில்லை.</p>.<p>பேருந்துப் பயணத்தில் மீண்டுமொரு மரக்கிளையில் எனையேற்றி</p>.<p>பயணிக்கிறது கடற்காற்றின் சித்து.</p>