<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தா</strong></span>த்தா இங்க ஒரு மலை</p>.<p>இருந்துச்சே எங்க?</p>.<p>கொள்ளை அடிச்சிட்டாங்கப்பா...</p>.<p>தாத்தா இங்க ஒரு ஆறு</p>.<p>இருந்துச்சே அது?</p>.<p>காணாப்போயிடுச்சுப்பா...</p>.<p>தாத்தா இங்க இருந்த நிலங்கள் எல்லாம்..?</p>.<p>பாரு கட்டடங்கள் பெருத்துப் போச்சு,</p>.<p>நிலங்கள் செத்துப் போச்சு!</p>.<p>சிட்டுக்குருவிகள் எங்க தாத்தா?</p>.<p>எல்லாம் புத்தகத்துல படமா இருக்கு.</p>.<p>பறந்த காலம் பறந்தே போச்சு!</p>.<p>மண்புழுவப் பாக்கணும் போல இருக்கு தாத்தா...</p>.<p>அட போப்பா, மனுஷனையே பாக்க முடியுமான்னு</p>.<p>சந்தேகமா இருக்கு...</p>.<p>மண்புழுவுக்கு எங்க போக?</p>.<p>நீண்ட மௌனம்...</p>.<p>இருவரும் நடந்தனர்.</p>.<p>தாத்தாவிடம் இன்னும் சொல்வதற்கு</p>.<p>இருந்தன, இழந்த கதைகள்.</p>.<p>பேரன்தான் கேட்பதை</p>.<p>நிறுத்திக் கொண்டான்.</p>.<p>காரணம் - அவன் புரிந்துகொண்டான்!</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தா</strong></span>த்தா இங்க ஒரு மலை</p>.<p>இருந்துச்சே எங்க?</p>.<p>கொள்ளை அடிச்சிட்டாங்கப்பா...</p>.<p>தாத்தா இங்க ஒரு ஆறு</p>.<p>இருந்துச்சே அது?</p>.<p>காணாப்போயிடுச்சுப்பா...</p>.<p>தாத்தா இங்க இருந்த நிலங்கள் எல்லாம்..?</p>.<p>பாரு கட்டடங்கள் பெருத்துப் போச்சு,</p>.<p>நிலங்கள் செத்துப் போச்சு!</p>.<p>சிட்டுக்குருவிகள் எங்க தாத்தா?</p>.<p>எல்லாம் புத்தகத்துல படமா இருக்கு.</p>.<p>பறந்த காலம் பறந்தே போச்சு!</p>.<p>மண்புழுவப் பாக்கணும் போல இருக்கு தாத்தா...</p>.<p>அட போப்பா, மனுஷனையே பாக்க முடியுமான்னு</p>.<p>சந்தேகமா இருக்கு...</p>.<p>மண்புழுவுக்கு எங்க போக?</p>.<p>நீண்ட மௌனம்...</p>.<p>இருவரும் நடந்தனர்.</p>.<p>தாத்தாவிடம் இன்னும் சொல்வதற்கு</p>.<p>இருந்தன, இழந்த கதைகள்.</p>.<p>பேரன்தான் கேட்பதை</p>.<p>நிறுத்திக் கொண்டான்.</p>.<p>காரணம் - அவன் புரிந்துகொண்டான்!</p>