<p><span style="color: rgb(255, 0, 0);">நீள்வட்டம்... </span></p>.<p>பிராய்லருக்குப் புரிவதில்லை</p>.<p>ஒரு கோழிமுட்டையின் வாழ்வு</p>.<p>அடைகாக்கும் கோழிக்கு அதிர்ஷ்டமிருந்தால்</p>.<p>பிள்ளைமுகம் பார்க்கும்</p>.<p>இல்லையென்றால்</p>.<p>பிள்ளை, பொடித்த வெங்காயம் சேர்த்து</p>.<p>ஆவி பறக்கும் ஆம்லெட்டாகிச் சுவைதீர்க்கும்</p>.<p>அவித்து இறக்கி ஆடை நீக்கினால்</p>.<p>இளமங்கையின் தளுக்குக்காட்டிச் சிரிக்கும்</p>.<p>பத்து மணி தாண்டி</p>.<p>பாண்டியன் கபே பக்கம் வந்தால்</p>.<p>முட்டைப் பொடிமாஸாகி</p>.<p>பங்காளிகளுக்கு நாவினிக்கும் சைட்டிஷ்ஷாகும்</p>.<p>பாலைவனத்துக் கையளவு நீரென</p>.<p>ஹாஃப்பாயிலாக மிதந்து நின்று</p>.<p>நாவூறும் வெற்றிலையாகும் சிலருக்கு</p>.<p>இவை எதுவுமறியாமல் கண்ணாடிப் பெட்டிக்குள்</p>.<p>தீயில் சுழலும் பிராய்லர் முண்டம் உணருமா</p>.<p>வாழ்க்கை ஒரு வட்டமென்றால்</p>.<p>கோழிமுட்டைக்குக் கொஞ்சம் நீள்வட்டம்தானென்று.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - சச்சின்</span> </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">போலச் சிறக்குமொரு வாழ்வு...</span></p>.<p>காடுபோல ஒரு காடு செய்திருக்கிறார்கள்</p>.<p>நதிபோல ஒரு நதி</p>.<p>குன்றுபோல ஒரு குன்று</p>.<p>கடல்போல ஒரு கடல்</p>.<p>புலிபோல ஒரு புலி</p>.<p>மீன்போல ஒரு மீன்</p>.<p>குளம்போல ஒரு குளம்</p>.<p>பூபோல ஒரு பூ</p>.<p>காற்றுபோல இருந்த காற்றில்</p>.<p>மனிதர்கள்போல இருந்த மனிதர்கள்</p>.<p>உலவி அலைந்து</p>.<p>வீடுபோல இருந்த வீடு திரும்பினர்.</p>.<p>காசுபோல இருக்கும் காசு கொடுக்காமல்</p>.<p>காசேதான் கொடுக்கவேண்டியிருந்தது.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - உமாமோகன்</span> </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">முனீஸ்வரன் கோயில் தாயத்து...</span></p>.<p>நறுக்கிய பனையோலையை</p>.<p>கூட்டல்குறிபோல் அமர்த்துக</p>.<p>அதன் மத்தியில் குத்தி</p>.<p>வெளிப்படும் காரைமுள் கூர்முனையை</p>.<p>உலர் சோளத்தக்கையில் செருகுக</p>.<p>இப்போது சுளுவாக</p>.<p>ஒரு காற்்றாடியைத் தயார்பண்ணும்</p>.<p>வித்தையைக் கற்றீர் நீங்களும்</p>.<p>அதிவேகமாகச் சுழலும்</p>.<p>அக்காற்றாடியை ஏந்திக்கொண்டு</p>.<p>வீசும் காற்றுக்கு எதிர்திசையில்</p>.<p>விரைந்தோடும்போது</p>.<p>ஒரு கிராமத்துச் சிறுவனாகி</p>.<p>முனீஸ்வரன் கோயில் முன்னர்</p>.<p>மூச்சிரைக்க நிற்கும்</p>.<p>உங்களுக்குத் தாயத்தொன்று</p>.<p>பரிசளிக்கப்படுகிறது</p>.<p>மற்றும்</p>.<p>அது கைவசம் இருக்கும் வரை</p>.<p>ஒரு மயிரும் செய்யாது</p>.<p>பிசாசுகளும் பூதங்களும்</p>.<p>என்று அறிவுறுத்தப்படுகிறீர்</p>.<p>அதை ருசுப்படுத்தும்விதமாக</p>.<p>சோளம் திணை சாமை</p>.<p>குதிரைவாலி அரிசி கொள்ளு</p>.<p>உள்ளிட்ட சிறுதானியங்களுடன்</p>.<p>ஒரு ராட்சதப் பேரங்காடிக்குள்ளிருந்து</p>.<p>கனத்தப் பையுடன் வெளியேறுகிறது</p>.<p>ஒரு பெருமாநகரத்து மத்தியதரம்.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - வெ.வெங்கடாசலம்</span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);">நீள்வட்டம்... </span></p>.<p>பிராய்லருக்குப் புரிவதில்லை</p>.<p>ஒரு கோழிமுட்டையின் வாழ்வு</p>.<p>அடைகாக்கும் கோழிக்கு அதிர்ஷ்டமிருந்தால்</p>.<p>பிள்ளைமுகம் பார்க்கும்</p>.<p>இல்லையென்றால்</p>.<p>பிள்ளை, பொடித்த வெங்காயம் சேர்த்து</p>.<p>ஆவி பறக்கும் ஆம்லெட்டாகிச் சுவைதீர்க்கும்</p>.<p>அவித்து இறக்கி ஆடை நீக்கினால்</p>.<p>இளமங்கையின் தளுக்குக்காட்டிச் சிரிக்கும்</p>.<p>பத்து மணி தாண்டி</p>.<p>பாண்டியன் கபே பக்கம் வந்தால்</p>.<p>முட்டைப் பொடிமாஸாகி</p>.<p>பங்காளிகளுக்கு நாவினிக்கும் சைட்டிஷ்ஷாகும்</p>.<p>பாலைவனத்துக் கையளவு நீரென</p>.<p>ஹாஃப்பாயிலாக மிதந்து நின்று</p>.<p>நாவூறும் வெற்றிலையாகும் சிலருக்கு</p>.<p>இவை எதுவுமறியாமல் கண்ணாடிப் பெட்டிக்குள்</p>.<p>தீயில் சுழலும் பிராய்லர் முண்டம் உணருமா</p>.<p>வாழ்க்கை ஒரு வட்டமென்றால்</p>.<p>கோழிமுட்டைக்குக் கொஞ்சம் நீள்வட்டம்தானென்று.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - சச்சின்</span> </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">போலச் சிறக்குமொரு வாழ்வு...</span></p>.<p>காடுபோல ஒரு காடு செய்திருக்கிறார்கள்</p>.<p>நதிபோல ஒரு நதி</p>.<p>குன்றுபோல ஒரு குன்று</p>.<p>கடல்போல ஒரு கடல்</p>.<p>புலிபோல ஒரு புலி</p>.<p>மீன்போல ஒரு மீன்</p>.<p>குளம்போல ஒரு குளம்</p>.<p>பூபோல ஒரு பூ</p>.<p>காற்றுபோல இருந்த காற்றில்</p>.<p>மனிதர்கள்போல இருந்த மனிதர்கள்</p>.<p>உலவி அலைந்து</p>.<p>வீடுபோல இருந்த வீடு திரும்பினர்.</p>.<p>காசுபோல இருக்கும் காசு கொடுக்காமல்</p>.<p>காசேதான் கொடுக்கவேண்டியிருந்தது.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - உமாமோகன்</span> </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">முனீஸ்வரன் கோயில் தாயத்து...</span></p>.<p>நறுக்கிய பனையோலையை</p>.<p>கூட்டல்குறிபோல் அமர்த்துக</p>.<p>அதன் மத்தியில் குத்தி</p>.<p>வெளிப்படும் காரைமுள் கூர்முனையை</p>.<p>உலர் சோளத்தக்கையில் செருகுக</p>.<p>இப்போது சுளுவாக</p>.<p>ஒரு காற்்றாடியைத் தயார்பண்ணும்</p>.<p>வித்தையைக் கற்றீர் நீங்களும்</p>.<p>அதிவேகமாகச் சுழலும்</p>.<p>அக்காற்றாடியை ஏந்திக்கொண்டு</p>.<p>வீசும் காற்றுக்கு எதிர்திசையில்</p>.<p>விரைந்தோடும்போது</p>.<p>ஒரு கிராமத்துச் சிறுவனாகி</p>.<p>முனீஸ்வரன் கோயில் முன்னர்</p>.<p>மூச்சிரைக்க நிற்கும்</p>.<p>உங்களுக்குத் தாயத்தொன்று</p>.<p>பரிசளிக்கப்படுகிறது</p>.<p>மற்றும்</p>.<p>அது கைவசம் இருக்கும் வரை</p>.<p>ஒரு மயிரும் செய்யாது</p>.<p>பிசாசுகளும் பூதங்களும்</p>.<p>என்று அறிவுறுத்தப்படுகிறீர்</p>.<p>அதை ருசுப்படுத்தும்விதமாக</p>.<p>சோளம் திணை சாமை</p>.<p>குதிரைவாலி அரிசி கொள்ளு</p>.<p>உள்ளிட்ட சிறுதானியங்களுடன்</p>.<p>ஒரு ராட்சதப் பேரங்காடிக்குள்ளிருந்து</p>.<p>கனத்தப் பையுடன் வெளியேறுகிறது</p>.<p>ஒரு பெருமாநகரத்து மத்தியதரம்.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - வெ.வெங்கடாசலம்</span></p>