<p><span style="color: rgb(255, 0, 0);">உ</span>ன் முத்தம் பெறும் நினைவு </p>.<p>வெயில் காலத்தில் பெய்யும் அரிய மழையை ரசிப்பது போன்றது</p>.<p>உன் இதழ்களில் என் இதழ்கள்</p>.<p>தலையை தன் கூட்டுக்குள் மறைத்துக்கொண்டிருக்கும்</p>.<p>நத்தை வடிவம் போலாக வேண்டும்</p>.<p>பிரிக்கவியலா இதழ்கள்</p>.<p>பெரும் காமத்தில் நடைபோடத் தொடங்குவதை</p>.<p>எண்ணிக் களிக்கிறேன் தெரியுமா</p>.<p>நாம் சந்திக்கும் கணங்களில்</p>.<p>நிசப்தத்தில் உறைந்திருக்கும் நம் உதடுகள்</p>.<p>வாத்தியங்கள் இசைக்காத இசைவெளியில்</p>.<p>முத்த மீட்டல்களை மீட்டும்</p>.<p>உன் சம்மதத்தில் பேரழிவு வெள்ளமென</p>.<p>பெருக்கெடுக்கும் கற்பனைகளில் விரிந்து மிதக்கும் நான்</p>.<p>மது பருகாமலேயே மதுவுண்ட கிறக்கத்தில்</p>.<p>உன் அருகாமை நிகழத் தவித்திருக்கிறேன்</p>.<p>உனைக் காணும் பேராவலில் செயலற்று விக்கித்துப்போன</p>.<p>என்னுள் விழித்துக்கொள்ளும் ஆண்மையை</p>.<p>வானவில்லின் நிறங்களில் அழகாக்குகிறேன்</p>.<p>நீ பார்க்கும் பொழுதுகளில் எவ்விதத் தடையுமற்று</p>.<p>ஒரு தாயைப்போல நீ அள்ளிக்கொள்ள</p>.<p>குழந்தையைப் போன்ற பரிவிலிருக்கிறேன்</p>.<p>எந்தக் கணத்திலும் நீ வெறுக்காதிருக்கவே</p>.<p>உன் மெல்லிய மனதில் மனதைக் கோக்கப்போகிறேன்</p>.<p>இரவு வந்துகொண்டிருந்தபோது</p>.<p>நீயாக விடியப்போகும் பொழுதின் பரவசங்களில்</p>.<p>புணர்ந்த உணர்வில் மிதந்தலைகிறேன் என்னுள்</p>.<p>திடீரென்று வந்த உன் அழைப்பு</p>.<p>என் ஏக்கங்களை மண்மூடிப் புதைக்க</p>.<p>கொடுக்கப்படாத நம் முத்தங்கள்</p>.<p>வீழ்கின்றன எரி நட்சத்திரங்கள்போல.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);">உ</span>ன் முத்தம் பெறும் நினைவு </p>.<p>வெயில் காலத்தில் பெய்யும் அரிய மழையை ரசிப்பது போன்றது</p>.<p>உன் இதழ்களில் என் இதழ்கள்</p>.<p>தலையை தன் கூட்டுக்குள் மறைத்துக்கொண்டிருக்கும்</p>.<p>நத்தை வடிவம் போலாக வேண்டும்</p>.<p>பிரிக்கவியலா இதழ்கள்</p>.<p>பெரும் காமத்தில் நடைபோடத் தொடங்குவதை</p>.<p>எண்ணிக் களிக்கிறேன் தெரியுமா</p>.<p>நாம் சந்திக்கும் கணங்களில்</p>.<p>நிசப்தத்தில் உறைந்திருக்கும் நம் உதடுகள்</p>.<p>வாத்தியங்கள் இசைக்காத இசைவெளியில்</p>.<p>முத்த மீட்டல்களை மீட்டும்</p>.<p>உன் சம்மதத்தில் பேரழிவு வெள்ளமென</p>.<p>பெருக்கெடுக்கும் கற்பனைகளில் விரிந்து மிதக்கும் நான்</p>.<p>மது பருகாமலேயே மதுவுண்ட கிறக்கத்தில்</p>.<p>உன் அருகாமை நிகழத் தவித்திருக்கிறேன்</p>.<p>உனைக் காணும் பேராவலில் செயலற்று விக்கித்துப்போன</p>.<p>என்னுள் விழித்துக்கொள்ளும் ஆண்மையை</p>.<p>வானவில்லின் நிறங்களில் அழகாக்குகிறேன்</p>.<p>நீ பார்க்கும் பொழுதுகளில் எவ்விதத் தடையுமற்று</p>.<p>ஒரு தாயைப்போல நீ அள்ளிக்கொள்ள</p>.<p>குழந்தையைப் போன்ற பரிவிலிருக்கிறேன்</p>.<p>எந்தக் கணத்திலும் நீ வெறுக்காதிருக்கவே</p>.<p>உன் மெல்லிய மனதில் மனதைக் கோக்கப்போகிறேன்</p>.<p>இரவு வந்துகொண்டிருந்தபோது</p>.<p>நீயாக விடியப்போகும் பொழுதின் பரவசங்களில்</p>.<p>புணர்ந்த உணர்வில் மிதந்தலைகிறேன் என்னுள்</p>.<p>திடீரென்று வந்த உன் அழைப்பு</p>.<p>என் ஏக்கங்களை மண்மூடிப் புதைக்க</p>.<p>கொடுக்கப்படாத நம் முத்தங்கள்</p>.<p>வீழ்கின்றன எரி நட்சத்திரங்கள்போல.</p>