<p><span style="color: rgb(255, 0, 0);">த</span>லையில் கட்டியிருந்த டார்ச் வெளிச்சத்தால், </p>.<p>ஒரு மாபெரும் மாளிகையைத் திறப்பதுபோல்</p>.<p>மையிருட்டு பின்னிரவைத் திறந்துபோனார்கள் </p>.<p>முயல் வேட்டைக்காரர்கள். </p>.<p>காடு விழித்துக்கொண்டதை அறிந்த ஜீவக்கூட்டங்கள்</p>.<p>கொத்தமல்லி பூத்திருந்த நிலத்தை,</p>.<p>கச்சேரி நடக்கும் மைதானம்போல் மாற்றியிருந்தன.</p>.<p>சில்வண்டின் உச்சஸ்தாயிக் குரல்</p>.<p>தூரத்து வேலங்காட்டிலிருந்து வெளியேறி</p>.<p>அந்தச் சமவெளியைக் கடந்துபோனது.</p>.<p>எழுந்து பறந்தமர்ந்த காடைகள் </p>.<p>இறங்கி ஓடிய பாத்தியில் </p>.<p>ஈர மண்ணோடு பெயர்ந்து துடித்தன மண்புழுக்கள்.</p>.<p>தனித்தலையும் மிரண்ட மானைப்போல் </p>.<p>நிலவு நின்றிருந்த திக்கில் </p>.<p>அடுத்தடுத்து, தொடர்ச்சியாக </p>.<p>தேக்கிலைகள் உதிர்வதைக் கேட்க முடிந்தது.</p>.<p>முயலொன்று ரவையால் துளையிடப்பட்டபோது</p>.<p>ஒரு கூடையைப்போல் அந்தக் காட்டைத் திறந்தது ஊதக்காற்று. </p>.<p>நாசியையும் நாவின் சுவை நீட்சிகளையும்</p>.<p>ஒரே நேரத்தில் மயக்கும் வாசனை </p>.<p>காடெங்கும் பரவி வியாபித்தது. </p>.<p>அந்த மணம்</p>.<p>கொத்தமல்லியுடையதுபோலவும் இருந்தது </p>.<p>கலவியின்போது தன் இணையை இழந்த</p>.<p>முயலுடையதுபோலவும் இருந்தது.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);">த</span>லையில் கட்டியிருந்த டார்ச் வெளிச்சத்தால், </p>.<p>ஒரு மாபெரும் மாளிகையைத் திறப்பதுபோல்</p>.<p>மையிருட்டு பின்னிரவைத் திறந்துபோனார்கள் </p>.<p>முயல் வேட்டைக்காரர்கள். </p>.<p>காடு விழித்துக்கொண்டதை அறிந்த ஜீவக்கூட்டங்கள்</p>.<p>கொத்தமல்லி பூத்திருந்த நிலத்தை,</p>.<p>கச்சேரி நடக்கும் மைதானம்போல் மாற்றியிருந்தன.</p>.<p>சில்வண்டின் உச்சஸ்தாயிக் குரல்</p>.<p>தூரத்து வேலங்காட்டிலிருந்து வெளியேறி</p>.<p>அந்தச் சமவெளியைக் கடந்துபோனது.</p>.<p>எழுந்து பறந்தமர்ந்த காடைகள் </p>.<p>இறங்கி ஓடிய பாத்தியில் </p>.<p>ஈர மண்ணோடு பெயர்ந்து துடித்தன மண்புழுக்கள்.</p>.<p>தனித்தலையும் மிரண்ட மானைப்போல் </p>.<p>நிலவு நின்றிருந்த திக்கில் </p>.<p>அடுத்தடுத்து, தொடர்ச்சியாக </p>.<p>தேக்கிலைகள் உதிர்வதைக் கேட்க முடிந்தது.</p>.<p>முயலொன்று ரவையால் துளையிடப்பட்டபோது</p>.<p>ஒரு கூடையைப்போல் அந்தக் காட்டைத் திறந்தது ஊதக்காற்று. </p>.<p>நாசியையும் நாவின் சுவை நீட்சிகளையும்</p>.<p>ஒரே நேரத்தில் மயக்கும் வாசனை </p>.<p>காடெங்கும் பரவி வியாபித்தது. </p>.<p>அந்த மணம்</p>.<p>கொத்தமல்லியுடையதுபோலவும் இருந்தது </p>.<p>கலவியின்போது தன் இணையை இழந்த</p>.<p>முயலுடையதுபோலவும் இருந்தது.</p>