<p><span style="color: rgb(255, 0, 0);">கண் மூடிக் கிடப்பவள் </span></p>.<p>வெண்கரடி பொம்மையை</p>.<p>அருகில் வைத்தபடி தூங்குவாள் தினமும்.</p>.<p>அம்மாவோடு சண்டைபோடும் நாட்களில்</p>.<p>அப்பாவின் மடியில்.</p>.<p>இன்னும் சில நாட்களில் தங்கையோடும்</p>.<p>கல்லூரி விடுமுறை தினங்களில்</p>.<p>அக்கா குழந்தைகளோடும் சேர்ந்து</p>.<p>அரட்டையடித்தபடி தூங்கிவிடுவாள்.</p>.<p>நேற்றைய இரவில் பேருந்தில்</p>.<p>தனியாக ஜன்னல் கம்பியின் மேல்</p>.<p>சாய்ந்து தூங்கியவள்</p>.<p>இப்போது கண் மூடிக் கிடக்கிறாள்</p>.<p>முட்புதருக்குள்.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - கிருத்திகா தாஸ்</span> </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">வேலை</span></p>.<p>தினம் காலையில்</p>.<p>பூக்கடையைத் திறந்துவைப்பவளின்</p>.<p>புன்னகையைக் காண்கையில்</p>.<p>சற்றுப் பொறாமையாக இருந்தது </p>.<p>மாலையில்</p>.<p>பூந்தொட்டிகளை ஒவ்வொன்றாக</p>.<p>கடைக்குள் </p>.<p>எடுத்து வைத்துக்கொண்டிருந்தவளின் </p>.<p>முகத்தை</p>.<p>ஒருநாள் பார்க்கும் வரையிலும். </p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - அருண் காந்திநாதன்</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"> சிறு மலர்</span></p>.<p>என் இதயத்தின்</p>.<p>அடியாழத்தை நோக்கி</p>.<p>விழுந்துகொண்டே இருக்கிறது</p>.<p>ஒரு சிறு மலர்.</p>.<p>இதயத்தின் மையிருட்டில்</p>.<p>அதன் இதழ்கள்</p>.<p>மினுங்குவதைப் பார்த்தபடி இருக்கிறேன்</p>.<p>என் இதயத்தின்</p>.<p>அடியாழத்தில்தான்</p>.<p>அதை வாங்கிக்கொள்ள</p>.<p>தரை என்று</p>.<p>ஒன்றுமில்லையே</p>.<p>இனி எங்குதான் விழும்</p>.<p>அந்தச் சிறு மலர்?</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - கார்த்திக் திலகன்</span> </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">நாலாங்கிளாஸ் முழுப்பரிட்சை லீவு</span></p>.<p>பருத்திக் காட்டுக்குள்ள தட்டுக்குச்சி ஒடிச்சிக்கிட்டு</p>.<p>உச்சிவெய்யில்ல வாரப்ப</p>.<p>நடக்கவும் முடியாம, ஒதுங்க நெகிலில்லாம</p>.<p>காலெல்லாம் பத்திக்கிட்டு சுடுறப்ப</p>.<p>திரிஞ்ச கழுத மேல தாவி ஏறி</p>.<p>செஞ்ச சவாரி</p>.<p>இன்னும் ஞாபகத்துல திரிஞ்சுட்டே கிடக்கு</p>.<p>எட்டு கமான் பாலத்து மேல நின்னு</p>.<p>தலைக்குப்புற பல்டி அடிச்சு</p>.<p>மூச்சடக்கி முங்கு நீச்சல் போட்டு</p>.<p>அடி வேத்தை அள்ளியாந்து</p>.<p>மண்ணுப்புள்ளையார் புடிச்சிவெச்சி</p>.<p>எருக்கம் பூ மாலை சாத்தி கும்பிட்டது</p>.<p>இன்னும் மனசுல சாமியா கிடக்கு</p>.<p>அய்யாவுபிள்ள தோட்டத்துக் கொய்யாக்காய</p>.<p>திருட்டுத்தனமா பொறிச்சாந்து</p>.<p>உப்பு மௌகாத்தூளை ரொப்பி</p>.<p>கொய்யாவ வகுந்து நறுக்குன்னு கடிச்ச ருசி</p>.<p>இன்னும் உள்நாக்குல ஒட்டிக் கிடக்கு</p>.<p>சிறு நெல்லிக்கா மரமேறி காலால உலுக்கியுட</p>.<p>கிளிப்பச்சை நிற மழை பேஞ்சதுபோல</p>.<p>விழுந்த காய்களைப் பொறுக்கித் தின்னதும்</p>.<p>அப்புறமா குடிச்ச தண்ணி சர்க்கரையா இனிச்சதும்</p>.<p>இன்னும் தொண்டைக்குள்ள ஈரமா கிடக்கு</p>.<p>லீவெல்லாம் முடிஞ்சுபோய்</p>.<p>புதுசா தச்ச டிராயர் சட்டைகள பல தடவ போட்டுப்பாத்து</p>.<p>புதுப் புத்தக வாசத்தை பல தடவ மோந்து பாத்து</p>.<p>பாஸான சந்தோஷமும் புகு வகுப்பு பரவசமும்</p>.<p>புது வாத்தியார் குரலும்...</p>.<p>எல்லாம் சேந்து இருந்தாலும்</p>.<p>என்னிக்கும் மனசுல லீவு நாளே வெளிச்சமா இருக்கு!</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - ஸ்ரீ நிவாஸ் பிரபு</span> </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">நிலவொளியில் பனித்துளிகள்</span> </p>.<p>நிலம் வாங்கினேன்</p>.<p>வெண்டை, கீரை</p>.<p>வசிக்க.</p>.<p>**</p>.<p>பத்து மாதம் சுமந்தவளை</p>.<p>நான் சுமக்கிறேன்</p>.<p>மண் குடுவைக்குள்.</p>.<p>**</p>.<p>விற்ற நிலம்</p>.<p>வாழ்கிறது சட்டையில்</p>.<p>வாழைக் கறை.</p>.<p>**</p>.<p>காட்டுக்குள் லாரி</p>.<p>லாரிக்குள் காடு</p>.<p>வெட்டிய மரங்கள்.</p>.<p>**</p>.<p>நடுக் கழுத்தில்</p>.<p>நெல்மணிகள்</p>.<p>அறுபட்ட கோழி.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - துரை.நந்தகுமார்</span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);">கண் மூடிக் கிடப்பவள் </span></p>.<p>வெண்கரடி பொம்மையை</p>.<p>அருகில் வைத்தபடி தூங்குவாள் தினமும்.</p>.<p>அம்மாவோடு சண்டைபோடும் நாட்களில்</p>.<p>அப்பாவின் மடியில்.</p>.<p>இன்னும் சில நாட்களில் தங்கையோடும்</p>.<p>கல்லூரி விடுமுறை தினங்களில்</p>.<p>அக்கா குழந்தைகளோடும் சேர்ந்து</p>.<p>அரட்டையடித்தபடி தூங்கிவிடுவாள்.</p>.<p>நேற்றைய இரவில் பேருந்தில்</p>.<p>தனியாக ஜன்னல் கம்பியின் மேல்</p>.<p>சாய்ந்து தூங்கியவள்</p>.<p>இப்போது கண் மூடிக் கிடக்கிறாள்</p>.<p>முட்புதருக்குள்.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - கிருத்திகா தாஸ்</span> </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">வேலை</span></p>.<p>தினம் காலையில்</p>.<p>பூக்கடையைத் திறந்துவைப்பவளின்</p>.<p>புன்னகையைக் காண்கையில்</p>.<p>சற்றுப் பொறாமையாக இருந்தது </p>.<p>மாலையில்</p>.<p>பூந்தொட்டிகளை ஒவ்வொன்றாக</p>.<p>கடைக்குள் </p>.<p>எடுத்து வைத்துக்கொண்டிருந்தவளின் </p>.<p>முகத்தை</p>.<p>ஒருநாள் பார்க்கும் வரையிலும். </p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - அருண் காந்திநாதன்</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"> சிறு மலர்</span></p>.<p>என் இதயத்தின்</p>.<p>அடியாழத்தை நோக்கி</p>.<p>விழுந்துகொண்டே இருக்கிறது</p>.<p>ஒரு சிறு மலர்.</p>.<p>இதயத்தின் மையிருட்டில்</p>.<p>அதன் இதழ்கள்</p>.<p>மினுங்குவதைப் பார்த்தபடி இருக்கிறேன்</p>.<p>என் இதயத்தின்</p>.<p>அடியாழத்தில்தான்</p>.<p>அதை வாங்கிக்கொள்ள</p>.<p>தரை என்று</p>.<p>ஒன்றுமில்லையே</p>.<p>இனி எங்குதான் விழும்</p>.<p>அந்தச் சிறு மலர்?</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - கார்த்திக் திலகன்</span> </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">நாலாங்கிளாஸ் முழுப்பரிட்சை லீவு</span></p>.<p>பருத்திக் காட்டுக்குள்ள தட்டுக்குச்சி ஒடிச்சிக்கிட்டு</p>.<p>உச்சிவெய்யில்ல வாரப்ப</p>.<p>நடக்கவும் முடியாம, ஒதுங்க நெகிலில்லாம</p>.<p>காலெல்லாம் பத்திக்கிட்டு சுடுறப்ப</p>.<p>திரிஞ்ச கழுத மேல தாவி ஏறி</p>.<p>செஞ்ச சவாரி</p>.<p>இன்னும் ஞாபகத்துல திரிஞ்சுட்டே கிடக்கு</p>.<p>எட்டு கமான் பாலத்து மேல நின்னு</p>.<p>தலைக்குப்புற பல்டி அடிச்சு</p>.<p>மூச்சடக்கி முங்கு நீச்சல் போட்டு</p>.<p>அடி வேத்தை அள்ளியாந்து</p>.<p>மண்ணுப்புள்ளையார் புடிச்சிவெச்சி</p>.<p>எருக்கம் பூ மாலை சாத்தி கும்பிட்டது</p>.<p>இன்னும் மனசுல சாமியா கிடக்கு</p>.<p>அய்யாவுபிள்ள தோட்டத்துக் கொய்யாக்காய</p>.<p>திருட்டுத்தனமா பொறிச்சாந்து</p>.<p>உப்பு மௌகாத்தூளை ரொப்பி</p>.<p>கொய்யாவ வகுந்து நறுக்குன்னு கடிச்ச ருசி</p>.<p>இன்னும் உள்நாக்குல ஒட்டிக் கிடக்கு</p>.<p>சிறு நெல்லிக்கா மரமேறி காலால உலுக்கியுட</p>.<p>கிளிப்பச்சை நிற மழை பேஞ்சதுபோல</p>.<p>விழுந்த காய்களைப் பொறுக்கித் தின்னதும்</p>.<p>அப்புறமா குடிச்ச தண்ணி சர்க்கரையா இனிச்சதும்</p>.<p>இன்னும் தொண்டைக்குள்ள ஈரமா கிடக்கு</p>.<p>லீவெல்லாம் முடிஞ்சுபோய்</p>.<p>புதுசா தச்ச டிராயர் சட்டைகள பல தடவ போட்டுப்பாத்து</p>.<p>புதுப் புத்தக வாசத்தை பல தடவ மோந்து பாத்து</p>.<p>பாஸான சந்தோஷமும் புகு வகுப்பு பரவசமும்</p>.<p>புது வாத்தியார் குரலும்...</p>.<p>எல்லாம் சேந்து இருந்தாலும்</p>.<p>என்னிக்கும் மனசுல லீவு நாளே வெளிச்சமா இருக்கு!</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - ஸ்ரீ நிவாஸ் பிரபு</span> </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">நிலவொளியில் பனித்துளிகள்</span> </p>.<p>நிலம் வாங்கினேன்</p>.<p>வெண்டை, கீரை</p>.<p>வசிக்க.</p>.<p>**</p>.<p>பத்து மாதம் சுமந்தவளை</p>.<p>நான் சுமக்கிறேன்</p>.<p>மண் குடுவைக்குள்.</p>.<p>**</p>.<p>விற்ற நிலம்</p>.<p>வாழ்கிறது சட்டையில்</p>.<p>வாழைக் கறை.</p>.<p>**</p>.<p>காட்டுக்குள் லாரி</p>.<p>லாரிக்குள் காடு</p>.<p>வெட்டிய மரங்கள்.</p>.<p>**</p>.<p>நடுக் கழுத்தில்</p>.<p>நெல்மணிகள்</p>.<p>அறுபட்ட கோழி.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - துரை.நந்தகுமார்</span></p>