<p><strong>எனக்குப் பதிலாக அவளைக் காதலிப்பதற்கு </strong></p>.<p><strong>ஒருவருமில்லை ஆகவே நான் அவளைக் காதலித்தேன்</strong></p>.<p><strong> பாதி தோல் சீவப்பட்ட ஆப்பிளை</strong></p>.<p><strong>அவர்களால் பத்திரப்படுத்த முடியாது</strong></p>.<p><strong>அவளுக்குப் பதிலாக மரிப்பதற்கு</strong></p>.<p><strong>அவளிடத்தில் வேறொருவருமில்லை</strong></p>.<p><strong>அதற்காகவே நான் மரித்துப்போகிறேன்</strong></p>.<p><strong>நான் வாளொன்றையும் எடுத்துச் செல்லவில்லை</strong></p>.<p><strong>குளிர்ந்த சூரியனை நோக்கியே நடந்துபோகிறேன்</strong></p>.<p><strong>புழு துளையிட்ட பழத்தின் விதையாக</strong></p>.<p><strong>நான் நிச்சயம் திரும்பி வருவேன்</strong></p>.<p><strong>காதலித்ததற்காகவும் முத்தமிட்டதற்காகவும்</strong></p>.<p><strong>கொலை செய்யப்பட்ட நான்</strong></p>.<p><strong>நிறையக் கிளைகளையுடைய கனிகளையுடைய</strong></p>.<p><strong>அத்திமரமாய் முளைத்தெழுவதற்கும்</strong></p>.<p><strong>அனேக வாய்ப்பிருக்கிறது</strong></p>.<p><strong>என் கிளைகளை வந்தடையும் பறவைகள்</strong></p>.<p><strong>என் கனிகளைக் கொத்தித் தின்பதைப்போல</strong></p>.<p><strong>எனது கழுத்தறுத்துக் கொன்றவர்களும்கூட</strong></p>.<p><strong>என்னில் வந்து இளைப்பாறலாம்</strong></p>.<p><strong>நிச்சயமாக நிழல் தருவேன் நான்</strong></p>.<p><strong>அணில் குஞ்சுகள் வந்து முத்தமிட்டாலென்ன</strong></p>.<p><strong>நீங்கள் வந்து முத்தமிட்டாலென்ன</strong></p>.<p><strong>மீண்டும் முத்தத்திற்காகவே</strong></p>.<p><strong>முட்டி முளைக்கப்போகும் மரம் நான்</strong></p>.<p><strong>தைரியமாக வந்து என்னை முத்தமிடுங்கள்</strong></p>.<p><strong>அப்படியொரு முத்தத்தில்</strong></p>.<p><strong>நிச்சயம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்</strong></p>.<p><strong>எனக்குப் பதிலாக அவளைக் காதலிப்பதற்கு வேறொருவருமில்லையென்று.</strong></p>
<p><strong>எனக்குப் பதிலாக அவளைக் காதலிப்பதற்கு </strong></p>.<p><strong>ஒருவருமில்லை ஆகவே நான் அவளைக் காதலித்தேன்</strong></p>.<p><strong> பாதி தோல் சீவப்பட்ட ஆப்பிளை</strong></p>.<p><strong>அவர்களால் பத்திரப்படுத்த முடியாது</strong></p>.<p><strong>அவளுக்குப் பதிலாக மரிப்பதற்கு</strong></p>.<p><strong>அவளிடத்தில் வேறொருவருமில்லை</strong></p>.<p><strong>அதற்காகவே நான் மரித்துப்போகிறேன்</strong></p>.<p><strong>நான் வாளொன்றையும் எடுத்துச் செல்லவில்லை</strong></p>.<p><strong>குளிர்ந்த சூரியனை நோக்கியே நடந்துபோகிறேன்</strong></p>.<p><strong>புழு துளையிட்ட பழத்தின் விதையாக</strong></p>.<p><strong>நான் நிச்சயம் திரும்பி வருவேன்</strong></p>.<p><strong>காதலித்ததற்காகவும் முத்தமிட்டதற்காகவும்</strong></p>.<p><strong>கொலை செய்யப்பட்ட நான்</strong></p>.<p><strong>நிறையக் கிளைகளையுடைய கனிகளையுடைய</strong></p>.<p><strong>அத்திமரமாய் முளைத்தெழுவதற்கும்</strong></p>.<p><strong>அனேக வாய்ப்பிருக்கிறது</strong></p>.<p><strong>என் கிளைகளை வந்தடையும் பறவைகள்</strong></p>.<p><strong>என் கனிகளைக் கொத்தித் தின்பதைப்போல</strong></p>.<p><strong>எனது கழுத்தறுத்துக் கொன்றவர்களும்கூட</strong></p>.<p><strong>என்னில் வந்து இளைப்பாறலாம்</strong></p>.<p><strong>நிச்சயமாக நிழல் தருவேன் நான்</strong></p>.<p><strong>அணில் குஞ்சுகள் வந்து முத்தமிட்டாலென்ன</strong></p>.<p><strong>நீங்கள் வந்து முத்தமிட்டாலென்ன</strong></p>.<p><strong>மீண்டும் முத்தத்திற்காகவே</strong></p>.<p><strong>முட்டி முளைக்கப்போகும் மரம் நான்</strong></p>.<p><strong>தைரியமாக வந்து என்னை முத்தமிடுங்கள்</strong></p>.<p><strong>அப்படியொரு முத்தத்தில்</strong></p>.<p><strong>நிச்சயம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்</strong></p>.<p><strong>எனக்குப் பதிலாக அவளைக் காதலிப்பதற்கு வேறொருவருமில்லையென்று.</strong></p>