<p><span style="color: rgb(255, 0, 0);">சே குவேரா, இறுதியில் விடுதலையாகிறார்! </span></p>.<p>பொலிவியக் காடுகளில் மறைந்து வாழ்ந்த சே குவேரா</p>.<p>இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக எம் மாநகரத்தில் தென்படுகிறார்.</p>.<p>மதுபானக்கடையில் இருந்து வெளியே வரும்போது</p>.<p>வியர்வையில் நசநசத்துத் தள்ளாடியபடி வரும் அவர்</p>.<p>'ஏய்... ரெட் டீ ஷர்ட் நாயே, சொல்லிட்டு வந்துட்டியா?' எனும்</p>.<p>தன்னைக் குறித்த காரோட்டியின் வசவுகளை</p>.<p>வழக்கமான புன்னகையுடன் கடந்து செல்கிறார்.</p>.<p>பெட்டிக்கடையில் நின்று அவன் புகைக்கையில்</p>.<p>ட்ரேட் மார்க் சுருட்டோடு உடனிருக்கும் அவர்</p>.<p>ஹெல்மெட் அணிந்து பைக்கில் விரைகையில்</p>.<p>எதிர்க்காற்றில் நெஞ்சோடு ஒட்டிக்கொள்கிறார்.</p>.<p>ஒரு குறுகிய சாலையில் இளம்பெண்ணின்</p>.<p>கழுத்துச் சங்கிலியை அவன் களவாட முயல்கையில்</p>.<p>சற்றே பதற்றமடைந்து,</p>.<p>சங்கிலியை ஒரு கையால் பற்றியபடி</p>.<p>அவள் மறுகையால் பிடித்திழுத்ததில் கிழிந்து</p>.<p>அவள் கைக்குள் சென்றுவிட்ட சே குவேரா</p>.<p>இப்போது விட்டு விடுதலையாகிச் சிரிக்கிறார்!</p>.<p> - <span style="color: rgb(128, 0, 0);">சேயோன் யாழ்வேந்தன்</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">அடுப்பங்கரைக் கண்ணீர்</span> </p>.<p>ருசியாகச் சாப்பிட்டுப் பழகிய நாக்கு</p>.<p>ருசியற்ற நாட்களில்</p>.<p>தடித்த வார்த்தைகளை உதிர்க்கிறது</p>.<p>முள்ளென மாறி</p>.<p>எதிரில் இருப்போரைக் குத்துகிறது</p>.<p>நிர்வாண வார்த்தைகளைத் துப்பி ரசிக்கிறது</p>.<p>ருத்ரதாண்டவம் ஆடுகிறது</p>.<p>அசிங்க முகம் காட்டுகிறது</p>.<p>இதே கைகள் ஆக்கிப்போட்ட</p>.<p>ஆனந்த ருசிகளை மறந்துவிடுகிறது</p>.<p>கடைசியில்</p>.<p>எல்லாவற்றையும் தண்ணீரால் கழுவிக்கொண்டு</p>.<p>எதுவும் தெரியாமல் நகர்ந்துவிடுகிறது</p>.<p>அடுப்பங்கரையில் பெய்யும் மழையில்</p>.<p>நனையாமல்!</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - சௌவி</span> </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">அவர்களுக்கும் பெயர் உண்டு!</span> </p>.<p>செந்தில்நாதன்</p>.<p>வேலைக்குச் சேர வந்திருந்தார்</p>.<p>செந்தில்நாதனை</p>.<p>அவர்தான் செந்தில்நாதன்</p>.<p>என நிரூபணம் செய்ய</p>.<p>அடையாள அட்டை கேட்டார்கள்</p>.<p>அதில்</p>.<p>செந்தில்நாதன் என்றே இருந்தது</p>.<p>இப்போது வருகைப் பதிவேட்டிலும்</p>.<p>செந்தில்நாதன் என்றுதான்</p>.<p>ஒப்பம் இடுகிறார்.</p>.<p>அந்த செந்தில்நாதனை எனக்குத் தெரியும்</p>.<p>அவரைப் போல் வேறொரு செந்தில்நாதனை</p>.<p>உங்களுக்கும் தெரியும்.</p>.<p>ரொம்பவே யோசிக்க வேண்டாம்</p>.<p>உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில்</p>.<p>நேற்று பேசத் தொடங்கிய</p>.<p>குழந்தை முதல் எல்லோரும்...</p>.<p>'வாட்ச்மேன்...' எனக்</p>.<p>கத்திக் கூப்பாடு இடுகிறீர்களே,</p>.<p>அவர் ஓடிவரும்போது பாருங்கள்.</p>.<p>சட்டையில்...</p>.<p>செந்தில்நாதன் என்ற வில்லை</p>.<p>வலியோடு ஒட்டிக்கிடக்கலாம்.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - ராம் வசந்த்</span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);">சே குவேரா, இறுதியில் விடுதலையாகிறார்! </span></p>.<p>பொலிவியக் காடுகளில் மறைந்து வாழ்ந்த சே குவேரா</p>.<p>இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக எம் மாநகரத்தில் தென்படுகிறார்.</p>.<p>மதுபானக்கடையில் இருந்து வெளியே வரும்போது</p>.<p>வியர்வையில் நசநசத்துத் தள்ளாடியபடி வரும் அவர்</p>.<p>'ஏய்... ரெட் டீ ஷர்ட் நாயே, சொல்லிட்டு வந்துட்டியா?' எனும்</p>.<p>தன்னைக் குறித்த காரோட்டியின் வசவுகளை</p>.<p>வழக்கமான புன்னகையுடன் கடந்து செல்கிறார்.</p>.<p>பெட்டிக்கடையில் நின்று அவன் புகைக்கையில்</p>.<p>ட்ரேட் மார்க் சுருட்டோடு உடனிருக்கும் அவர்</p>.<p>ஹெல்மெட் அணிந்து பைக்கில் விரைகையில்</p>.<p>எதிர்க்காற்றில் நெஞ்சோடு ஒட்டிக்கொள்கிறார்.</p>.<p>ஒரு குறுகிய சாலையில் இளம்பெண்ணின்</p>.<p>கழுத்துச் சங்கிலியை அவன் களவாட முயல்கையில்</p>.<p>சற்றே பதற்றமடைந்து,</p>.<p>சங்கிலியை ஒரு கையால் பற்றியபடி</p>.<p>அவள் மறுகையால் பிடித்திழுத்ததில் கிழிந்து</p>.<p>அவள் கைக்குள் சென்றுவிட்ட சே குவேரா</p>.<p>இப்போது விட்டு விடுதலையாகிச் சிரிக்கிறார்!</p>.<p> - <span style="color: rgb(128, 0, 0);">சேயோன் யாழ்வேந்தன்</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">அடுப்பங்கரைக் கண்ணீர்</span> </p>.<p>ருசியாகச் சாப்பிட்டுப் பழகிய நாக்கு</p>.<p>ருசியற்ற நாட்களில்</p>.<p>தடித்த வார்த்தைகளை உதிர்க்கிறது</p>.<p>முள்ளென மாறி</p>.<p>எதிரில் இருப்போரைக் குத்துகிறது</p>.<p>நிர்வாண வார்த்தைகளைத் துப்பி ரசிக்கிறது</p>.<p>ருத்ரதாண்டவம் ஆடுகிறது</p>.<p>அசிங்க முகம் காட்டுகிறது</p>.<p>இதே கைகள் ஆக்கிப்போட்ட</p>.<p>ஆனந்த ருசிகளை மறந்துவிடுகிறது</p>.<p>கடைசியில்</p>.<p>எல்லாவற்றையும் தண்ணீரால் கழுவிக்கொண்டு</p>.<p>எதுவும் தெரியாமல் நகர்ந்துவிடுகிறது</p>.<p>அடுப்பங்கரையில் பெய்யும் மழையில்</p>.<p>நனையாமல்!</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - சௌவி</span> </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">அவர்களுக்கும் பெயர் உண்டு!</span> </p>.<p>செந்தில்நாதன்</p>.<p>வேலைக்குச் சேர வந்திருந்தார்</p>.<p>செந்தில்நாதனை</p>.<p>அவர்தான் செந்தில்நாதன்</p>.<p>என நிரூபணம் செய்ய</p>.<p>அடையாள அட்டை கேட்டார்கள்</p>.<p>அதில்</p>.<p>செந்தில்நாதன் என்றே இருந்தது</p>.<p>இப்போது வருகைப் பதிவேட்டிலும்</p>.<p>செந்தில்நாதன் என்றுதான்</p>.<p>ஒப்பம் இடுகிறார்.</p>.<p>அந்த செந்தில்நாதனை எனக்குத் தெரியும்</p>.<p>அவரைப் போல் வேறொரு செந்தில்நாதனை</p>.<p>உங்களுக்கும் தெரியும்.</p>.<p>ரொம்பவே யோசிக்க வேண்டாம்</p>.<p>உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில்</p>.<p>நேற்று பேசத் தொடங்கிய</p>.<p>குழந்தை முதல் எல்லோரும்...</p>.<p>'வாட்ச்மேன்...' எனக்</p>.<p>கத்திக் கூப்பாடு இடுகிறீர்களே,</p>.<p>அவர் ஓடிவரும்போது பாருங்கள்.</p>.<p>சட்டையில்...</p>.<p>செந்தில்நாதன் என்ற வில்லை</p>.<p>வலியோடு ஒட்டிக்கிடக்கலாம்.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - ராம் வசந்த்</span></p>