<p><span style="color: rgb(255, 0, 0);">இப்போது வரும் காய்ச்சல்</span><br /> <br /> எனக்காகக் காய்ச்சிய<br /> சுடுதண்ணிதான் எல்லோருக்கும் குடிக்க<br /> <br /> நாளை மறுநாளுக்கும்<br /> விடுமுறை விண்ணப்பம்<br /> அப்பாவுக்கும் சேர்த்தே<br /> <br /> அம்மா வாசல் தெளித்த மீதிப் பங்கோடு <br /> அப்பாவின் ஒரு குவளை நீரும் <br /> வரவாகும் முற்றத்துத் துளசிக்கு<br /> <br /> அரை மணி நேரத்துக்கு<br /> ஒருமுறை உடல் சூடு<br /> ஆய்வுக்குட்படும்<br /> <br /> என் இரண்டு மடக்கு<br /> கஞ்சி குடிக்கும் படலத்துக்கு</p>.<p>அம்மாவுக்கு அடுப்படியில்<br /> பாடம் நடத்தப்படும்<br /> <br /> அந்த ஒரு வட்ட மாத்திரையை<br /> ஆறாக மாற்றும்<br /> அப்பாவின் முகம்<br /> தேர்ந்த சிற்பியை மிஞ்சியிருக்கும்<br /> <br /> காய்ச்சல் நீளும் இரவில் எப்போது கண்விழித்தாலும்<br /> காணக்கிடைக்கும் அப்பா<br /> சொல்லிக்கொண்டிருப்பார் அம்மாவிடம்<br /> `குலதெய்வத்துக்குப் பொங்கல்<br /> ஒண்ணு வைக்கணும்'<br /> <br /> காய்ச்சல் விட்டபோதும் <br /> அப்பா விட்டதில்லை வாசல் வரைகூட<br /> <br /> இப்போது வரும் காய்ச்சல்<br /> காய்ச்சலாக மட்டுமே <br /> வந்துபோகிறது.<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">- இந்து</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">எதிர்வினை</span><br /> <br /> பெருநகரச் சாலையில்<br /> அனிச்சையாய்ப் பார்த்த <br /> வண்ணத்துப்பூச்சி மீது <br /> மோதிச் சாய்த்துவிட்டது <br /> என் வாகனம்<br /> திரும்பிப் பார்க்க முடியவில்லை<br /> நேரமின்மையால்<br /> அதற்குப் <br /> பிறகான நாட்களில்<br /> வேறுவேறு <br /> வண்ணத்துப்பூச்சிகளைப்<br /> பார்க்கும் தருணங்களில்<br /> நேரத்தைத் தின்றுதீர்த்துவிடுகிறது<br /> அந்த<br /> ஒற்றை வண்ணத்துப்பூச்சி.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);">- ஆர்.எஸ்.நாதன்</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">ஒற்றைச் சிறகு</span></p>.<p>வீதியில் விழுந்துகிடந்த<br /> ஒற்றைச் சிறகை எடுத்துச்சென்று<br /> என் அறையின் அலமாரியில்<br /> பத்திரப்படுத்தினேன்<br /> கொஞ்சம் வானத்தை<br /> கொஞ்சம் மலைகளை<br /> கொஞ்சம் நதிகளை<br /> கொஞ்சம் மரங்களை<br /> கொஞ்சம் கடலை<br /> என் அறைக்கு அறிமுகப்படுத்தியது<br /> அச்சிறகு.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);">- சௌவி</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">நீ வசித்த ஊர்</span></p>.<p>நீ வசித்த ஊரைக் கடந்துகொண்டிருக்கிறேன்<br /> திறந்திருக்கும் குருடனின் விழிகளென <br /> வெறித்தபடியிருக்கிறது இக்கணம்.<br /> என்றோ நீ ஊற்றிய ஒரு குவளை நீரில் <br /> பருவங்கள் கடந்து தழைத்திருக்கும் சிறு தாவரம்<br /> இட வலமாய் இன்று துளிர்த்த துளிரிலைகளில்<br /> இரண்டு எனக்கானது.<br /> உனது விரல்கள் விசிறிய நெல்மணிகளைப்<br /> புசித்திருந்த இவ்வூர் கோயிலின் மாடப்புறா ஒன்று <br /> இன்று கூடடைகையில் கீழிறங்கிய சிறகின் ஒலி <br /> உனது பெயரின் மாத்திரை அளவிற்கேயானது <br /> கோடையின் கானல்நீரோடும் இவ்வூரின் படித்துறை <br /> உனது பாதத்தின் ரேகைகளைக் காற்றில் எழுதியபடியிருக்கிறது.<br /> இவ்வூர் எல்லையின் குப்பைமேடொன்றில்<br /> நீ உடுத்தி எறிந்துவிட்டுப் போன பழந்துணியொன்று<br /> காற்றில் படபடத்தபடி நீயற்ற ஊரின் <br /> நிர்வாணத்தை மறைத்தபடியிருக்கிறது. <br /> உனது நினைவென்னும் பிரமாண்டத்தை <br /> அடக்கிடவல்லதல்ல <br /> இச்சிற்றூரைக் கடந்துகொண்டிருக்கும் <br /> பேருந்தின் சின்னஞ்சிறு ஜன்னல் சட்டகம்.<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">- கே.ஸ்டாலின் </span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);">இப்போது வரும் காய்ச்சல்</span><br /> <br /> எனக்காகக் காய்ச்சிய<br /> சுடுதண்ணிதான் எல்லோருக்கும் குடிக்க<br /> <br /> நாளை மறுநாளுக்கும்<br /> விடுமுறை விண்ணப்பம்<br /> அப்பாவுக்கும் சேர்த்தே<br /> <br /> அம்மா வாசல் தெளித்த மீதிப் பங்கோடு <br /> அப்பாவின் ஒரு குவளை நீரும் <br /> வரவாகும் முற்றத்துத் துளசிக்கு<br /> <br /> அரை மணி நேரத்துக்கு<br /> ஒருமுறை உடல் சூடு<br /> ஆய்வுக்குட்படும்<br /> <br /> என் இரண்டு மடக்கு<br /> கஞ்சி குடிக்கும் படலத்துக்கு</p>.<p>அம்மாவுக்கு அடுப்படியில்<br /> பாடம் நடத்தப்படும்<br /> <br /> அந்த ஒரு வட்ட மாத்திரையை<br /> ஆறாக மாற்றும்<br /> அப்பாவின் முகம்<br /> தேர்ந்த சிற்பியை மிஞ்சியிருக்கும்<br /> <br /> காய்ச்சல் நீளும் இரவில் எப்போது கண்விழித்தாலும்<br /> காணக்கிடைக்கும் அப்பா<br /> சொல்லிக்கொண்டிருப்பார் அம்மாவிடம்<br /> `குலதெய்வத்துக்குப் பொங்கல்<br /> ஒண்ணு வைக்கணும்'<br /> <br /> காய்ச்சல் விட்டபோதும் <br /> அப்பா விட்டதில்லை வாசல் வரைகூட<br /> <br /> இப்போது வரும் காய்ச்சல்<br /> காய்ச்சலாக மட்டுமே <br /> வந்துபோகிறது.<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">- இந்து</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">எதிர்வினை</span><br /> <br /> பெருநகரச் சாலையில்<br /> அனிச்சையாய்ப் பார்த்த <br /> வண்ணத்துப்பூச்சி மீது <br /> மோதிச் சாய்த்துவிட்டது <br /> என் வாகனம்<br /> திரும்பிப் பார்க்க முடியவில்லை<br /> நேரமின்மையால்<br /> அதற்குப் <br /> பிறகான நாட்களில்<br /> வேறுவேறு <br /> வண்ணத்துப்பூச்சிகளைப்<br /> பார்க்கும் தருணங்களில்<br /> நேரத்தைத் தின்றுதீர்த்துவிடுகிறது<br /> அந்த<br /> ஒற்றை வண்ணத்துப்பூச்சி.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);">- ஆர்.எஸ்.நாதன்</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">ஒற்றைச் சிறகு</span></p>.<p>வீதியில் விழுந்துகிடந்த<br /> ஒற்றைச் சிறகை எடுத்துச்சென்று<br /> என் அறையின் அலமாரியில்<br /> பத்திரப்படுத்தினேன்<br /> கொஞ்சம் வானத்தை<br /> கொஞ்சம் மலைகளை<br /> கொஞ்சம் நதிகளை<br /> கொஞ்சம் மரங்களை<br /> கொஞ்சம் கடலை<br /> என் அறைக்கு அறிமுகப்படுத்தியது<br /> அச்சிறகு.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);">- சௌவி</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">நீ வசித்த ஊர்</span></p>.<p>நீ வசித்த ஊரைக் கடந்துகொண்டிருக்கிறேன்<br /> திறந்திருக்கும் குருடனின் விழிகளென <br /> வெறித்தபடியிருக்கிறது இக்கணம்.<br /> என்றோ நீ ஊற்றிய ஒரு குவளை நீரில் <br /> பருவங்கள் கடந்து தழைத்திருக்கும் சிறு தாவரம்<br /> இட வலமாய் இன்று துளிர்த்த துளிரிலைகளில்<br /> இரண்டு எனக்கானது.<br /> உனது விரல்கள் விசிறிய நெல்மணிகளைப்<br /> புசித்திருந்த இவ்வூர் கோயிலின் மாடப்புறா ஒன்று <br /> இன்று கூடடைகையில் கீழிறங்கிய சிறகின் ஒலி <br /> உனது பெயரின் மாத்திரை அளவிற்கேயானது <br /> கோடையின் கானல்நீரோடும் இவ்வூரின் படித்துறை <br /> உனது பாதத்தின் ரேகைகளைக் காற்றில் எழுதியபடியிருக்கிறது.<br /> இவ்வூர் எல்லையின் குப்பைமேடொன்றில்<br /> நீ உடுத்தி எறிந்துவிட்டுப் போன பழந்துணியொன்று<br /> காற்றில் படபடத்தபடி நீயற்ற ஊரின் <br /> நிர்வாணத்தை மறைத்தபடியிருக்கிறது. <br /> உனது நினைவென்னும் பிரமாண்டத்தை <br /> அடக்கிடவல்லதல்ல <br /> இச்சிற்றூரைக் கடந்துகொண்டிருக்கும் <br /> பேருந்தின் சின்னஞ்சிறு ஜன்னல் சட்டகம்.<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">- கே.ஸ்டாலின் </span></p>