<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஆ</strong></span>ண்பிள்ளைகள் <br /> அழக் கூடாதென்பவன் எவனோ <br /> சாரங்கி வில்லுக்கு முன் நின்று <br /> அவன் தன் மார்பை விரிக்கட்டும். <br /> <br /> நீங்கள் வழக்கம்போலவே <br /> உயர்சுரக் கமகங்களுக்கு<br /> ஜீவனை ஒப்புக்கொடுங்கள் பாபு. <br /> <br /> உப்புக்கடலை ரப்பைகளுக்குள் <br /> ஒளித்துவைப்போம் பாபு<br /> பொத்தல் விழும் கனவுகளில்<br /> அடவுகளைக் குழைத்துப் பூசி <br /> தூக்கத்தைத் துண்டு துண்டாய் நறுக்கி <br /> புட்டிகளிலிட்டு வைப்போம். <br /> <br /> வெகுசீக்கிரம் நாமிந்த <br /> பெருமூச்சிலிருந்து <br /> வெளியேற வேண்டும். <br /> <br /> ‘சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்’<br /> என்பது ஒன்றும் வேதவசனம் அல்லவே பாபு<br /> <br /> தேவி நமக்கருளிய இரண்டு கோப்பைகளையும் <br /> ஒரே ‘கல்ப்’பில் அடித்துவிட நம்மாலாகாதா <br /> விகடகவிகளில்லையா நாம்.<br /> <br /> பொறுத்திருங்கள் பாபு <br /> சலங்கைப் பட்டையினைக் கட்டி நாம் நிமிர்ந்ததும் <br /> புழுதியெழ நடமிடுவாள் செங்காளி. <br /> ரெண்டே நிமிடம் பொறுத்திருங்கள் <br /> தீக்காய்கிறது என் பறை.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஆ</strong></span>ண்பிள்ளைகள் <br /> அழக் கூடாதென்பவன் எவனோ <br /> சாரங்கி வில்லுக்கு முன் நின்று <br /> அவன் தன் மார்பை விரிக்கட்டும். <br /> <br /> நீங்கள் வழக்கம்போலவே <br /> உயர்சுரக் கமகங்களுக்கு<br /> ஜீவனை ஒப்புக்கொடுங்கள் பாபு. <br /> <br /> உப்புக்கடலை ரப்பைகளுக்குள் <br /> ஒளித்துவைப்போம் பாபு<br /> பொத்தல் விழும் கனவுகளில்<br /> அடவுகளைக் குழைத்துப் பூசி <br /> தூக்கத்தைத் துண்டு துண்டாய் நறுக்கி <br /> புட்டிகளிலிட்டு வைப்போம். <br /> <br /> வெகுசீக்கிரம் நாமிந்த <br /> பெருமூச்சிலிருந்து <br /> வெளியேற வேண்டும். <br /> <br /> ‘சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்’<br /> என்பது ஒன்றும் வேதவசனம் அல்லவே பாபு<br /> <br /> தேவி நமக்கருளிய இரண்டு கோப்பைகளையும் <br /> ஒரே ‘கல்ப்’பில் அடித்துவிட நம்மாலாகாதா <br /> விகடகவிகளில்லையா நாம்.<br /> <br /> பொறுத்திருங்கள் பாபு <br /> சலங்கைப் பட்டையினைக் கட்டி நாம் நிமிர்ந்ததும் <br /> புழுதியெழ நடமிடுவாள் செங்காளி. <br /> ரெண்டே நிமிடம் பொறுத்திருங்கள் <br /> தீக்காய்கிறது என் பறை.</p>