<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மு</strong></span>தலாளி அழைத்துவிட்டார் இரண்டு, நான்கு முறை<br /> <br /> அண்டங்காக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. கூடவே<br /> <br /> நான்கைந்து மைனாக்கள் முன்னே சென்று<br /> <br /> துரத்திக்கொண்டிருந்தன. முதலாளி திரும்ப அழைக்கிறார்<br /> <br /> மைனாக்கள் அண்டங்காக்கையைத் துரத்த முயல்கின்றன,<br /> <br /> தோற்கின்றன, நான் முதலாளியின் அழைப்பை ஏற்கவில்லை<br /> <br /> ஓரிரு குச்சிகள் போதும், கூடுகட்ட, முதலாளி திரும்பவும்,<br /> <br /> நான் மைனாக்களைப் பார்க்கிறேன். <br /> <br /> அவை அண்டங்காக்கையைப் பார்த்துச் சத்தமிடுகின்றன. முதலாளி மீண்டும்<br /> <br /> அழைப்பதை ஏற்கவில்லை. இன்று புதிய வியாபாரக் கூட்டம்.<br /> <br /> மைனாக்கள் கூட்டமாகத் திரும்பவும் பார்க்கின்றன<br /> <br /> அண்டங்காக்கை தனியாகத் திரும்பவும் பார்க்கிறது<br /> <br /> இன்று நான் செல்லவில்லை எனில் முதலாளி என்னை<br /> <br /> வேலையிலிருந்து தூக்கிவிடுவார். பரவாயில்லை... <br /> <br /> மைனாக்களின் கூடு கலையக்கூடாது.<br /> <br /> அண்டங்காக்கைக்கு என்று ஒரு கூடு தேவை.<br /> <br /> முதலாளி திரும்பத் திரும்ப அழைக்கிறார். மைனாக்கள்<br /> <br /> தம் கழுத்தைத் திருப்பி என்னைப் பார்க்கின்றன.<br /> <br /> அண்டங்காக்கையும் வெகுநேரமாக என்னையே பார்த்துக்கொண்டு<br /> <br /> இருப்பதைச் சொல்லவே தேவையில்லை. ஒரு வேலை <br /> <br /> இல்லாமல் போகப்போகிறது. சுள்ளிகளை <br /> <br /> இன்று முழுவதும் சந்தோஷமாகப் பொறுக்க வேண்டும்<br /> <br /> அண்டங்காக்கைக்கோ மைனாக்களுக்கோ எவற்றிற்கோ<br /> <br /> தேவை எனில் எடுத்துச் செல்லட்டும். முதலாளி<br /> <br /> திரும்பத் திரும்ப அழைக்கிறார். எடுத்துப் பேசுகிறேன்.<br /> <br /> “ஐயா, இன்று முழுவதும் சுள்ளிகளைப் பொறுக்கவேண்டும்<br /> <br /> வர இயலாது. மன்னிக்கவும்”<br /> <br /> முதலாளி வைத்துவிட்டார்.<br /> <br /> முதல் சுள்ளி கண்ணில் பட்டுவிட்டது.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மு</strong></span>தலாளி அழைத்துவிட்டார் இரண்டு, நான்கு முறை<br /> <br /> அண்டங்காக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. கூடவே<br /> <br /> நான்கைந்து மைனாக்கள் முன்னே சென்று<br /> <br /> துரத்திக்கொண்டிருந்தன. முதலாளி திரும்ப அழைக்கிறார்<br /> <br /> மைனாக்கள் அண்டங்காக்கையைத் துரத்த முயல்கின்றன,<br /> <br /> தோற்கின்றன, நான் முதலாளியின் அழைப்பை ஏற்கவில்லை<br /> <br /> ஓரிரு குச்சிகள் போதும், கூடுகட்ட, முதலாளி திரும்பவும்,<br /> <br /> நான் மைனாக்களைப் பார்க்கிறேன். <br /> <br /> அவை அண்டங்காக்கையைப் பார்த்துச் சத்தமிடுகின்றன. முதலாளி மீண்டும்<br /> <br /> அழைப்பதை ஏற்கவில்லை. இன்று புதிய வியாபாரக் கூட்டம்.<br /> <br /> மைனாக்கள் கூட்டமாகத் திரும்பவும் பார்க்கின்றன<br /> <br /> அண்டங்காக்கை தனியாகத் திரும்பவும் பார்க்கிறது<br /> <br /> இன்று நான் செல்லவில்லை எனில் முதலாளி என்னை<br /> <br /> வேலையிலிருந்து தூக்கிவிடுவார். பரவாயில்லை... <br /> <br /> மைனாக்களின் கூடு கலையக்கூடாது.<br /> <br /> அண்டங்காக்கைக்கு என்று ஒரு கூடு தேவை.<br /> <br /> முதலாளி திரும்பத் திரும்ப அழைக்கிறார். மைனாக்கள்<br /> <br /> தம் கழுத்தைத் திருப்பி என்னைப் பார்க்கின்றன.<br /> <br /> அண்டங்காக்கையும் வெகுநேரமாக என்னையே பார்த்துக்கொண்டு<br /> <br /> இருப்பதைச் சொல்லவே தேவையில்லை. ஒரு வேலை <br /> <br /> இல்லாமல் போகப்போகிறது. சுள்ளிகளை <br /> <br /> இன்று முழுவதும் சந்தோஷமாகப் பொறுக்க வேண்டும்<br /> <br /> அண்டங்காக்கைக்கோ மைனாக்களுக்கோ எவற்றிற்கோ<br /> <br /> தேவை எனில் எடுத்துச் செல்லட்டும். முதலாளி<br /> <br /> திரும்பத் திரும்ப அழைக்கிறார். எடுத்துப் பேசுகிறேன்.<br /> <br /> “ஐயா, இன்று முழுவதும் சுள்ளிகளைப் பொறுக்கவேண்டும்<br /> <br /> வர இயலாது. மன்னிக்கவும்”<br /> <br /> முதலாளி வைத்துவிட்டார்.<br /> <br /> முதல் சுள்ளி கண்ணில் பட்டுவிட்டது.</p>