<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>64</strong></span> எருமைகளால் ஆனது எங்கள் தொழுவம்<br /> பால் மாடுகளாக சினைமாடுகளாக கன்றுகளாக...<br /> எங்கள் தொழுவத்து மாடுகள் இறங்கினால்<br /> தாமிரபரணி திணறிவிடும் <br /> முதிர்ந்து சாகும் மாடுகளை அப்பா<br /> பனைமரங்களுக்குத் துணையாகப் புதைப்பார்<br /> எங்கள் தொழுவச் சாணத்தில்தான்<br /> ஊர் வயல்களில் கதிர்கள் நிமிர்ந்து நின்றன<br /> எங்கள் குடிசைகளில்<br /> சீம்பாலும் கடம்பும் மணந்தவண்ணமிருக்கும்<br /> மறைந்த எருமைகளின் கொம்பினுள் <br /> அறுவடைத் தானியங்களை நிரப்பி வணங்குவோம்<br /> ஆறு அகண்ட புல்வெளியைக் கொண்டிருந்தது அன்று<br /> தாமரைகளில் ரத்தம் செழித்திருந்தது<br /> எங்கள் உறக்கங்களில் சன்னமாக <br /> மின்மினிகள் இசைத்தன<br /> நாய்களும் பூனைகளும் ஆழ்ந்து உறங்கின<br /> என்ன நடந்ததென்று எங்களுக்கு விளங்கவில்லை<br /> இன்னும்கூட<br /> அலைவரிசை மாறி மாறி புரியாதவாறு ஒலித்த<br /> வானொலிச் செய்திகள் அச்சமடையச் செய்தன<br /> சாலை சமைக்கும் ராட்சத ஊர்தி <br /> ஊருக்குத் தீக்குறியானது <br /> நில அளவைக் கருவிகளோடு சிலர் தென்பட்டனர்<br /> கண்முன்னே தொழுவம் காலியாகிக்கொண்டிருப்பதை<br /> கூத்துப் பார்ப்பதுபோல <br /> பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா <br /> பின்னொரு நாள்<br /> கொடுங்காற்றில் தொழுவம் சாய்ந்தது<br /> ராத்திரி அகவல் கொடூரமாக இருந்தது <br /> பனங்காட்டு மயிலே...<br /> அப்பா முளைக்குச்சியைப் பிடுங்கி <br /> தன் மார்பில் இறக்கிவிட்டார்<br /> அம்மாக்கள் எரியும் லாந்தர்களை <br /> தலைமீது உடைத்துக்கொண்டார்கள்<br /> தாம்புக்கயிற்றை எடுத்துக்கொண்டு<br /> அக்காவும் அண்ணனும் எங்கோ ஓடினார்கள்<br /> வெட்டி வெட்டி இழுத்துக்கொண்டிருந்த<br /> எங்கள் குடியின் தொண்டைக்குழிக்கு<br /> கொஞ்சம் பால் வாங்க <br /> பக்கத்து கிராமத்தை நோக்கி ஓடினேன் நான்.<br /> <br /> <br /> அப்பாவுக்கு மூன்று மனைவிகள்<br /> கால்களை பெரியம்மாவும்<br /> வயிற்றிலிருந்து கழுத்துவரை சித்தியும்<br /> தலையை அம்மாவுமாக என்னைப் பெற்றெடுத்தார்கள்<br /> பிறகு...<br /> அருகம்புற்களால் கருவேல முள்கொண்டு <br /> அப்பா தைத்தார்<br /> இந்தக் கதை கேட்கவே<br /> மடி நிறைய சம்பா அவலும் நாட்டுப்பழமுமாய்<br /> உழுது களைத்தவர்கள் முற்றத்தில் வந்து கூடுவார்கள். <br /> <br /> நான் பசியால் அழுதேன்<br /> மேற்குத்தொடர்ச்சி மலைகளும் கேட்கும்படியாய்<br /> வீறிட்டுக் கதறினேன்<br /> அம்மாக்கள் அங்கும் இங்குமாய் ஓடினார்கள்<br /> வயிறாற்ற இயலாத தங்கள் மார்புகளை<br /> கைகளில் ஏந்திக் கரைந்தபடி</p>.<p>தானியங்கள் முளைக்கக் காத்திருந்தார்கள்<br /> தானியங்கள் மாரி இறங்கக் காத்திருந்தன<br /> மாரி பருவத்திற்காகக் காத்திருந்தது<br /> பருவமோ<br /> நைந்துபோன சோளக்கொல்லைப் பொம்மையின் <br /> வாய் நிறையச் சிரித்துக்கொண்டிருந்தது...<br /> <br /> அவர்கள் எடுத்துக்கொண்டோடியது<br /> ஆயிரம் வெள்ளாமைக்காடுகளைச் சுற்றிவந்த<br /> புணையல் மாடுகளின் தாம்புக்கயிறு<br /> அதைத் தேடி அலைந்தேன்<br /> நெடுந்தூரம்<br /> கருங்கிடாரிகளின் குளம்படிகளை<br /> ஆங்காங்கே கண்டேன்<br /> வழியில்<br /> சுருக்குத் தழும்புகொண்ட கழுத்தோடு<br /> ஒரு அக்காவும் அண்ணனும்<br /> நீலத்தும்பிகளின் பின்னே<br /> துள்ளிக்கொண்டு ஓடினார்கள் காற்றில்.<br /> <br /> <br /> சில நாட்களாகவே என் கனவில் <br /> தொலைந்துபோன எருமைகள் திரும்பி வருகின்றன<br /> பூவரசங்கொழைகளோடு அம்மாக்கள் உடன்வர<br /> குளித்துக் கரையேறும்<br /> அந்தச் சினைமாடுகளின் சுமைகூடிய நளின நடை<br /> இந்நிலத்திற்கு நற்குறி<br /> அப்பாவின் தேகம்போல மேகம் கருக்கிறது<br /> இனி நிலமெங்கும் அன்னம் பெருகும்.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>64</strong></span> எருமைகளால் ஆனது எங்கள் தொழுவம்<br /> பால் மாடுகளாக சினைமாடுகளாக கன்றுகளாக...<br /> எங்கள் தொழுவத்து மாடுகள் இறங்கினால்<br /> தாமிரபரணி திணறிவிடும் <br /> முதிர்ந்து சாகும் மாடுகளை அப்பா<br /> பனைமரங்களுக்குத் துணையாகப் புதைப்பார்<br /> எங்கள் தொழுவச் சாணத்தில்தான்<br /> ஊர் வயல்களில் கதிர்கள் நிமிர்ந்து நின்றன<br /> எங்கள் குடிசைகளில்<br /> சீம்பாலும் கடம்பும் மணந்தவண்ணமிருக்கும்<br /> மறைந்த எருமைகளின் கொம்பினுள் <br /> அறுவடைத் தானியங்களை நிரப்பி வணங்குவோம்<br /> ஆறு அகண்ட புல்வெளியைக் கொண்டிருந்தது அன்று<br /> தாமரைகளில் ரத்தம் செழித்திருந்தது<br /> எங்கள் உறக்கங்களில் சன்னமாக <br /> மின்மினிகள் இசைத்தன<br /> நாய்களும் பூனைகளும் ஆழ்ந்து உறங்கின<br /> என்ன நடந்ததென்று எங்களுக்கு விளங்கவில்லை<br /> இன்னும்கூட<br /> அலைவரிசை மாறி மாறி புரியாதவாறு ஒலித்த<br /> வானொலிச் செய்திகள் அச்சமடையச் செய்தன<br /> சாலை சமைக்கும் ராட்சத ஊர்தி <br /> ஊருக்குத் தீக்குறியானது <br /> நில அளவைக் கருவிகளோடு சிலர் தென்பட்டனர்<br /> கண்முன்னே தொழுவம் காலியாகிக்கொண்டிருப்பதை<br /> கூத்துப் பார்ப்பதுபோல <br /> பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா <br /> பின்னொரு நாள்<br /> கொடுங்காற்றில் தொழுவம் சாய்ந்தது<br /> ராத்திரி அகவல் கொடூரமாக இருந்தது <br /> பனங்காட்டு மயிலே...<br /> அப்பா முளைக்குச்சியைப் பிடுங்கி <br /> தன் மார்பில் இறக்கிவிட்டார்<br /> அம்மாக்கள் எரியும் லாந்தர்களை <br /> தலைமீது உடைத்துக்கொண்டார்கள்<br /> தாம்புக்கயிற்றை எடுத்துக்கொண்டு<br /> அக்காவும் அண்ணனும் எங்கோ ஓடினார்கள்<br /> வெட்டி வெட்டி இழுத்துக்கொண்டிருந்த<br /> எங்கள் குடியின் தொண்டைக்குழிக்கு<br /> கொஞ்சம் பால் வாங்க <br /> பக்கத்து கிராமத்தை நோக்கி ஓடினேன் நான்.<br /> <br /> <br /> அப்பாவுக்கு மூன்று மனைவிகள்<br /> கால்களை பெரியம்மாவும்<br /> வயிற்றிலிருந்து கழுத்துவரை சித்தியும்<br /> தலையை அம்மாவுமாக என்னைப் பெற்றெடுத்தார்கள்<br /> பிறகு...<br /> அருகம்புற்களால் கருவேல முள்கொண்டு <br /> அப்பா தைத்தார்<br /> இந்தக் கதை கேட்கவே<br /> மடி நிறைய சம்பா அவலும் நாட்டுப்பழமுமாய்<br /> உழுது களைத்தவர்கள் முற்றத்தில் வந்து கூடுவார்கள். <br /> <br /> நான் பசியால் அழுதேன்<br /> மேற்குத்தொடர்ச்சி மலைகளும் கேட்கும்படியாய்<br /> வீறிட்டுக் கதறினேன்<br /> அம்மாக்கள் அங்கும் இங்குமாய் ஓடினார்கள்<br /> வயிறாற்ற இயலாத தங்கள் மார்புகளை<br /> கைகளில் ஏந்திக் கரைந்தபடி</p>.<p>தானியங்கள் முளைக்கக் காத்திருந்தார்கள்<br /> தானியங்கள் மாரி இறங்கக் காத்திருந்தன<br /> மாரி பருவத்திற்காகக் காத்திருந்தது<br /> பருவமோ<br /> நைந்துபோன சோளக்கொல்லைப் பொம்மையின் <br /> வாய் நிறையச் சிரித்துக்கொண்டிருந்தது...<br /> <br /> அவர்கள் எடுத்துக்கொண்டோடியது<br /> ஆயிரம் வெள்ளாமைக்காடுகளைச் சுற்றிவந்த<br /> புணையல் மாடுகளின் தாம்புக்கயிறு<br /> அதைத் தேடி அலைந்தேன்<br /> நெடுந்தூரம்<br /> கருங்கிடாரிகளின் குளம்படிகளை<br /> ஆங்காங்கே கண்டேன்<br /> வழியில்<br /> சுருக்குத் தழும்புகொண்ட கழுத்தோடு<br /> ஒரு அக்காவும் அண்ணனும்<br /> நீலத்தும்பிகளின் பின்னே<br /> துள்ளிக்கொண்டு ஓடினார்கள் காற்றில்.<br /> <br /> <br /> சில நாட்களாகவே என் கனவில் <br /> தொலைந்துபோன எருமைகள் திரும்பி வருகின்றன<br /> பூவரசங்கொழைகளோடு அம்மாக்கள் உடன்வர<br /> குளித்துக் கரையேறும்<br /> அந்தச் சினைமாடுகளின் சுமைகூடிய நளின நடை<br /> இந்நிலத்திற்கு நற்குறி<br /> அப்பாவின் தேகம்போல மேகம் கருக்கிறது<br /> இனி நிலமெங்கும் அன்னம் பெருகும்.</p>