<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>ம்மாக்கள் வைத்த குழம்பையே வைத்துக்கொண்டிருந்தபோது<br /> அக்காக்கள் சிக்குக் கோலங்களையே<br /> போட்டுக்கொண்டிருந்தபோது<br /> <br /> அண்ணிகள் வலதுகாலை எடுத்து<br /> வாயிற்படிகளில் வைத்தார்கள்<br /> <br /> அடுப்பங்கரைகளில் புதிய மணம் தவழ்ந்தது<br /> தெருக்களில் புதிய வண்ணங்கள் மிளிர்ந்தன<br /> <br /> கதவே இல்லாத மறைப்புகளில்<br /> அவர்கள் குளித்தபோது<br /> <br /> கொரகொரவென்று பாடிய திருச்சி<br /> ஸ்டேஷனை மூடினோம்<br /> வீட்டுக்கு ஜானகி வந்தாளென சந்தோஷப்பட்டோம்<br /> <br /> கிராமத்து அழுக்கை அகற்ற<br /> செங்கல்லைப்போல கனக்கும்<br /> லைஃபாயே கதியெனக் கிடந்தோம்<br /> <br /> அண்ணிகளிடம் மணந்த லக்ஸையும் ரெக்ஸோனாவையும் சுவாசித்தபோதுதான்<br /> <br /> காசு கொடுத்தால் ஸ்ரீதேவி சோப்பையும் கடைக்காரன் கொடுப்பானென்கிற<br /> உண்மை தெரிந்தது<br /> <br /> மோட்டாரின் சீரிய நீரோட்டத்தில்<br /> ஷாம்பு நுரை பொங்கும் கேசங்களின்<br /> எழிலைப் பார்த்து ஊர் வாய்பிளந்தது<br /> <br /> அண்ணிகள் அக்கா தங்கைகளையும்<br /> நவீனப்படுத்தினார்கள்<br /> <br /> பிரேசியர் என்கிற வஸ்து வாசல்<br /> கொடிக் கயிற்றில் தொங்கியபோது<br /> ஆளுக்கொன்றை யூகித்துக்கொண்டோம்<br /> <br /> எங்கள் பூனை மீசை அண்ணன்கள்<br /> மந்திரித்துவிட்டதுபோல் கோபமழிந்தவர்களானார்கள்<br /> <br /> அவர்களது ஒட்டிய கன்னங்களில்<br /> தேஜஸ் கூடியது<br /> <br /> டவுனுக்குபோய் கூலிங்கிளாஸ் போட்டு<br /> ஸ்டீல்சேரில் அண்ணியோடு<br /> போட்டோ பிடித்து வாசலில் மாட்டினார்கள்<br /> <br /> பக்கத்தில் நமது போட்டோவை எப்போது மாட்டுவோமென <br /> ஏங்கித்தான் போனோம்<br /> <br /> அம்மாவோடு கோபித்து<br /> அய்யனார் கோயிலில் கிடந்தவர்களைத் தேடி<br /> <br /> தட்டு நிறைய சுடுசோற்றைக் கொட்டி<br /> வஞ்சனையில்லாமல் உண்ணும் வாய்பார்த்து மகிழ்ந்தவர்கள் அண்ணிகள்<br /> <br /> விதைநெல்லள்ளிக் கொடுத்தார்கள்<br /> விற்றுவந்த பணத்தைப் பாதுகாத்தார்கள்<br /> கடிதங்களைப் படித்துக்காட்டினார்கள்<br /> <br /> சிந்துபாத் கதைகளை<br /> தங்கைகளுக்குச் சொன்னார்கள்<br /> அம்மாவுக்கு பேனெடுத்துக் குத்தினார்கள்<br /> <br /> வீட்டை சந்தோஷம் உறையும் கோயிலாக்கியவர்கள் அண்ணிகள்<br /> <br /> இன்று கிராமத்துக்குப் போகும்போது<br /> அண்ணி உறவு எங்கே<br /> தொலைந்ததென்றே தெரியவில்லை<br /> <br /> ஐம்பது பவுன் நகை அகலத்திரை டி.வி<br /> வாஷிங்மெஷினோடு<br /> வாசலில் நிற்கும் 150 சிசி<br /> <br /> எதிர்பார்ப்பான பேராசையில்<br /> அண்ணன்களைக் கூட்டிக்கொண்டு<br /> அண்ணிகள் தனிவீடு போனார்கள்<br /> <br /> சீர்வரிசைத் தகராறுகள் பெரிதாகி<br /> ஈகோ உரசல்களின் தீயில்<br /> பொசுங்கியது பாசம்<br /> <br /> அனைத்து மகளிர் நிலையங்களில் குடும்பத்தோடு கைகட்டி<br /> உறவுகளை<br /> வாழும் காலம் நிற்கவைத்தபோது<br /> <br /> அண்ணி ரோல்<br /> சீரியல்களின் ரேட்டிங்கை எகிறவைக்கும்<br /> வில்லியாய்ப் பரிணமித்தது!</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>ம்மாக்கள் வைத்த குழம்பையே வைத்துக்கொண்டிருந்தபோது<br /> அக்காக்கள் சிக்குக் கோலங்களையே<br /> போட்டுக்கொண்டிருந்தபோது<br /> <br /> அண்ணிகள் வலதுகாலை எடுத்து<br /> வாயிற்படிகளில் வைத்தார்கள்<br /> <br /> அடுப்பங்கரைகளில் புதிய மணம் தவழ்ந்தது<br /> தெருக்களில் புதிய வண்ணங்கள் மிளிர்ந்தன<br /> <br /> கதவே இல்லாத மறைப்புகளில்<br /> அவர்கள் குளித்தபோது<br /> <br /> கொரகொரவென்று பாடிய திருச்சி<br /> ஸ்டேஷனை மூடினோம்<br /> வீட்டுக்கு ஜானகி வந்தாளென சந்தோஷப்பட்டோம்<br /> <br /> கிராமத்து அழுக்கை அகற்ற<br /> செங்கல்லைப்போல கனக்கும்<br /> லைஃபாயே கதியெனக் கிடந்தோம்<br /> <br /> அண்ணிகளிடம் மணந்த லக்ஸையும் ரெக்ஸோனாவையும் சுவாசித்தபோதுதான்<br /> <br /> காசு கொடுத்தால் ஸ்ரீதேவி சோப்பையும் கடைக்காரன் கொடுப்பானென்கிற<br /> உண்மை தெரிந்தது<br /> <br /> மோட்டாரின் சீரிய நீரோட்டத்தில்<br /> ஷாம்பு நுரை பொங்கும் கேசங்களின்<br /> எழிலைப் பார்த்து ஊர் வாய்பிளந்தது<br /> <br /> அண்ணிகள் அக்கா தங்கைகளையும்<br /> நவீனப்படுத்தினார்கள்<br /> <br /> பிரேசியர் என்கிற வஸ்து வாசல்<br /> கொடிக் கயிற்றில் தொங்கியபோது<br /> ஆளுக்கொன்றை யூகித்துக்கொண்டோம்<br /> <br /> எங்கள் பூனை மீசை அண்ணன்கள்<br /> மந்திரித்துவிட்டதுபோல் கோபமழிந்தவர்களானார்கள்<br /> <br /> அவர்களது ஒட்டிய கன்னங்களில்<br /> தேஜஸ் கூடியது<br /> <br /> டவுனுக்குபோய் கூலிங்கிளாஸ் போட்டு<br /> ஸ்டீல்சேரில் அண்ணியோடு<br /> போட்டோ பிடித்து வாசலில் மாட்டினார்கள்<br /> <br /> பக்கத்தில் நமது போட்டோவை எப்போது மாட்டுவோமென <br /> ஏங்கித்தான் போனோம்<br /> <br /> அம்மாவோடு கோபித்து<br /> அய்யனார் கோயிலில் கிடந்தவர்களைத் தேடி<br /> <br /> தட்டு நிறைய சுடுசோற்றைக் கொட்டி<br /> வஞ்சனையில்லாமல் உண்ணும் வாய்பார்த்து மகிழ்ந்தவர்கள் அண்ணிகள்<br /> <br /> விதைநெல்லள்ளிக் கொடுத்தார்கள்<br /> விற்றுவந்த பணத்தைப் பாதுகாத்தார்கள்<br /> கடிதங்களைப் படித்துக்காட்டினார்கள்<br /> <br /> சிந்துபாத் கதைகளை<br /> தங்கைகளுக்குச் சொன்னார்கள்<br /> அம்மாவுக்கு பேனெடுத்துக் குத்தினார்கள்<br /> <br /> வீட்டை சந்தோஷம் உறையும் கோயிலாக்கியவர்கள் அண்ணிகள்<br /> <br /> இன்று கிராமத்துக்குப் போகும்போது<br /> அண்ணி உறவு எங்கே<br /> தொலைந்ததென்றே தெரியவில்லை<br /> <br /> ஐம்பது பவுன் நகை அகலத்திரை டி.வி<br /> வாஷிங்மெஷினோடு<br /> வாசலில் நிற்கும் 150 சிசி<br /> <br /> எதிர்பார்ப்பான பேராசையில்<br /> அண்ணன்களைக் கூட்டிக்கொண்டு<br /> அண்ணிகள் தனிவீடு போனார்கள்<br /> <br /> சீர்வரிசைத் தகராறுகள் பெரிதாகி<br /> ஈகோ உரசல்களின் தீயில்<br /> பொசுங்கியது பாசம்<br /> <br /> அனைத்து மகளிர் நிலையங்களில் குடும்பத்தோடு கைகட்டி<br /> உறவுகளை<br /> வாழும் காலம் நிற்கவைத்தபோது<br /> <br /> அண்ணி ரோல்<br /> சீரியல்களின் ரேட்டிங்கை எகிறவைக்கும்<br /> வில்லியாய்ப் பரிணமித்தது!</p>