<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>லகு பிளக்கும் குஞ்சுப் பறவையாய்<br /> நான் விற்றுவிட்ட நிலம்<br /> உழு கலப்பைக்கு மண் திறக்கும்<br /> <br /> ஒரு செம்மண் ஆறாய்<br /> உள்ளங்கால்கள் குறுகுறுக்க ஓடும்<br /> <br /> என் மூதாதையரின் செங்கண்களால்<br /> மண்திறந்து என்னை எரிக்கும்<br /> <br /> என் தொட்டிலாடிய வேம்பின்<br /> கசப்புக் காற்றாகி நெஞ்சடைக்கவைக்கும்<br /> <br /> எனது தாலாட்டுப் பாடல்களை<br /> மீண்டும் மீண்டும் பாடும்<br /> <br /> ஒரு பறக்கும் கம்பளமாய் உருமாறி<br /> என்னைப் பின்தொடரும்<br /> <br /> அறிவுள்ளவனுக்கே<br /> ஆத்தங்கரைப் புஞ்சை என்று<br /> பெற்றோரின் குரலில் எச்சரிக்கும்<br /> <br /> எங்கோ செல்லும் மேகங்களை<br /> தன்னில் ஈர்த்து முறையிடும்<br /> <br /> ஒரு தட்டானாய்ப் பிறப்பெடுத்து<br /> தன்னோடு நின்றுகொள்ளச் சொல்லும்<br /> <br /> ஒரு பறவைபோல் அங்கேயே<br /> கூடு கட்டி வாழக் கேட்கும்<br /> <br /> ஆயினும் விற்றுவிட்டேன்<br /> ஐம்பொன் விளைந்த நிலத்தை<br /> <br /> விற்ற கவலையின் உச்சிப்பொட்டில்<br /> அன்று ஆயிரம் ஆயிரம் பிச்சிப்பூக்கள்<br /> <br /> இயந்திரங்கள் வந்து இறங்கவில்லை<br /> கட்டடம் ஏதும் எழும்பவில்லை<br /> <br /> என் தகப்பனின் கைகள்<br /> விதை வீசாவிட்டாலும்<br /> யாரோ ஒருவனின் கைகள் <br /> அங்கே விதைத்துக்கொண்டுள்ளன<br /> <br /> அம்மட்டிலும்<br /> எல்லாப் பயிர்களும் விளைந்து<br /> பொலிக பொலிக என் பூமியே.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>லகு பிளக்கும் குஞ்சுப் பறவையாய்<br /> நான் விற்றுவிட்ட நிலம்<br /> உழு கலப்பைக்கு மண் திறக்கும்<br /> <br /> ஒரு செம்மண் ஆறாய்<br /> உள்ளங்கால்கள் குறுகுறுக்க ஓடும்<br /> <br /> என் மூதாதையரின் செங்கண்களால்<br /> மண்திறந்து என்னை எரிக்கும்<br /> <br /> என் தொட்டிலாடிய வேம்பின்<br /> கசப்புக் காற்றாகி நெஞ்சடைக்கவைக்கும்<br /> <br /> எனது தாலாட்டுப் பாடல்களை<br /> மீண்டும் மீண்டும் பாடும்<br /> <br /> ஒரு பறக்கும் கம்பளமாய் உருமாறி<br /> என்னைப் பின்தொடரும்<br /> <br /> அறிவுள்ளவனுக்கே<br /> ஆத்தங்கரைப் புஞ்சை என்று<br /> பெற்றோரின் குரலில் எச்சரிக்கும்<br /> <br /> எங்கோ செல்லும் மேகங்களை<br /> தன்னில் ஈர்த்து முறையிடும்<br /> <br /> ஒரு தட்டானாய்ப் பிறப்பெடுத்து<br /> தன்னோடு நின்றுகொள்ளச் சொல்லும்<br /> <br /> ஒரு பறவைபோல் அங்கேயே<br /> கூடு கட்டி வாழக் கேட்கும்<br /> <br /> ஆயினும் விற்றுவிட்டேன்<br /> ஐம்பொன் விளைந்த நிலத்தை<br /> <br /> விற்ற கவலையின் உச்சிப்பொட்டில்<br /> அன்று ஆயிரம் ஆயிரம் பிச்சிப்பூக்கள்<br /> <br /> இயந்திரங்கள் வந்து இறங்கவில்லை<br /> கட்டடம் ஏதும் எழும்பவில்லை<br /> <br /> என் தகப்பனின் கைகள்<br /> விதை வீசாவிட்டாலும்<br /> யாரோ ஒருவனின் கைகள் <br /> அங்கே விதைத்துக்கொண்டுள்ளன<br /> <br /> அம்மட்டிலும்<br /> எல்லாப் பயிர்களும் விளைந்து<br /> பொலிக பொலிக என் பூமியே.</p>