
காடு இருந்த இடத்தில்
அமைந்திருக்கும் முல்லை நகரில்
கழனி இருந்த இடத்தில்
வீடு கட்டிக்கொண்டவர்கள்
கால்வாய் இருந்த இடத்தில்
சாலை அமைப்பதை எதிர்த்து
வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
குளம் இருந்த இடத்தில்
அமைந்திருக்கும் உயர் மன்றத்தில்
நீதி இன்னும் நிலுவையில் இருக்கிறது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism