<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>நெற்றிக்கண் திறக்கிறார் நெல்லையப்பர்</strong></span><br /> <br /> வந்தது பண்டிகைக் காலம்<br /> வண்ண விளக்குகளால்<br /> மின்னின ரத வீதிகள்.<br /> <br /> காண வரும் பக்தர்களுக்காகக்<br /> காத்துக்கொண்டிருந்தார் நெல்லையப்பர்.<br /> <br /> கோயில் வாசல் வளைவு தாண்டிய<br /> கூட்டத்தில் பாதி வலப்பக்கம் திரும்பி <br /> வடக்கு ரத வீதியில் துணிகளை அள்ள,<br /> மீதியோ <br /> இடப்பக்கம் திரும்பி<br /> இருட்டுக்கடை முன்<br /> அல்வாவுக்காக.<br /> <br /> கோபமுற்றாலும்<br /> குளிர்ந்தார் சுவாமி, <br /> சற்றே கோயிலுக்குள் வந்த<br /> குடும்பம் கண்டு.<br /> <br /> ‘`எல்லா தியேட்டரும் ஃபுல்லாயிட்டுல்லா... அதான்<br /> நெல்லையப்பரைப் பார்க்க வந்துட்டம்”<br /> அலைபேசியில்<br /> அளவளாவிக்கொண்டே<br /> ஆரத்தி பார்த்த<br /> பக்திமானைக் கண்டு<br /> வெகுண்டெழுந்தார்<br /> வேணுவன ஸ்வாமி.<br /> <br /> நெற்றிக்கண் திறக்கப்போன<br /> நெல்லையப்பரின் கோபம் கண்டு<br /> காதில் சொல்கிறாள் காந்திமதியம்மை<br /> ‘`போகட்டும் விடுங்க. நம்ம பிள்ளைகள் தானே'' <br /> என்று.<br /> <br /> <strong>- ஆதர்ஷ்ஜி</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தேநீர்</strong></span><br /> <br /> டெல்டா மாவட்ட<br /> தேசிய நெடுஞ்சாலையில்<br /> நட்சத்திர உணவகம் எதிரே நீலச் சீருடையில்<br /> கொடியசைத்து<br /> தேநீராவது பருக அழைப்பவன்<br /> சோழப் பேரரசின்<br /> வழித்தோன்றலாகவும் இருக்கலாம்<br /> <br /> <br /> நெற்களத்தில் போரடித்த<br /> யானைகள் பற்றியோ<br /> தானியங்கள் சேமித்த<br /> குதிர்கள் குறித்தோ<br /> காகம் தட்டிவிட்ட<br /> கமண்டல வரலாற்றையோ<br /> கேட்டுத் தொலைக்காதீர்கள்...<br /> <br /> தேநீர் குறித்த<br /> சந்தேகம் இருந்தால் மட்டும் கேளுங்கள்!<br /> <strong><br /> - கார்த்தி</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>என் கேலரியில் ரகசியமாய்ச் சிரித்துக்கொண்டிருக்கிறாள்</strong></span><br /> <br /> மிக அரிதாகக் காணக்கிடைத்த<br /> உன் தோழிகளுடன் நீ இருக்கும்<br /> சில புகைப்படங்களில்<br /> ஒன்றில்,<br /> எல்லோரும் ஒருபோல சிரித்திருக்க<br /> நீ மட்டும் நெற்றியைச் சுருக்கி புன்னகைக்கிறாய்.<br /> மற்றொன்றில் எல்லோரும் சிரிக்கத் தயாராகையில்<br /> அவர்களுக்கு முன்<br /> கழுத்தை பக்கவாட்டில் சாய்த்து<br /> கண்களை மூடியபடி <br /> புன்னகைத்துக்கொண்டிருக்கிறாய்.<br /> கடைசியான புகைப்படத்தில்<br /> இம்முறை<br /> புன்னகைக்காமல்<br /> மிக இயல்பாக இருக்கிறாய்.<br /> வழக்கம்போல<br /> வலது ஓரத்தில் இருக்கும்<br /> மூன்று புள்ளிகளைத் தொட்டு<br /> ‘Save Photo’ செய்கிறேன்<br /> புன்னகைத்தபடியே.<br /> <br /> <strong>- பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி</strong><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>நெற்றிக்கண் திறக்கிறார் நெல்லையப்பர்</strong></span><br /> <br /> வந்தது பண்டிகைக் காலம்<br /> வண்ண விளக்குகளால்<br /> மின்னின ரத வீதிகள்.<br /> <br /> காண வரும் பக்தர்களுக்காகக்<br /> காத்துக்கொண்டிருந்தார் நெல்லையப்பர்.<br /> <br /> கோயில் வாசல் வளைவு தாண்டிய<br /> கூட்டத்தில் பாதி வலப்பக்கம் திரும்பி <br /> வடக்கு ரத வீதியில் துணிகளை அள்ள,<br /> மீதியோ <br /> இடப்பக்கம் திரும்பி<br /> இருட்டுக்கடை முன்<br /> அல்வாவுக்காக.<br /> <br /> கோபமுற்றாலும்<br /> குளிர்ந்தார் சுவாமி, <br /> சற்றே கோயிலுக்குள் வந்த<br /> குடும்பம் கண்டு.<br /> <br /> ‘`எல்லா தியேட்டரும் ஃபுல்லாயிட்டுல்லா... அதான்<br /> நெல்லையப்பரைப் பார்க்க வந்துட்டம்”<br /> அலைபேசியில்<br /> அளவளாவிக்கொண்டே<br /> ஆரத்தி பார்த்த<br /> பக்திமானைக் கண்டு<br /> வெகுண்டெழுந்தார்<br /> வேணுவன ஸ்வாமி.<br /> <br /> நெற்றிக்கண் திறக்கப்போன<br /> நெல்லையப்பரின் கோபம் கண்டு<br /> காதில் சொல்கிறாள் காந்திமதியம்மை<br /> ‘`போகட்டும் விடுங்க. நம்ம பிள்ளைகள் தானே'' <br /> என்று.<br /> <br /> <strong>- ஆதர்ஷ்ஜி</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தேநீர்</strong></span><br /> <br /> டெல்டா மாவட்ட<br /> தேசிய நெடுஞ்சாலையில்<br /> நட்சத்திர உணவகம் எதிரே நீலச் சீருடையில்<br /> கொடியசைத்து<br /> தேநீராவது பருக அழைப்பவன்<br /> சோழப் பேரரசின்<br /> வழித்தோன்றலாகவும் இருக்கலாம்<br /> <br /> <br /> நெற்களத்தில் போரடித்த<br /> யானைகள் பற்றியோ<br /> தானியங்கள் சேமித்த<br /> குதிர்கள் குறித்தோ<br /> காகம் தட்டிவிட்ட<br /> கமண்டல வரலாற்றையோ<br /> கேட்டுத் தொலைக்காதீர்கள்...<br /> <br /> தேநீர் குறித்த<br /> சந்தேகம் இருந்தால் மட்டும் கேளுங்கள்!<br /> <strong><br /> - கார்த்தி</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>என் கேலரியில் ரகசியமாய்ச் சிரித்துக்கொண்டிருக்கிறாள்</strong></span><br /> <br /> மிக அரிதாகக் காணக்கிடைத்த<br /> உன் தோழிகளுடன் நீ இருக்கும்<br /> சில புகைப்படங்களில்<br /> ஒன்றில்,<br /> எல்லோரும் ஒருபோல சிரித்திருக்க<br /> நீ மட்டும் நெற்றியைச் சுருக்கி புன்னகைக்கிறாய்.<br /> மற்றொன்றில் எல்லோரும் சிரிக்கத் தயாராகையில்<br /> அவர்களுக்கு முன்<br /> கழுத்தை பக்கவாட்டில் சாய்த்து<br /> கண்களை மூடியபடி <br /> புன்னகைத்துக்கொண்டிருக்கிறாய்.<br /> கடைசியான புகைப்படத்தில்<br /> இம்முறை<br /> புன்னகைக்காமல்<br /> மிக இயல்பாக இருக்கிறாய்.<br /> வழக்கம்போல<br /> வலது ஓரத்தில் இருக்கும்<br /> மூன்று புள்ளிகளைத் தொட்டு<br /> ‘Save Photo’ செய்கிறேன்<br /> புன்னகைத்தபடியே.<br /> <br /> <strong>- பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி</strong><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> </strong></span></p>