<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-611</strong></span></p>.<p><strong>ம்...</strong> என்றால் அழுதுவிடும் மனதை<br /> தோளில் கை போட்டுத் தேற்றி நிறுத்தியிருக்கிறேன்<br /> இமிக்ரேஷன் வரிசையில்.<br /> ‘இப்படியே போய்விடுகிறேனே’ எனப் புலம்பியபடியிருந்த <br /> அதன் காதுகளில் மூன்றே மூன்று மந்திரங்களைச் சொன்னேன்<br /> பிறகு அது கம்மென நின்றுகொண்டது.<br /> கண்டங்களை ஊடறுக்கும் ஒரு பிரமாண்டப் பறவையென<br /> ஓடுதளத்தில் பாந்தமாக நிற்கிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்<br /> ஒன்றுமே தெரியாத பச்சப்பிள்ளையைப்போல.<br /> உலகம் என்பது ஒரு சிறிய கிராமமாகிவிட்டபடியால்<br /> தேவனிடத்தில் ஏதொன்று கேட்பதற்கும் வழியில்லை.<br /> இந்த நேரத்தில் எந்தையிடம் அளவிலாத அன்பும்<br /> நம் சமூகத்திடம் அளவற்றக் கோபமும்கொள்கிறேன்.<br /> ஒரே ஆறுதல் அத்துணை வாஞ்சையால் உளங்கவரும் <br /> இதோ இந்தப் பணிப்பெண்தாம்.<br /> அம்மணி எத்தனைப் பொலிவு உன் பூ முகத்தில்<br /> ‘இருக்கை வாரைக் கட்டுங்கள்’ என்பதில்தான் எத்தனைக் கொஞ்சல்!<br /> பொறுக்க முடியாக் காலம் சுழற்றிவிட்ட சவுக்கடியில்<br /> மூச்சிரைக்க ஓடி தன் வலியச் சிறகுகளால்<br /> வான் நோக்கிச் சீறுகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.<br /> ஜன்னலில் இப்போது பார்க்கிறேன் <br /> எனக்கு நேரெதிர் திசையில் விடுபட்டுக்கொண்டிருந்தது<br /> சிறியதாக<br /> மிக மிகச் சிறியதாக<br /> என் மையத்தில் சுழலும் ஓர் உலகம், <br /> தாவிப்பிடிக்க யத்தனிக்கும் சிறுவனின் கைகளிலிருந்து <br /> அதுபாட்டுக்கு நழுவிச்செல்லும் <br /> ஒரு ரப்பர் பந்தைப்போல.</p>.<p><strong>- தர்மராஜ் பெரியசாமி</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தலைப்பிடப்படாத கவிதை</strong></span></p>.<p><strong>த</strong>லைப்பிடப்படாத கவிதை ஒன்று<br /> நடந்துசெல்கிறது.<br /> சரம்சரமான மல்லிகைப்பூ தொங்குகிறது.<br /> வாசமான வாசம்<br /> குணம் மணத்துடன்<br /> ஸ்கூட்டியில் போகும்போது<br /> திசைவேகமும்கொள்கிறது.<br /> கொஞ்சம் முத்தமும் வெப்பமும்<br /> முகிழ்த்து நுரைக்கின்றன தோழர்களுக்கு.<br /> தலைப்பெல்லாம் ஒரு பொருட்டா என்றபடி <br /> அந்தக் கவிதை<br /> எல்லாவற்றையும் ஒருமுறை <br /> அசைத்துப்பார்க்கிறது.<br /> <br /> <strong>- சச்சின்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இரண்டு கிலோ கெளரவம்</strong></span></p>.<p><strong>த</strong>ர்பூசணி என்று அழைப்பது<br /> கெளரவக் குறைவு என்று எண்ணியதால்<br /> `தர்பூஸ் ரெண்டு என்ன ரேட்?’ என்றார்<br /> செல்கடை சித்தப்பு.<br /> தர்பூசணியை எடைக்கு விற்கும்<br /> புத்திசாலிகள் நிறைந்த நாட்டில்<br /> ஏமாளியாக இருத்தல் வரம் ஆதலால்<br /> ஒன்றுக்கு இரண்டாக வாங்கினார்.<br /> `எப்போ இறங்கிய பழம்?’ என <br /> வியாபாரியிடம் விசாரித்த சித்தப்பு<br /> `நேற்றுதான்’ எனச் சொன்னதும்<br /> `கிட்டன்ஸ்லதானா?’ எனக் கேட்டுவிட்டு<br /> பெருமை பொங்கப் பார்த்தார்.<br /> வண்டியைக் கிளப்பிய அவரிடம்<br /> நடந்துவந்த ஒருவன்<br /> மருத்துவமனைக்கு வழி கேட்டபோது<br /> `ஹாஸ்பிட்டல் இப்படியே போனா வாக்கபிள்தான்’ <br /> எனச் சொல்லி<br /> விசிலடித்தபடியே கிளம்பிப் போனார்.<br /> <br /> <strong>- சச்சின்</strong></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-611</strong></span></p>.<p><strong>ம்...</strong> என்றால் அழுதுவிடும் மனதை<br /> தோளில் கை போட்டுத் தேற்றி நிறுத்தியிருக்கிறேன்<br /> இமிக்ரேஷன் வரிசையில்.<br /> ‘இப்படியே போய்விடுகிறேனே’ எனப் புலம்பியபடியிருந்த <br /> அதன் காதுகளில் மூன்றே மூன்று மந்திரங்களைச் சொன்னேன்<br /> பிறகு அது கம்மென நின்றுகொண்டது.<br /> கண்டங்களை ஊடறுக்கும் ஒரு பிரமாண்டப் பறவையென<br /> ஓடுதளத்தில் பாந்தமாக நிற்கிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்<br /> ஒன்றுமே தெரியாத பச்சப்பிள்ளையைப்போல.<br /> உலகம் என்பது ஒரு சிறிய கிராமமாகிவிட்டபடியால்<br /> தேவனிடத்தில் ஏதொன்று கேட்பதற்கும் வழியில்லை.<br /> இந்த நேரத்தில் எந்தையிடம் அளவிலாத அன்பும்<br /> நம் சமூகத்திடம் அளவற்றக் கோபமும்கொள்கிறேன்.<br /> ஒரே ஆறுதல் அத்துணை வாஞ்சையால் உளங்கவரும் <br /> இதோ இந்தப் பணிப்பெண்தாம்.<br /> அம்மணி எத்தனைப் பொலிவு உன் பூ முகத்தில்<br /> ‘இருக்கை வாரைக் கட்டுங்கள்’ என்பதில்தான் எத்தனைக் கொஞ்சல்!<br /> பொறுக்க முடியாக் காலம் சுழற்றிவிட்ட சவுக்கடியில்<br /> மூச்சிரைக்க ஓடி தன் வலியச் சிறகுகளால்<br /> வான் நோக்கிச் சீறுகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.<br /> ஜன்னலில் இப்போது பார்க்கிறேன் <br /> எனக்கு நேரெதிர் திசையில் விடுபட்டுக்கொண்டிருந்தது<br /> சிறியதாக<br /> மிக மிகச் சிறியதாக<br /> என் மையத்தில் சுழலும் ஓர் உலகம், <br /> தாவிப்பிடிக்க யத்தனிக்கும் சிறுவனின் கைகளிலிருந்து <br /> அதுபாட்டுக்கு நழுவிச்செல்லும் <br /> ஒரு ரப்பர் பந்தைப்போல.</p>.<p><strong>- தர்மராஜ் பெரியசாமி</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தலைப்பிடப்படாத கவிதை</strong></span></p>.<p><strong>த</strong>லைப்பிடப்படாத கவிதை ஒன்று<br /> நடந்துசெல்கிறது.<br /> சரம்சரமான மல்லிகைப்பூ தொங்குகிறது.<br /> வாசமான வாசம்<br /> குணம் மணத்துடன்<br /> ஸ்கூட்டியில் போகும்போது<br /> திசைவேகமும்கொள்கிறது.<br /> கொஞ்சம் முத்தமும் வெப்பமும்<br /> முகிழ்த்து நுரைக்கின்றன தோழர்களுக்கு.<br /> தலைப்பெல்லாம் ஒரு பொருட்டா என்றபடி <br /> அந்தக் கவிதை<br /> எல்லாவற்றையும் ஒருமுறை <br /> அசைத்துப்பார்க்கிறது.<br /> <br /> <strong>- சச்சின்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இரண்டு கிலோ கெளரவம்</strong></span></p>.<p><strong>த</strong>ர்பூசணி என்று அழைப்பது<br /> கெளரவக் குறைவு என்று எண்ணியதால்<br /> `தர்பூஸ் ரெண்டு என்ன ரேட்?’ என்றார்<br /> செல்கடை சித்தப்பு.<br /> தர்பூசணியை எடைக்கு விற்கும்<br /> புத்திசாலிகள் நிறைந்த நாட்டில்<br /> ஏமாளியாக இருத்தல் வரம் ஆதலால்<br /> ஒன்றுக்கு இரண்டாக வாங்கினார்.<br /> `எப்போ இறங்கிய பழம்?’ என <br /> வியாபாரியிடம் விசாரித்த சித்தப்பு<br /> `நேற்றுதான்’ எனச் சொன்னதும்<br /> `கிட்டன்ஸ்லதானா?’ எனக் கேட்டுவிட்டு<br /> பெருமை பொங்கப் பார்த்தார்.<br /> வண்டியைக் கிளப்பிய அவரிடம்<br /> நடந்துவந்த ஒருவன்<br /> மருத்துவமனைக்கு வழி கேட்டபோது<br /> `ஹாஸ்பிட்டல் இப்படியே போனா வாக்கபிள்தான்’ <br /> எனச் சொல்லி<br /> விசிலடித்தபடியே கிளம்பிப் போனார்.<br /> <br /> <strong>- சச்சின்</strong></p>