<p style="text-align: left;"><span style="color: rgb(255, 102, 0);"><strong>தேவை அதிகமில்லை</strong></span><br /> <br /> <em>பப்பாளி மரத்தின்<br /> யாரும் கவனிக்காத கனிந்த பழமொன்றை<br /> காக்கை கொத்திக் கீழே தள்ளியது<br /> இன்னும் சில காக்கைகள் வந்தன<br /> தின்றதுபோக மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன<br /> பின் மைனாக்கள் வந்தன<br /> அவையும் தின்றதுபோக<br /> மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன<br /> பின் கற்றாழைக் குருவிகள் வந்தன<br /> அவையும் புசித்ததுபோக<br /> மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன<br /> பின் சிட்டுக்குருவிகள் வந்தன<br /> அவையும் எடுத்ததுபோக<br /> மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன<br /> பின் வண்டுகள் வந்தன<br /> அவையும் தின்றதுபோக<br /> மிச்சம் வைத்துவிட்டு அகன்றன<br /> இப்போது சாரை சாரையாய்<br /> எறும்புகள் வந்து<br /> கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துக்கொண்டு<br /> கடக்கின்றன<br /> மனிதனுக்குத் தப்பித்த ஒரு பப்பாளிப்பழம்<br /> பசியாற்றுகிறது எண்ணிலா உயிர்க்கு<br /> இத்தனை எடுத்ததுபோக<br /> இன்னும் மிச்சமிருக்கிறது பப்பாளிப்பழம்!<br /> </em><br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- சௌவி</em></span></p>.<p style="text-align: left;"><span style="color: rgb(255, 102, 0);"><strong>சாவி</strong></span><br /> <br /> <em>எனக்கு மிகவும் பிடித்தது<br /> குளக்கரையில் நான் நிற்கும் புகைப்படம்.<br /> ஆர்வமாக நானதைக் குனிந்து பார்க்கையில்<br /> குளத்தினுள் விழுந்துவிட்டது<br /> சட்டை பாக்கெட்டிலிருந்த சாவி.<br /> என்ன செய்வேன் நான்,<br /> புகைப்படத்துக்குள் நுழையும் வித்தையை<br /> நான் கற்றுக்கொண்டது இல்லையே!<br /> போட்டோவில் இருக்கும்<br /> என்னிடமே நான் சொல்லி,<br /> அதை எடுத்துத் தரச் சொல்லலாம்தான்<br /> போட்டோவுக்குள் இருந்து<br /> என்னைப் பார்க்கும் நானும்<br /> போட்டோவில் இருக்கும் <br /> என்னைப் பார்க்கும் நானும் ஒன்றல்ல<br /> என்கிறான் தத்துவவாதி நண்பனொருவன்.<br /> எனக்குக் குழப்பமாக இருக்கிறது<br /> நிகழ்காலத்தில் நிற்கும் நான்<br /> இறந்தகாலத்துக்குள் குனிந்து <br /> சாவியை எடுத்து<br /> எதிர்காலத்தின் பூட்டை<br /> எப்படித் திறக்கப்போகிறேன்? </em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- கார்த்திக் திலகன்</em></span></p>.<p style="text-align: left;"><span style="color: rgb(255, 102, 0);"><strong>மழைத் தீக்குச்சி</strong></span><br /> <em><br /> தெருவிளக்கணைக்க<br /> முடியாமல் தவிக்கிறது <br /> நடைபாதை தாம்பத்யம்.</em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- வாலிதாசன்</em></span></p>.<p style="text-align: left;"><span style="color: rgb(255, 102, 0);"><strong>ஒரு கல்... ஓர் ஒளியாண்டு</strong></span><br /> <br /> <em>சிறுவயதில் கோபமாக <br /> வான் நோக்கி வீசிய கல்<br /> திரும்பி வரவேயில்லை. <br /> வெகுநேரம் காத்திருந்து<br /> வீடு திரும்பிவிட்டேன்.<br /> <br /> அதிலிருந்து அந்தப் பக்கம்<br /> போகும்போதெல்லாம்<br /> அச்சம் தலைக்கேறும்.<br /> <br /> அந்தக் கல் <br /> ஒளியாண்டு வேகத்தில் பயணித்து <br /> கோள்கள் கடந்து<br /> நட்சத்திரங்கள் உரசி<br /> சென்றுகொண்டே இருப்பதாக<br /> அடிக்கடி கனவு வரும்.<br /> <br /> கல்<br /> வீசியவனை மறந்துபோயிருக்கலாம்.<br /> <br /> நினைவு திரும்பும் வாய்ப்பு<br /> ஏதேனுமுண்டா என அச்சத்தில்<br /> சோதிடனை அணுகினேன்.<br /> <br /> எடுத்தவுடன் இப்படித் தொடங்கினான்<br /> `ஜாதகத்தின் மூன்றாவது கட்டத்தில்<br /> ஒரு கல் இருக்கிறது.’</em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- எம்.ஸ்டாலின் சரவணன்</em></span></p>
<p style="text-align: left;"><span style="color: rgb(255, 102, 0);"><strong>தேவை அதிகமில்லை</strong></span><br /> <br /> <em>பப்பாளி மரத்தின்<br /> யாரும் கவனிக்காத கனிந்த பழமொன்றை<br /> காக்கை கொத்திக் கீழே தள்ளியது<br /> இன்னும் சில காக்கைகள் வந்தன<br /> தின்றதுபோக மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன<br /> பின் மைனாக்கள் வந்தன<br /> அவையும் தின்றதுபோக<br /> மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன<br /> பின் கற்றாழைக் குருவிகள் வந்தன<br /> அவையும் புசித்ததுபோக<br /> மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன<br /> பின் சிட்டுக்குருவிகள் வந்தன<br /> அவையும் எடுத்ததுபோக<br /> மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன<br /> பின் வண்டுகள் வந்தன<br /> அவையும் தின்றதுபோக<br /> மிச்சம் வைத்துவிட்டு அகன்றன<br /> இப்போது சாரை சாரையாய்<br /> எறும்புகள் வந்து<br /> கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துக்கொண்டு<br /> கடக்கின்றன<br /> மனிதனுக்குத் தப்பித்த ஒரு பப்பாளிப்பழம்<br /> பசியாற்றுகிறது எண்ணிலா உயிர்க்கு<br /> இத்தனை எடுத்ததுபோக<br /> இன்னும் மிச்சமிருக்கிறது பப்பாளிப்பழம்!<br /> </em><br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- சௌவி</em></span></p>.<p style="text-align: left;"><span style="color: rgb(255, 102, 0);"><strong>சாவி</strong></span><br /> <br /> <em>எனக்கு மிகவும் பிடித்தது<br /> குளக்கரையில் நான் நிற்கும் புகைப்படம்.<br /> ஆர்வமாக நானதைக் குனிந்து பார்க்கையில்<br /> குளத்தினுள் விழுந்துவிட்டது<br /> சட்டை பாக்கெட்டிலிருந்த சாவி.<br /> என்ன செய்வேன் நான்,<br /> புகைப்படத்துக்குள் நுழையும் வித்தையை<br /> நான் கற்றுக்கொண்டது இல்லையே!<br /> போட்டோவில் இருக்கும்<br /> என்னிடமே நான் சொல்லி,<br /> அதை எடுத்துத் தரச் சொல்லலாம்தான்<br /> போட்டோவுக்குள் இருந்து<br /> என்னைப் பார்க்கும் நானும்<br /> போட்டோவில் இருக்கும் <br /> என்னைப் பார்க்கும் நானும் ஒன்றல்ல<br /> என்கிறான் தத்துவவாதி நண்பனொருவன்.<br /> எனக்குக் குழப்பமாக இருக்கிறது<br /> நிகழ்காலத்தில் நிற்கும் நான்<br /> இறந்தகாலத்துக்குள் குனிந்து <br /> சாவியை எடுத்து<br /> எதிர்காலத்தின் பூட்டை<br /> எப்படித் திறக்கப்போகிறேன்? </em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- கார்த்திக் திலகன்</em></span></p>.<p style="text-align: left;"><span style="color: rgb(255, 102, 0);"><strong>மழைத் தீக்குச்சி</strong></span><br /> <em><br /> தெருவிளக்கணைக்க<br /> முடியாமல் தவிக்கிறது <br /> நடைபாதை தாம்பத்யம்.</em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- வாலிதாசன்</em></span></p>.<p style="text-align: left;"><span style="color: rgb(255, 102, 0);"><strong>ஒரு கல்... ஓர் ஒளியாண்டு</strong></span><br /> <br /> <em>சிறுவயதில் கோபமாக <br /> வான் நோக்கி வீசிய கல்<br /> திரும்பி வரவேயில்லை. <br /> வெகுநேரம் காத்திருந்து<br /> வீடு திரும்பிவிட்டேன்.<br /> <br /> அதிலிருந்து அந்தப் பக்கம்<br /> போகும்போதெல்லாம்<br /> அச்சம் தலைக்கேறும்.<br /> <br /> அந்தக் கல் <br /> ஒளியாண்டு வேகத்தில் பயணித்து <br /> கோள்கள் கடந்து<br /> நட்சத்திரங்கள் உரசி<br /> சென்றுகொண்டே இருப்பதாக<br /> அடிக்கடி கனவு வரும்.<br /> <br /> கல்<br /> வீசியவனை மறந்துபோயிருக்கலாம்.<br /> <br /> நினைவு திரும்பும் வாய்ப்பு<br /> ஏதேனுமுண்டா என அச்சத்தில்<br /> சோதிடனை அணுகினேன்.<br /> <br /> எடுத்தவுடன் இப்படித் தொடங்கினான்<br /> `ஜாதகத்தின் மூன்றாவது கட்டத்தில்<br /> ஒரு கல் இருக்கிறது.’</em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- எம்.ஸ்டாலின் சரவணன்</em></span></p>