<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>நா</strong></span>ன்குமுனைச் சந்திப்பொன்றில்<br /> ஒரு போலீஸ்காரரும் ஒரு குடியானவனும்<br /> கிட்டத்தட்ட மோதிக்கொண்டனர்.<br /> குடியானவன் வெலவெலத்துப்போனான்<br /> கண்டோர் திகைத்து நின்றனர்<br /> அடுத்த கணம் அறை விழும் சத்தத்திற்காய்<br /> எல்லோரும் காத்திருக்க<br /> அதிகாரி குடியானவனை நேர்நோக்கி<br /> ஒரு சிரி சிரித்தார்.<br /> அப்போது வானத்தில் தேவர்கள் ஒன்றுகூடும் ஓசை கேட்டது.<br /> `நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே!’ என <br /> வாழ்த்தியது வானொலி.<br /> போலீஸ் தன் சுடரை<br /> ஒரு கந்துவட்டிக்காரனிடம் பற்றவைத்துவிட்டுப் போனார்.<br /> அவன்<br /> ரோட்டோரம் கிடந்து பழம் விற்கும் கிழவியிடம் கந்து வசூலிக்க வந்தவன்.<br /> கிழவி தலையைச் சொறிந்தபடியே<br /> `நாளைக்கு...’ என்றாள்.<br /> ஓர் எழுத்துகூட ஏசாமல் தன் ஜொலிப்பை<br /> அவளிடம் ஏற்றிவிட்டுப் போனான் அவன்.<br /> அதில் பிரகாசித்துப்போன கிழவி<br /> இரண்டு குட்டி ஆரஞ்சுகளைச் சேர்த்துப் போட்டாள்.<br /> அவை ஒரு குப்பைக்காரியின் முந்தானையில் விழுந்தன.<br /> எப்போதாவது ஆரஞ்சு தின்னும் அவளை<br /> ஒரு பிச்சைக்காரச் சிறுமி வழிமறிக்க<br /> அதிலொன்றை ஈந்துவிட்டுப் போனாள்.<br /> சிறுமியின் காலடியில்<br /> நாய்க்குட்டியொன்று வாலாட்டி மன்றாடியது.<br /> அதிலொரு சுளையை எடுத்து <br /> அவள் அதன் முன்னே எறிய<br /> சொறிநாய்க் குட்டி<br /> அந்த `ஒளிநறுங்கீற்றை’ லபக்கென்று விழுங்கியது!</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>நா</strong></span>ன்குமுனைச் சந்திப்பொன்றில்<br /> ஒரு போலீஸ்காரரும் ஒரு குடியானவனும்<br /> கிட்டத்தட்ட மோதிக்கொண்டனர்.<br /> குடியானவன் வெலவெலத்துப்போனான்<br /> கண்டோர் திகைத்து நின்றனர்<br /> அடுத்த கணம் அறை விழும் சத்தத்திற்காய்<br /> எல்லோரும் காத்திருக்க<br /> அதிகாரி குடியானவனை நேர்நோக்கி<br /> ஒரு சிரி சிரித்தார்.<br /> அப்போது வானத்தில் தேவர்கள் ஒன்றுகூடும் ஓசை கேட்டது.<br /> `நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே!’ என <br /> வாழ்த்தியது வானொலி.<br /> போலீஸ் தன் சுடரை<br /> ஒரு கந்துவட்டிக்காரனிடம் பற்றவைத்துவிட்டுப் போனார்.<br /> அவன்<br /> ரோட்டோரம் கிடந்து பழம் விற்கும் கிழவியிடம் கந்து வசூலிக்க வந்தவன்.<br /> கிழவி தலையைச் சொறிந்தபடியே<br /> `நாளைக்கு...’ என்றாள்.<br /> ஓர் எழுத்துகூட ஏசாமல் தன் ஜொலிப்பை<br /> அவளிடம் ஏற்றிவிட்டுப் போனான் அவன்.<br /> அதில் பிரகாசித்துப்போன கிழவி<br /> இரண்டு குட்டி ஆரஞ்சுகளைச் சேர்த்துப் போட்டாள்.<br /> அவை ஒரு குப்பைக்காரியின் முந்தானையில் விழுந்தன.<br /> எப்போதாவது ஆரஞ்சு தின்னும் அவளை<br /> ஒரு பிச்சைக்காரச் சிறுமி வழிமறிக்க<br /> அதிலொன்றை ஈந்துவிட்டுப் போனாள்.<br /> சிறுமியின் காலடியில்<br /> நாய்க்குட்டியொன்று வாலாட்டி மன்றாடியது.<br /> அதிலொரு சுளையை எடுத்து <br /> அவள் அதன் முன்னே எறிய<br /> சொறிநாய்க் குட்டி<br /> அந்த `ஒளிநறுங்கீற்றை’ லபக்கென்று விழுங்கியது!</p>