<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>செளகரியமாக நகர்ந்த இரவை முன்னமே அனுப்பிவிட்டு<br /> தேநீர்க்கடையில் அன்றைய தினத்தின் முதல் ரொட்டியை<br /> ராகிமால்ட்டில் நனைப்பவர்கள்<br /> சாலையில் வாகனமொன்று <br /> சேகரமான உலோகக் குப்பைத்தொட்டிகளைத் தூக்கி<br /> தனக்குள் கவிழ்த்துவதைப் பார்க்கிறார்கள்<br /> அதன்பொருட்டு<br /> வாகனங்களின் தள்ளுமுள்ளு நிகழ்கிறது<br /> சில தகவல்கோபுரங்கள் ஞாபகப்பிசகைச் சந்திக்கின்றன<br /> இப்படியான காலத்தில்<br /> விடுமுறை நாளொன்றின் முந்தைய இரவில் நிகழும்<br /> கலவிச்சுவைப்புகளுக்குப் பின் உறக்கமிழந்த சிலர்<br /> தளராடையில்<br /> இறைச்சிக்கடை வரிசையில் நம்பிக்கையோடு நிற்க வேண்டியதுதான்<br /> பாடசாலை உந்துகளின் எண்ணிக்கையோடு<br /> மட்டமான உணவுகளைப் புசித்துக்கொண்டு<br /> காதல்கொள்ள உடல்வேண்டித் தனித்து உழல்பவர்கள்<br /> பெருக்கமடைகிற இங்கு</p>.<p><br /> பொறுப்பற்றுத் திரியும் ஒருவன்<br /> கால்சராயோடு கண்ணாடியில் முத்தமிட்டுத் திரியும் ஆண்களை<br /> நாற்றமடிக்கும் வெளிச்சம்குன்றிய நீண்ட நடைபாதையை<br /> பெண்கள்சூடும் மறைவுக்கச்சைகள் எதையும் அலங்கரிக்காத நைலான்கொடிகளை<br /> காண நேர்கிறது<br /> அப்போது<br /> சேரிகளை ஒட்டிய கறுத்த நதிக்கரைப் பறவைகள்<br /> இரை பொறுக்குவதைப் பார்த்தபடி உருளும்<br /> மின்வண்டிகளில்<br /> உள்ளங்கைகளை இசைத்தபடி சேமிக்கும் நாணயங்களை<br /> திருநங்கைகள் ஆசீர்வதித்துக்கொண்டிருப்பார்கள்<br /> சிறு உணவுப் பொதிகளோடு பணிக்குச் செல்பவர்கள் <br /> பார்க்க நேரும்படி<br /> தடித்த சுத்தியலோடு நீலநிற மனிதர்கள்<br /> குறுக்குமறுக்காக நீண்டுசெல்லும் இருப்புப்பாதைகளை<br /> அடித்து முடுக்குவார்கள்<br /> தனது அத்தனை அம்சங்களோடும் இயங்கிக்கொண்டிருக்கும்<br /> இந்தத் திணைக்களத்துக்கு<br /> வடகிழக்குத் தேசங்களிலிருந்து உழைத்துக் கொடுக்கும்</p>.<p>மனிதத் தொகுதியொன்று இறங்குவது வாடிக்கையான ஒரு நிகழ்வுதான்<br /> தோராயமாக<br /> இருபத்தியேழு வசந்தகாலங்களுக்கு முகமன் தெரிவித்திருக்கும் அவனோ<br /> குறுக்கமடைந்திருக்கும்<br /> ஐரோப்பிய எச்சங்கள் படிந்த அசுத்தத் தெருவொன்றில் வசிக்கிற<br /> தொழில்முறை வேசையனான நண்பனோடு<br /> போதையூக்க வஸ்துகளையுண்டு<br /> எதிர்ப்படுபவர்களை விசாரித்துக்கொண்டும் ஓலமிட்டும்<br /> அதிர்வுகள் நிரம்பிய பாதத்தோடு தொடர்கிறான்<br /> திறந்தவெளிக் கிடங்குகளில் கொட்டப்படும் மிச்சங்களில்<br /> உயிர்வாழ்வதற்கானவற்றைப் பொறுக்கிக் கழிந்தபடி நீளும் மனிதர்களின்<br /> அன்றாடத்தின் ஒரு நாளில்<br /> சிலர் வாகனப் பாதைகளை மறிக்கும்போது<br /> மதுநிலையக் கதவுகள் சாத்தப்பட்டிருக்க<br /> மாமிசத் தண்டுக்கென அலைவுறும்</p>.<p><br /> பசித்த மனம்கொண்டவளின் விருப்புகளுக்குத் தப்பி<br /> தன்னுடலை ஒருவன் கட்டடத்தின் உயரத்திலிருந்து தரை தள்ளியிருந்தான்<br /> நீங்கள் பார்க்க முடியும்<br /> பொதுவில் விலகியிருக்கும் சிலர்<br /> நெகிழிகளை மென்றபடி கால்நடைகள் திரிகிற அல்லிக்கேணிப் பகுதிகளில்<br /> மலிவான பழங்கள் விற்கும் தள்ளுவண்டிக்காரர்களைக் கடந்தபடி<br /> கவிஞர்களைப்போல பேச்சில் புகைத்துக்கொண்டும் தெரிகிறார்கள்<br /> மினுங்கும் கறுத்த சருமங்களோடு<br /> வனப்பின் பிரக்ஞையற்ற கடற்பெண்கள்<br /> மீன்களை சந்தைக்குச் சுமந்துபோகும் பாங்கையும்<br /> கொண்டிருக்கும் இந்நிலத்தில்<br /> தற்காலிகத்தில் எழும்பி சலுகைகளை அறிவிக்கும்<br /> சாலையோர வணிகக் கூடாரங்களை கவனிப்பது அலுப்பூட்டுகிறது<br /> கூர்நோக்கு இல்லங்களின் சிறார்கள் தொலைந்தபடியிருப்பதை<br /> ஊடகங்கள் அச்சத்தோடு பகரும் வேளையில்<br /> அந்தி மணற்கரையில்<br /> நவீனக் கலங்களை வேடிக்கை பார்த்தபடி நிற்கும்<br /> கலங்கரைவிளக்கத்தின் கீழும் அவர்களைக் காணலாம்<br /> கசகசக்க இணைகளோடு முன்விளையாட்டில் ஈடுபட்டிருப்பதை<br /> அல்லது ஆற்றுப்படுத்துவதில்<br /> இதுபோன்றதான காலத்தில்<br /> புறக்கணித்துச் சென்றவளின் அக்குளில் நிலவும்<br /> உப்புத்துயரன்<br /> தன் கழிவிரக்கத்துக்குத் தோதாகப் புகைத்துக்கொண்டிருக்கிறான்<br /> ஒப்பந்தம் மறுப்போருக்கு<br /> தண்டனையற்ற புணர்ச்சி அவசியமென்பது<br /> எவ்வகையில் நியாயமற்றது<br /> இன்னுமந்த நள்ளிரவு<br /> ஒளிரும் விடுதிகளின் ஃப்ளோரசன்ட் இசையோடு<br /> இளமையர் குடித்துக் களிக்கும் அகாலத்தில்<br /> நாணயங்களைக் கூட்டாகப் பகிர்ந்துகொள்ளும் வாகனப் பயணங்களிடையே<br /> தொன்மச் சிலைகள் ஆங்காங்கே பக்கவாட்டில் நிறுவப்பட்டிருக்கும்<br /> பகட்டான சாலைகளில் தென்படும்படி<br /> தன் சகாக்களோடு கூச்சலிட்டு<br /> மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள் இரவுப் பெண்கள்</p>.<p>டகீலா மற்றும் வோட்காவின் வேறுபட்ட குணாதிசயங்கள்<br /> தனித்திருக்கும் மத்திய வயது ஆண்களின் படுக்கையறைப் பேச்சுகள்<br /> என்பதான நீட்சியில்<br /> கவிதைகளை நடைபாதை வெளிச்சங்களில் சத்தமாக வாசிக்கும்போது<br /> சமயங்களில்<br /> இடைமறித்து எச்சரிப்பவர்களைத் தாக்கிவிட்டுத் தப்பி<br /> திறந்துகிடக்கும் அவ்வேளையின் தெருவில்<br /> பெரும்பாலும் தனியே நொண்டித்திரிகிற மட்டக்குதிரைபோல<br /> அங்கு வானொலி கேட்கும் சிலரோடு சேர்ந்து ஒருவன் உறங்கியும்விடுகிறான்<br /> செக்குமாடுகளெனக் கண்காணிப்புகள் சுழலும் பகுதியின்<br /> பாலங்களுக்குக் கீழ் சிறு தடுப்புகளில் வசிப்பவர்கள்<br /> தங்களைச் சாய்த்திருக்க</p>.<p><br /> அதையொட்டிய உயர்ந்த தேவாலயங்களுக்கருகே<br /> நிச்சலனத்தில் வாழும் பெரும் கல்லறைத் தோட்டம்<br /> சில எண்களுடன் நிற்கும் புதிய வருகையாளருக்கு வாயைத் திறக்கிறது<br /> இப்படியான நடப்புகளுக்கிடையே<br /> ஒரு முறைமையை பொதுவில் வலியுறுத்துவது<br /> எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது<br /> அவர்கள் வெறுமனே<br /> வேடிக்கை பார்த்தபடி கடந்துகொண்டிருப்பவர்கள் மட்டும்தானா<br /> நிலவறைகளில் கூடும் சந்தைகளின் ஊதாரிக் குடிகாரர்களோடு<br /> மெல்லிய வெளிச்சத்தில் குற்றங்களைப் பேசியபடி<br /> அங்கு நிகழ்பவர்களாகவும்<br /> தனித்துவாழ்வோரின்<br /> தன்னின்ப திளைப்புத் தருணங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டும்<br /> தொழிற்சாலைக் கழிவோடையருகே பின் சாமத்தின் மறைப்பில்<br /> இரந்துவாழும் அந்தகனோடு<br /> கன்றிச் சிவந்துகொண்டிருப்பவளின் முனகல்களைக் கேட்டுக் கடந்தபடியும்<br /> வசிப்பிடமற்று உறங்குபவர்களுக்கிடையே விழித்த<br /> குழந்தையில் துலங்கும் தனிமையின் கேவலில் உதிர்கிற<br /> கண்ணீர்த்துளிகள் என்பதோடு<br /> இருப்பின் பிளந்த உடல்களாக<br /> இத்திணையின் வரைபடரேகைகள் நீளும் அத்தனை திசைகளிலும்<br /> அலைவது யார் நானா.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>செளகரியமாக நகர்ந்த இரவை முன்னமே அனுப்பிவிட்டு<br /> தேநீர்க்கடையில் அன்றைய தினத்தின் முதல் ரொட்டியை<br /> ராகிமால்ட்டில் நனைப்பவர்கள்<br /> சாலையில் வாகனமொன்று <br /> சேகரமான உலோகக் குப்பைத்தொட்டிகளைத் தூக்கி<br /> தனக்குள் கவிழ்த்துவதைப் பார்க்கிறார்கள்<br /> அதன்பொருட்டு<br /> வாகனங்களின் தள்ளுமுள்ளு நிகழ்கிறது<br /> சில தகவல்கோபுரங்கள் ஞாபகப்பிசகைச் சந்திக்கின்றன<br /> இப்படியான காலத்தில்<br /> விடுமுறை நாளொன்றின் முந்தைய இரவில் நிகழும்<br /> கலவிச்சுவைப்புகளுக்குப் பின் உறக்கமிழந்த சிலர்<br /> தளராடையில்<br /> இறைச்சிக்கடை வரிசையில் நம்பிக்கையோடு நிற்க வேண்டியதுதான்<br /> பாடசாலை உந்துகளின் எண்ணிக்கையோடு<br /> மட்டமான உணவுகளைப் புசித்துக்கொண்டு<br /> காதல்கொள்ள உடல்வேண்டித் தனித்து உழல்பவர்கள்<br /> பெருக்கமடைகிற இங்கு</p>.<p><br /> பொறுப்பற்றுத் திரியும் ஒருவன்<br /> கால்சராயோடு கண்ணாடியில் முத்தமிட்டுத் திரியும் ஆண்களை<br /> நாற்றமடிக்கும் வெளிச்சம்குன்றிய நீண்ட நடைபாதையை<br /> பெண்கள்சூடும் மறைவுக்கச்சைகள் எதையும் அலங்கரிக்காத நைலான்கொடிகளை<br /> காண நேர்கிறது<br /> அப்போது<br /> சேரிகளை ஒட்டிய கறுத்த நதிக்கரைப் பறவைகள்<br /> இரை பொறுக்குவதைப் பார்த்தபடி உருளும்<br /> மின்வண்டிகளில்<br /> உள்ளங்கைகளை இசைத்தபடி சேமிக்கும் நாணயங்களை<br /> திருநங்கைகள் ஆசீர்வதித்துக்கொண்டிருப்பார்கள்<br /> சிறு உணவுப் பொதிகளோடு பணிக்குச் செல்பவர்கள் <br /> பார்க்க நேரும்படி<br /> தடித்த சுத்தியலோடு நீலநிற மனிதர்கள்<br /> குறுக்குமறுக்காக நீண்டுசெல்லும் இருப்புப்பாதைகளை<br /> அடித்து முடுக்குவார்கள்<br /> தனது அத்தனை அம்சங்களோடும் இயங்கிக்கொண்டிருக்கும்<br /> இந்தத் திணைக்களத்துக்கு<br /> வடகிழக்குத் தேசங்களிலிருந்து உழைத்துக் கொடுக்கும்</p>.<p>மனிதத் தொகுதியொன்று இறங்குவது வாடிக்கையான ஒரு நிகழ்வுதான்<br /> தோராயமாக<br /> இருபத்தியேழு வசந்தகாலங்களுக்கு முகமன் தெரிவித்திருக்கும் அவனோ<br /> குறுக்கமடைந்திருக்கும்<br /> ஐரோப்பிய எச்சங்கள் படிந்த அசுத்தத் தெருவொன்றில் வசிக்கிற<br /> தொழில்முறை வேசையனான நண்பனோடு<br /> போதையூக்க வஸ்துகளையுண்டு<br /> எதிர்ப்படுபவர்களை விசாரித்துக்கொண்டும் ஓலமிட்டும்<br /> அதிர்வுகள் நிரம்பிய பாதத்தோடு தொடர்கிறான்<br /> திறந்தவெளிக் கிடங்குகளில் கொட்டப்படும் மிச்சங்களில்<br /> உயிர்வாழ்வதற்கானவற்றைப் பொறுக்கிக் கழிந்தபடி நீளும் மனிதர்களின்<br /> அன்றாடத்தின் ஒரு நாளில்<br /> சிலர் வாகனப் பாதைகளை மறிக்கும்போது<br /> மதுநிலையக் கதவுகள் சாத்தப்பட்டிருக்க<br /> மாமிசத் தண்டுக்கென அலைவுறும்</p>.<p><br /> பசித்த மனம்கொண்டவளின் விருப்புகளுக்குத் தப்பி<br /> தன்னுடலை ஒருவன் கட்டடத்தின் உயரத்திலிருந்து தரை தள்ளியிருந்தான்<br /> நீங்கள் பார்க்க முடியும்<br /> பொதுவில் விலகியிருக்கும் சிலர்<br /> நெகிழிகளை மென்றபடி கால்நடைகள் திரிகிற அல்லிக்கேணிப் பகுதிகளில்<br /> மலிவான பழங்கள் விற்கும் தள்ளுவண்டிக்காரர்களைக் கடந்தபடி<br /> கவிஞர்களைப்போல பேச்சில் புகைத்துக்கொண்டும் தெரிகிறார்கள்<br /> மினுங்கும் கறுத்த சருமங்களோடு<br /> வனப்பின் பிரக்ஞையற்ற கடற்பெண்கள்<br /> மீன்களை சந்தைக்குச் சுமந்துபோகும் பாங்கையும்<br /> கொண்டிருக்கும் இந்நிலத்தில்<br /> தற்காலிகத்தில் எழும்பி சலுகைகளை அறிவிக்கும்<br /> சாலையோர வணிகக் கூடாரங்களை கவனிப்பது அலுப்பூட்டுகிறது<br /> கூர்நோக்கு இல்லங்களின் சிறார்கள் தொலைந்தபடியிருப்பதை<br /> ஊடகங்கள் அச்சத்தோடு பகரும் வேளையில்<br /> அந்தி மணற்கரையில்<br /> நவீனக் கலங்களை வேடிக்கை பார்த்தபடி நிற்கும்<br /> கலங்கரைவிளக்கத்தின் கீழும் அவர்களைக் காணலாம்<br /> கசகசக்க இணைகளோடு முன்விளையாட்டில் ஈடுபட்டிருப்பதை<br /> அல்லது ஆற்றுப்படுத்துவதில்<br /> இதுபோன்றதான காலத்தில்<br /> புறக்கணித்துச் சென்றவளின் அக்குளில் நிலவும்<br /> உப்புத்துயரன்<br /> தன் கழிவிரக்கத்துக்குத் தோதாகப் புகைத்துக்கொண்டிருக்கிறான்<br /> ஒப்பந்தம் மறுப்போருக்கு<br /> தண்டனையற்ற புணர்ச்சி அவசியமென்பது<br /> எவ்வகையில் நியாயமற்றது<br /> இன்னுமந்த நள்ளிரவு<br /> ஒளிரும் விடுதிகளின் ஃப்ளோரசன்ட் இசையோடு<br /> இளமையர் குடித்துக் களிக்கும் அகாலத்தில்<br /> நாணயங்களைக் கூட்டாகப் பகிர்ந்துகொள்ளும் வாகனப் பயணங்களிடையே<br /> தொன்மச் சிலைகள் ஆங்காங்கே பக்கவாட்டில் நிறுவப்பட்டிருக்கும்<br /> பகட்டான சாலைகளில் தென்படும்படி<br /> தன் சகாக்களோடு கூச்சலிட்டு<br /> மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள் இரவுப் பெண்கள்</p>.<p>டகீலா மற்றும் வோட்காவின் வேறுபட்ட குணாதிசயங்கள்<br /> தனித்திருக்கும் மத்திய வயது ஆண்களின் படுக்கையறைப் பேச்சுகள்<br /> என்பதான நீட்சியில்<br /> கவிதைகளை நடைபாதை வெளிச்சங்களில் சத்தமாக வாசிக்கும்போது<br /> சமயங்களில்<br /> இடைமறித்து எச்சரிப்பவர்களைத் தாக்கிவிட்டுத் தப்பி<br /> திறந்துகிடக்கும் அவ்வேளையின் தெருவில்<br /> பெரும்பாலும் தனியே நொண்டித்திரிகிற மட்டக்குதிரைபோல<br /> அங்கு வானொலி கேட்கும் சிலரோடு சேர்ந்து ஒருவன் உறங்கியும்விடுகிறான்<br /> செக்குமாடுகளெனக் கண்காணிப்புகள் சுழலும் பகுதியின்<br /> பாலங்களுக்குக் கீழ் சிறு தடுப்புகளில் வசிப்பவர்கள்<br /> தங்களைச் சாய்த்திருக்க</p>.<p><br /> அதையொட்டிய உயர்ந்த தேவாலயங்களுக்கருகே<br /> நிச்சலனத்தில் வாழும் பெரும் கல்லறைத் தோட்டம்<br /> சில எண்களுடன் நிற்கும் புதிய வருகையாளருக்கு வாயைத் திறக்கிறது<br /> இப்படியான நடப்புகளுக்கிடையே<br /> ஒரு முறைமையை பொதுவில் வலியுறுத்துவது<br /> எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது<br /> அவர்கள் வெறுமனே<br /> வேடிக்கை பார்த்தபடி கடந்துகொண்டிருப்பவர்கள் மட்டும்தானா<br /> நிலவறைகளில் கூடும் சந்தைகளின் ஊதாரிக் குடிகாரர்களோடு<br /> மெல்லிய வெளிச்சத்தில் குற்றங்களைப் பேசியபடி<br /> அங்கு நிகழ்பவர்களாகவும்<br /> தனித்துவாழ்வோரின்<br /> தன்னின்ப திளைப்புத் தருணங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டும்<br /> தொழிற்சாலைக் கழிவோடையருகே பின் சாமத்தின் மறைப்பில்<br /> இரந்துவாழும் அந்தகனோடு<br /> கன்றிச் சிவந்துகொண்டிருப்பவளின் முனகல்களைக் கேட்டுக் கடந்தபடியும்<br /> வசிப்பிடமற்று உறங்குபவர்களுக்கிடையே விழித்த<br /> குழந்தையில் துலங்கும் தனிமையின் கேவலில் உதிர்கிற<br /> கண்ணீர்த்துளிகள் என்பதோடு<br /> இருப்பின் பிளந்த உடல்களாக<br /> இத்திணையின் வரைபடரேகைகள் நீளும் அத்தனை திசைகளிலும்<br /> அலைவது யார் நானா.</p>