<p><strong><span style="color: rgb(255, 102, 0);">கறுப்பு வெள்ளை</span></strong><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>யல்தேசம் ஒன்றில் தலைவியைப் பிரிந்திருப்பவன்<br /> தலை துவட்டும் வேளையில்<br /> தேங்காய்ப்பூ டவலில் சிக்கிய<br /> சிறுமுடி ஒன்றின் வழியே நீண்டு வளர்கின்றன<br /> கூந்தலிழை சிக்கிய நினைவுகள்.<br /> <br /> துரித உணவில் அவனுக்கு<br /> நீண்ட மயிர் தென்படாத அதே வேளையில்<br /> அவளுக்குப் புரையேறுவதாக நீட்டிக்கப்படுகிறது<br /> இருவருக்குமான ஆயுள்.<br /> <br /> கடைசியாக அவளிட்ட எச்சில் முத்தத்தை<br /> உலராமல் தேக்கிவைக்க<br /> வளர்க்கப்பட்டிருந்த தாடியின்<br /> இடையிடையே வெள்ளியாக முளைவிட்டு மின்னத் தொடங்கியிருந்தது<br /> பிரிதுயர் அன்பு.<br /> <br /> வேர்களைத் தேடி உதிர்ந்த வழுக்கையுடன்<br /> பாதி கட்டி பூசப்படாத வீடு திரும்பியவனை<br /> நரைத்த தலையோடு வரவேற்பவளின் அணைப்பில்<br /> பாதிகளால் முழுமை அடைகிறது<br /> கறுப்பு வெள்ளை வாழ்க்கை.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><br /> <strong>- சுபா செந்தில்குமார்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 102, 0);"><strong>பட்டாம்பூச்சி ஸ்டிக்கர்</strong></span><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> ஒ</strong></span>ரே வெட்டுதான்<br /> துண்டான ஆட்டின் தலையை<br /> குனிந்துகூடப் பார்க்கவில்லை அய்யனார்.<br /> விற்றுத் தீர்ந்த கூடையில்<br /> வீடு வந்தும் போகவில்லை பூவாசம்.<br /> சக்கரத்தில் நசுங்கிய பட்டாம்பூச்சியைக்<br /> கண்டுகொள்ளாமலேயே போகிறான்<br /> வாகனத்தில் பட்டாம்பூச்சி ஸ்டிக்கர் ஒட்டிய<br /> லாரிக்காரன்.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> - பிரபு</strong></span></p>.<p><span style="color: rgb(255, 102, 0);"><strong>குறுக்குக்கோடு</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வி</strong></span>ருப்பமான பாடலொன்றின் <br /> இடையிசையில் இருந்து மெள்ள முன்னேறி <br /> முதல் வரியைப் பிடிப்பதுபோலன்றி, <br /> வழி தவறிய கன்றுக்குட்டியை <br /> தாய்ப்பசுவிடம் சேர்த்திட <br /> வளைந்து நெளிந்த பாதைகளில் பயணித்து <br /> நெருங்கிடும் வேளையில் <br /> தடையென வரும் குறுக்குக்கோட்டின் முன் <br /> திகைத்து நிற்கும் சிறுவனின் <br /> நகரும் பென்சில் முனையென <br /> உன் மீதான வெறுப்பின் <br /> எந்தவோர் இழையின் தொடர்ச்சியும் <br /> உனது பேரன்பின் சாகரத்தில் <br /> முடிவது கண்டு திகைக்கிறேன்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>- கே.ஸ்டாலின்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 102, 0);"><strong>வீடு</strong></span><br /> <br /> வாடகையில்<br /> 500 ரூபாய் உயர்த்தி<br /> கேட்கிறார் வீட்டுக்காரர்.<br /> அதிகம்தான் என்றாலும்<br /> ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.<br /> பரணில்,<br /> நிலத்தை அடகுவைத்து<br /> கடன் வாங்கிய பத்திரங்கள் இருக்கும் <br /> பெட்டிக்குப் பின்னே<br /> கூடுகட்டி குஞ்சு பொரித்திருக்கும்<br /> சிட்டுக்குருவிக்காகவாவது.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> - கி.ரவிக்குமார்</strong></span></p>
<p><strong><span style="color: rgb(255, 102, 0);">கறுப்பு வெள்ளை</span></strong><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>யல்தேசம் ஒன்றில் தலைவியைப் பிரிந்திருப்பவன்<br /> தலை துவட்டும் வேளையில்<br /> தேங்காய்ப்பூ டவலில் சிக்கிய<br /> சிறுமுடி ஒன்றின் வழியே நீண்டு வளர்கின்றன<br /> கூந்தலிழை சிக்கிய நினைவுகள்.<br /> <br /> துரித உணவில் அவனுக்கு<br /> நீண்ட மயிர் தென்படாத அதே வேளையில்<br /> அவளுக்குப் புரையேறுவதாக நீட்டிக்கப்படுகிறது<br /> இருவருக்குமான ஆயுள்.<br /> <br /> கடைசியாக அவளிட்ட எச்சில் முத்தத்தை<br /> உலராமல் தேக்கிவைக்க<br /> வளர்க்கப்பட்டிருந்த தாடியின்<br /> இடையிடையே வெள்ளியாக முளைவிட்டு மின்னத் தொடங்கியிருந்தது<br /> பிரிதுயர் அன்பு.<br /> <br /> வேர்களைத் தேடி உதிர்ந்த வழுக்கையுடன்<br /> பாதி கட்டி பூசப்படாத வீடு திரும்பியவனை<br /> நரைத்த தலையோடு வரவேற்பவளின் அணைப்பில்<br /> பாதிகளால் முழுமை அடைகிறது<br /> கறுப்பு வெள்ளை வாழ்க்கை.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><br /> <strong>- சுபா செந்தில்குமார்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 102, 0);"><strong>பட்டாம்பூச்சி ஸ்டிக்கர்</strong></span><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> ஒ</strong></span>ரே வெட்டுதான்<br /> துண்டான ஆட்டின் தலையை<br /> குனிந்துகூடப் பார்க்கவில்லை அய்யனார்.<br /> விற்றுத் தீர்ந்த கூடையில்<br /> வீடு வந்தும் போகவில்லை பூவாசம்.<br /> சக்கரத்தில் நசுங்கிய பட்டாம்பூச்சியைக்<br /> கண்டுகொள்ளாமலேயே போகிறான்<br /> வாகனத்தில் பட்டாம்பூச்சி ஸ்டிக்கர் ஒட்டிய<br /> லாரிக்காரன்.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> - பிரபு</strong></span></p>.<p><span style="color: rgb(255, 102, 0);"><strong>குறுக்குக்கோடு</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>வி</strong></span>ருப்பமான பாடலொன்றின் <br /> இடையிசையில் இருந்து மெள்ள முன்னேறி <br /> முதல் வரியைப் பிடிப்பதுபோலன்றி, <br /> வழி தவறிய கன்றுக்குட்டியை <br /> தாய்ப்பசுவிடம் சேர்த்திட <br /> வளைந்து நெளிந்த பாதைகளில் பயணித்து <br /> நெருங்கிடும் வேளையில் <br /> தடையென வரும் குறுக்குக்கோட்டின் முன் <br /> திகைத்து நிற்கும் சிறுவனின் <br /> நகரும் பென்சில் முனையென <br /> உன் மீதான வெறுப்பின் <br /> எந்தவோர் இழையின் தொடர்ச்சியும் <br /> உனது பேரன்பின் சாகரத்தில் <br /> முடிவது கண்டு திகைக்கிறேன்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>- கே.ஸ்டாலின்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 102, 0);"><strong>வீடு</strong></span><br /> <br /> வாடகையில்<br /> 500 ரூபாய் உயர்த்தி<br /> கேட்கிறார் வீட்டுக்காரர்.<br /> அதிகம்தான் என்றாலும்<br /> ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.<br /> பரணில்,<br /> நிலத்தை அடகுவைத்து<br /> கடன் வாங்கிய பத்திரங்கள் இருக்கும் <br /> பெட்டிக்குப் பின்னே<br /> கூடுகட்டி குஞ்சு பொரித்திருக்கும்<br /> சிட்டுக்குருவிக்காகவாவது.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> - கி.ரவிக்குமார்</strong></span></p>