<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பழைய முகப்படக்காரி</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><em>த</em></strong></span><em>ன் பழைய புகைப்படத்தை <br /> பீரோவுக்குள்ளிருந்து கண்டெடுத்தவள்<br /> புதையுண்ட இளமை கிடைத்தவளாய் <br /> உற்றுப் பார்க்கிறாள்.</em></p>.<p><em>இப்போதில்லாத நீண்ட தலைமுடியின் <br /> இரட்டை ஜடைப் பின்னலை <br /> விரலால் தடவிப்பார்க்கிறாள்.<br /> <br /> தொலைத்ததற்காய் அப்பாவிடம் அடிவாங்கிக்கொடுத்த<br /> அசையாதிருக்கும் வலதுகாது ஜிமிக்கியை<br /> விரலால் சுண்டிவிட்டுச் சிரித்துக்கொள்கிறாள்.<br /> <br /> கடன்வாங்கி அணிந்திருந்த<br /> தோழியின் நீலநிறத் தாவணியில்<br /> நட்பின் வாசத்தை நுகர்கிறாள்.<br /> <br /> `ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற புகைப்படக்காரன் <br /> தவறவிட்டப் புன்னகையை<br /> நினைவூட்டிக்கொள்கிறாள்.<br /> <br /> அழுக்கேறிய தாலிக்கயிறு உரசி உண்டான<br /> கருத்தத் தழும்புகள் அறியா கழுத்தினில்<br /> மெல்லியத் தங்கச்சங்கிலி மினுங்கக் காண்கிறாள்.<br /> <br /> பழைய முகத்தின் கன்னங்களை வருடி<br /> ஏதோ ஒன்று தட்டுப்பட<br /> பெருமூச்சோடு நலம் விசாரிக்கிறாள்.<br /> `என்னடி நல்லாருக்கியா?’</em><br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong><br /> - ந.கன்னியக்குமார் </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பறவைகளாலான உயிர்க்கூடு</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><em>நி</em></strong></span><em>ன் நேசப் பார்வையை எதிர்கொண்ட<br /> ஐப்பசி அடைமழையின் குளிர்தினமொன்றில்தான்<br /> என்னுள் சிலீர் சிறகடித்தது <br /> அழகு பொருந்திய முதல் தேன்சிட்டு.<br /> தீராத ப்ரியங்கள் என்றென்றைக்கும் என்னிடம்<br /> நெடும்பயணமொன்றின் பின்னிரவில் காதல் குறிப்புணர்த்த </em></p>.<p><em><br /> என் கரங்களைத் தழுவிய நின் ஸ்பரிசத்திலிருந்து<br /> பறந்து வந்தன குதூகல மைனாக்கள்.<br /> யதேச்சையாக நெஞ்சு படபடக்கப் பகிர்ந்துகொண்ட<br /> நம் முதல் முத்தத்தை நினைவுறுத்திக்<br /> கிரீச்சிடும் பனங்காடைக்கு <br /> உன்னைப்போலவே குறும்பு அதிகம்.<br /> வெவ்வேறு பொழுதுகளின் ஊடல் நிமிடங்களைக்<br /> கரைசேர்த்தக் கரிச்சான்குஞ்சுகளிடம் <br /> அன்பைத் தவிர புகார் எதுவுமில்லை.<br /> கடந்த சித்திரையின் வன்கோடை தினமொன்றில்<br /> எதிர்பார்த்திராத நின் பிரிவின் அம்பு தைத்த<br /> மாடப்புறாவுக்கான ஆறுதல்மொழி பயனற்று <br /> சலசலக்கும் கழிவுநீராகுமென நினைத்தேனில்லை.<br /> அமைதியின் சமநிலை கலங்கும் வண்ணம்<br /> கூக்குரல்களின் ஓலம் அதிகமெடுத்த ஒருநாளில்,<br /> இதயக்கூண்டுடைத்துப் பதறிச் சிதறும் சிறுபறவைகள்<br /> உன் நினைவுகளாக இருந்ததைப்போலவே<br /> என் உயிராகவும் இருந்தது.</em><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- தர்மராஜ் பெரியசாமி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>குடமுழுக்கின் குதூகலம்</strong></span><br /> <em><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>கா</strong></span>லியான குடத்தை உனது கைகளால் <br /> அள்ளி நிரப்பும்போதும் <br /> நிரம்பிய குடத்தைக் கைகளால் அளைந்து தூக்கிச் செல்லும்போதும் <br /> உனது விரல்கள்பட்டு விலகிச்செல்லும் <br /> நதியில் கலந்திருப்பது <br /> ஒரு குடமுழுக்குக்குப் பின்பான குதூகலம்.<br /> <br /> நீ பின்னிவிட்டதாய் <br /> என் தங்கை சொன்ன அன்று முழுவதும் <br /> அவளது முதுகில் நிகழ்ந்துகொண்டிருந்தது <br /> இடைவிடாத ஒரு நாட்டியாஞ்சலி.<br /> <br /> சூடியபடி நீ சுற்றிவருவதைப் பார்க்கும் <br /> உனது விரல்கள் பட்ட வெற்றுக்காம்புகளில் <br /> முகிழ்த்திருப்பது <br /> ஒரு மோனலிசா புன்னகை.<br /> <br /> `பொட்டு எங்கடி?’ என்ற <br /> உன் அம்மாவின் கேள்விக்கு <br /> சட்டென நடுவிரலை நெற்றிக்கு மத்தியில் வைத்துத் தொட்டுப்பார்க்கிறாய் <br /> பொட்டென ஒரு கணம் மின்னிமறைகிறது <br /> அழகு மருதாணி பிறையொன்று.<br /> <br /> வெள்ளை மாவில்தான் <br /> கோலம் போட்டுச் செல்கிறாய் <br /> மிதிக்காமல் தாண்டிச் செல்வோரின் மனங்களில் <br /> உதிர்கின்றன வண்ணத் தோகைகள்.</em><br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong><br /> </strong></span><strong><span style="color: rgb(255, 102, 0);">- கே.ஸ்டாலின்</span></strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சாலை அருந்தும் காபி</strong></span><br /> <em><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நீ </strong></span>காபி ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருக்கிறாய்<br /> உன் குரல் கேட்டவுடனே<br /> கொதிக்கும் தண்ணீரில் தாவிக் குதிக்கின்றன<br /> காபித்தூளும் சர்க்கரையும்<br /> நான் முந்தி நீ முந்தி என.<br /> உன் மேஜைக்கு வந்த காபி தம்ளரிலிருந்தபடி <br /> கவிதை வரிகள் நிறைந்த உன் உதடுகளை<br /> கண்களை எடுக்காது பார்த்துக்கொண்டேயிருக்கின்றன<br /> நீ எடுப்பாய் உதடு குவிப்பாயென.<br /> சூடு தணியட்டுமென நீ அமர்ந்திருக்கும்<br /> அவகாசம் பொறுக்காது அழத்தொடங்கிய<br /> காபியின் கண்ணீர்த்துளிகளால்<br /> சூடு தணிகிறது கொஞ்சம் கொஞ்சமாய்.<br /> உன் உதடுகளை வாசித்த காபி<br /> அங்கே வசிக்கவேண்டுமெனத் தவமிருக்கிறது <br /> மின்விசிறிக் காற்றால் அழுகையைத் துடைத்தபடி.<br /> உன் பட்டுக்கைகளால் தொட்டெடுத்து<br /> அருந்தத் துவங்குகிறாய் <br /> உதடுகளில் பட்டும்படாமல்.<br /> தவமிருந்த காபி நினைத்த வரம் கிட்டாது <br /> அழத் தொடங்குகையில்<br /> நினைக்காத மோட்சம் பெறுகிறது<br /> ஒரு பேரதிர்ஷ்டமென.<br /> காபி அருந்திவிட்டு உணவகத்திலிருந்து<br /> வெளியேறி சாலையில் நடக்கிறாய்.<br /> உணவகம் சர்க்கரையற்ற காபியாகி<br /> கசக்கத் தொடங்குகிறது. <br /> இனி இனிப்பான காபியை <br /> அருந்தத் தொடங்கும் சாலை.<br /> </em><br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- சௌவி</strong></span></p>.<p style="text-align: center;"><em>ஓவியம்: சிவபாலன்</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காதல் ஆசீர்வாதம்</strong></span><br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>தி</strong></span>ருப்பதி வெங்கடாசலபதியைத் தரிசிக்க<br /> மகிழுந்தில் போய்க்கொண்டிருந்தோம்.<br /> அத்துவானக் காட்டில் திடீரென <br /> மகிழுந்தின் சக்கரம் கடைசி மூச்சை விட்டது.<br /> <br /> மரத்தின் நிழலில் <br /> தரிசன நேரத்தைப்பெற<br /> என்ன செய்யலாமென்று<br /> ஆலோசித்துக்கொண்டிருந்த <br /> எங்களைச் சட்டைசெய்யாமல்<br /> கடவுள் முன்சக்கரத்தின் மூச்சை சீராக்கிக்கொண்டிருந்தார்.<br /> கடவுள் நம் காதலை இதைவிட <br /> வேறு எப்படி ஆசீர்வதிக்க முடியும்?<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- ராம்ப்ரசாத்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>செளமியாவாகிய நான்…</strong></span><br /> <br /> ‘<span style="color: rgb(0, 0, 255);"><strong>சௌ</strong></span>மியா’ என்பது என் பெயர்</p>.<p><br /> எனினும் வீட்டில் ‘சௌமி’ என்றழைப்பர்.<br /> பள்ளிக்கூடத்தில் சௌமியா விஸ்வநாதன் <br /> எனப் பெயர் பதிவுசெய்யப்பட்டது.<br /> கல்லூரியில் முதலாமாண்டு <br /> இறுதித் தேர்வின் போதிலிருந்தே<br /> `சௌ’ என்றுதான் அழைத்தார்கள்.<br /> வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து<br /> `எஸ்.வி’ எனப் பெயரின் முதலெழுத்தானேன்.<br /> `அழகி’ `அம்மு’ `செல்லம்’ என <br /> அப்போதைய மனநிலையில்<br /> பெயர் வைத்துக்கொள்ளும் கணவன்,<br /> உயர்திணைக்கும் அஃறிணைக்கும்<br /> இடைப்பட்ட ஒன்றாய்<br /> `இந்தாரு’ என்று அழைக்கும்போது<br /> நான் கங்காருக் குட்டியாகிறேன் <br /> அவன் மடியில். <br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- ஆண்டன் பெனி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இதுவும் ஒரு காதல் கதைதான்</strong></span><br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>நி</strong></span>லையத்திலிருந்து கிளம்ப<br /> அரை மணி இருக்க <br /> காலிப் பேருந்தின் கடைசி இருக்கையில்<br /> ஜோடியொன்று ஒருவருக்கொருவர்<br /> இதழ்களைக் கவ்வியிழுத்திருந்தனர்<br /> <br /> அவள் கண்கள் மூடியிருக்க<br /> வேவு பார்த்தபடி மருகி உருண்டுகொண்டோடும் <br /> அவன் கண்களில் என் நிழல் விழ <br /> பதறிப் பிரிந்தனர்<br /> <br /> மார்கழியில் பிணைந்துதிரியும் நாய்களுக்கும் <br /> தொந்தரவு தராது நடக்கும் எனக்கா<br /> இந்தப் பழி பாவம்?<br /> <br /> திரும்பிப் பார்க்காது உடனிறங்கி<br /> கிளம்ப முக்கால் மணியிருக்கும்<br /> பேருந்தில் மாறிக்கொள்ள யத்தனித்து <br /> பின்வாசல் ஏறுகிறேன்<br /> <br /> அதுவும் காலியாகக் கிடக்க<br /> எனக்கு முன் ஏறிய அதே ஜோடி <br /> முன்னிருக்கையில் சரிந்தமர்ந்து<br /> அவசரகதி ஆயத்தமாகின்றனர்<br /> <br /> கடவுள் இன்று என்னைக்<br /> கல்லை எடுக்கவைக்காமல்<br /> ஓய மாட்டார் போலும்.<br /> <span style="color: rgb(255, 102, 0);"><br /> <strong>- ஸ்டாலின் சரவணன்</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பழைய முகப்படக்காரி</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><em>த</em></strong></span><em>ன் பழைய புகைப்படத்தை <br /> பீரோவுக்குள்ளிருந்து கண்டெடுத்தவள்<br /> புதையுண்ட இளமை கிடைத்தவளாய் <br /> உற்றுப் பார்க்கிறாள்.</em></p>.<p><em>இப்போதில்லாத நீண்ட தலைமுடியின் <br /> இரட்டை ஜடைப் பின்னலை <br /> விரலால் தடவிப்பார்க்கிறாள்.<br /> <br /> தொலைத்ததற்காய் அப்பாவிடம் அடிவாங்கிக்கொடுத்த<br /> அசையாதிருக்கும் வலதுகாது ஜிமிக்கியை<br /> விரலால் சுண்டிவிட்டுச் சிரித்துக்கொள்கிறாள்.<br /> <br /> கடன்வாங்கி அணிந்திருந்த<br /> தோழியின் நீலநிறத் தாவணியில்<br /> நட்பின் வாசத்தை நுகர்கிறாள்.<br /> <br /> `ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற புகைப்படக்காரன் <br /> தவறவிட்டப் புன்னகையை<br /> நினைவூட்டிக்கொள்கிறாள்.<br /> <br /> அழுக்கேறிய தாலிக்கயிறு உரசி உண்டான<br /> கருத்தத் தழும்புகள் அறியா கழுத்தினில்<br /> மெல்லியத் தங்கச்சங்கிலி மினுங்கக் காண்கிறாள்.<br /> <br /> பழைய முகத்தின் கன்னங்களை வருடி<br /> ஏதோ ஒன்று தட்டுப்பட<br /> பெருமூச்சோடு நலம் விசாரிக்கிறாள்.<br /> `என்னடி நல்லாருக்கியா?’</em><br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong><br /> - ந.கன்னியக்குமார் </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பறவைகளாலான உயிர்க்கூடு</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><em>நி</em></strong></span><em>ன் நேசப் பார்வையை எதிர்கொண்ட<br /> ஐப்பசி அடைமழையின் குளிர்தினமொன்றில்தான்<br /> என்னுள் சிலீர் சிறகடித்தது <br /> அழகு பொருந்திய முதல் தேன்சிட்டு.<br /> தீராத ப்ரியங்கள் என்றென்றைக்கும் என்னிடம்<br /> நெடும்பயணமொன்றின் பின்னிரவில் காதல் குறிப்புணர்த்த </em></p>.<p><em><br /> என் கரங்களைத் தழுவிய நின் ஸ்பரிசத்திலிருந்து<br /> பறந்து வந்தன குதூகல மைனாக்கள்.<br /> யதேச்சையாக நெஞ்சு படபடக்கப் பகிர்ந்துகொண்ட<br /> நம் முதல் முத்தத்தை நினைவுறுத்திக்<br /> கிரீச்சிடும் பனங்காடைக்கு <br /> உன்னைப்போலவே குறும்பு அதிகம்.<br /> வெவ்வேறு பொழுதுகளின் ஊடல் நிமிடங்களைக்<br /> கரைசேர்த்தக் கரிச்சான்குஞ்சுகளிடம் <br /> அன்பைத் தவிர புகார் எதுவுமில்லை.<br /> கடந்த சித்திரையின் வன்கோடை தினமொன்றில்<br /> எதிர்பார்த்திராத நின் பிரிவின் அம்பு தைத்த<br /> மாடப்புறாவுக்கான ஆறுதல்மொழி பயனற்று <br /> சலசலக்கும் கழிவுநீராகுமென நினைத்தேனில்லை.<br /> அமைதியின் சமநிலை கலங்கும் வண்ணம்<br /> கூக்குரல்களின் ஓலம் அதிகமெடுத்த ஒருநாளில்,<br /> இதயக்கூண்டுடைத்துப் பதறிச் சிதறும் சிறுபறவைகள்<br /> உன் நினைவுகளாக இருந்ததைப்போலவே<br /> என் உயிராகவும் இருந்தது.</em><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- தர்மராஜ் பெரியசாமி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>குடமுழுக்கின் குதூகலம்</strong></span><br /> <em><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>கா</strong></span>லியான குடத்தை உனது கைகளால் <br /> அள்ளி நிரப்பும்போதும் <br /> நிரம்பிய குடத்தைக் கைகளால் அளைந்து தூக்கிச் செல்லும்போதும் <br /> உனது விரல்கள்பட்டு விலகிச்செல்லும் <br /> நதியில் கலந்திருப்பது <br /> ஒரு குடமுழுக்குக்குப் பின்பான குதூகலம்.<br /> <br /> நீ பின்னிவிட்டதாய் <br /> என் தங்கை சொன்ன அன்று முழுவதும் <br /> அவளது முதுகில் நிகழ்ந்துகொண்டிருந்தது <br /> இடைவிடாத ஒரு நாட்டியாஞ்சலி.<br /> <br /> சூடியபடி நீ சுற்றிவருவதைப் பார்க்கும் <br /> உனது விரல்கள் பட்ட வெற்றுக்காம்புகளில் <br /> முகிழ்த்திருப்பது <br /> ஒரு மோனலிசா புன்னகை.<br /> <br /> `பொட்டு எங்கடி?’ என்ற <br /> உன் அம்மாவின் கேள்விக்கு <br /> சட்டென நடுவிரலை நெற்றிக்கு மத்தியில் வைத்துத் தொட்டுப்பார்க்கிறாய் <br /> பொட்டென ஒரு கணம் மின்னிமறைகிறது <br /> அழகு மருதாணி பிறையொன்று.<br /> <br /> வெள்ளை மாவில்தான் <br /> கோலம் போட்டுச் செல்கிறாய் <br /> மிதிக்காமல் தாண்டிச் செல்வோரின் மனங்களில் <br /> உதிர்கின்றன வண்ணத் தோகைகள்.</em><br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong><br /> </strong></span><strong><span style="color: rgb(255, 102, 0);">- கே.ஸ்டாலின்</span></strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சாலை அருந்தும் காபி</strong></span><br /> <em><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>நீ </strong></span>காபி ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருக்கிறாய்<br /> உன் குரல் கேட்டவுடனே<br /> கொதிக்கும் தண்ணீரில் தாவிக் குதிக்கின்றன<br /> காபித்தூளும் சர்க்கரையும்<br /> நான் முந்தி நீ முந்தி என.<br /> உன் மேஜைக்கு வந்த காபி தம்ளரிலிருந்தபடி <br /> கவிதை வரிகள் நிறைந்த உன் உதடுகளை<br /> கண்களை எடுக்காது பார்த்துக்கொண்டேயிருக்கின்றன<br /> நீ எடுப்பாய் உதடு குவிப்பாயென.<br /> சூடு தணியட்டுமென நீ அமர்ந்திருக்கும்<br /> அவகாசம் பொறுக்காது அழத்தொடங்கிய<br /> காபியின் கண்ணீர்த்துளிகளால்<br /> சூடு தணிகிறது கொஞ்சம் கொஞ்சமாய்.<br /> உன் உதடுகளை வாசித்த காபி<br /> அங்கே வசிக்கவேண்டுமெனத் தவமிருக்கிறது <br /> மின்விசிறிக் காற்றால் அழுகையைத் துடைத்தபடி.<br /> உன் பட்டுக்கைகளால் தொட்டெடுத்து<br /> அருந்தத் துவங்குகிறாய் <br /> உதடுகளில் பட்டும்படாமல்.<br /> தவமிருந்த காபி நினைத்த வரம் கிட்டாது <br /> அழத் தொடங்குகையில்<br /> நினைக்காத மோட்சம் பெறுகிறது<br /> ஒரு பேரதிர்ஷ்டமென.<br /> காபி அருந்திவிட்டு உணவகத்திலிருந்து<br /> வெளியேறி சாலையில் நடக்கிறாய்.<br /> உணவகம் சர்க்கரையற்ற காபியாகி<br /> கசக்கத் தொடங்குகிறது. <br /> இனி இனிப்பான காபியை <br /> அருந்தத் தொடங்கும் சாலை.<br /> </em><br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- சௌவி</strong></span></p>.<p style="text-align: center;"><em>ஓவியம்: சிவபாலன்</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காதல் ஆசீர்வாதம்</strong></span><br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>தி</strong></span>ருப்பதி வெங்கடாசலபதியைத் தரிசிக்க<br /> மகிழுந்தில் போய்க்கொண்டிருந்தோம்.<br /> அத்துவானக் காட்டில் திடீரென <br /> மகிழுந்தின் சக்கரம் கடைசி மூச்சை விட்டது.<br /> <br /> மரத்தின் நிழலில் <br /> தரிசன நேரத்தைப்பெற<br /> என்ன செய்யலாமென்று<br /> ஆலோசித்துக்கொண்டிருந்த <br /> எங்களைச் சட்டைசெய்யாமல்<br /> கடவுள் முன்சக்கரத்தின் மூச்சை சீராக்கிக்கொண்டிருந்தார்.<br /> கடவுள் நம் காதலை இதைவிட <br /> வேறு எப்படி ஆசீர்வதிக்க முடியும்?<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- ராம்ப்ரசாத்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>செளமியாவாகிய நான்…</strong></span><br /> <br /> ‘<span style="color: rgb(0, 0, 255);"><strong>சௌ</strong></span>மியா’ என்பது என் பெயர்</p>.<p><br /> எனினும் வீட்டில் ‘சௌமி’ என்றழைப்பர்.<br /> பள்ளிக்கூடத்தில் சௌமியா விஸ்வநாதன் <br /> எனப் பெயர் பதிவுசெய்யப்பட்டது.<br /> கல்லூரியில் முதலாமாண்டு <br /> இறுதித் தேர்வின் போதிலிருந்தே<br /> `சௌ’ என்றுதான் அழைத்தார்கள்.<br /> வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து<br /> `எஸ்.வி’ எனப் பெயரின் முதலெழுத்தானேன்.<br /> `அழகி’ `அம்மு’ `செல்லம்’ என <br /> அப்போதைய மனநிலையில்<br /> பெயர் வைத்துக்கொள்ளும் கணவன்,<br /> உயர்திணைக்கும் அஃறிணைக்கும்<br /> இடைப்பட்ட ஒன்றாய்<br /> `இந்தாரு’ என்று அழைக்கும்போது<br /> நான் கங்காருக் குட்டியாகிறேன் <br /> அவன் மடியில். <br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- ஆண்டன் பெனி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இதுவும் ஒரு காதல் கதைதான்</strong></span><br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>நி</strong></span>லையத்திலிருந்து கிளம்ப<br /> அரை மணி இருக்க <br /> காலிப் பேருந்தின் கடைசி இருக்கையில்<br /> ஜோடியொன்று ஒருவருக்கொருவர்<br /> இதழ்களைக் கவ்வியிழுத்திருந்தனர்<br /> <br /> அவள் கண்கள் மூடியிருக்க<br /> வேவு பார்த்தபடி மருகி உருண்டுகொண்டோடும் <br /> அவன் கண்களில் என் நிழல் விழ <br /> பதறிப் பிரிந்தனர்<br /> <br /> மார்கழியில் பிணைந்துதிரியும் நாய்களுக்கும் <br /> தொந்தரவு தராது நடக்கும் எனக்கா<br /> இந்தப் பழி பாவம்?<br /> <br /> திரும்பிப் பார்க்காது உடனிறங்கி<br /> கிளம்ப முக்கால் மணியிருக்கும்<br /> பேருந்தில் மாறிக்கொள்ள யத்தனித்து <br /> பின்வாசல் ஏறுகிறேன்<br /> <br /> அதுவும் காலியாகக் கிடக்க<br /> எனக்கு முன் ஏறிய அதே ஜோடி <br /> முன்னிருக்கையில் சரிந்தமர்ந்து<br /> அவசரகதி ஆயத்தமாகின்றனர்<br /> <br /> கடவுள் இன்று என்னைக்<br /> கல்லை எடுக்கவைக்காமல்<br /> ஓய மாட்டார் போலும்.<br /> <span style="color: rgb(255, 102, 0);"><br /> <strong>- ஸ்டாலின் சரவணன்</strong></span></p>