<p><em><span style="color: rgb(255, 0, 0);"><strong>வெ</strong></span>ளியேறிவிடுமாறு நிந்திக்கையில்<br /> மக்குவின் கண்களில்<br /> பேதைமை ஸ்தம்பித்தது.<br /> <br /> அதனுடைய முட்டாள்தனங்களைப்<br /> பட்டியலிடுகையில்<br /> சிறிய புதிய பொம்மைகளைக் <br /> காண்பதான பரவசம் அதன் முகத்தில்.<br /> <br /> மக்குவினாலான மன உளைச்சலை<br /> மோசமான வசவுகளாய் உதிர்க்கையில்<br /> மக்குவுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டது.<br /> <br /> இறுதியிலும் இறுதியாக<br /> அதன் முகத்திலறையும் விதம்<br /> கதவை மூடிவிட்ட பின்<br /> வெகுநேரம் வரை மக்குவின் நிழல்<br /> பூக்களற்றத் தொட்டிச்செடியிடம்<br /> தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தது.</em></p>
<p><em><span style="color: rgb(255, 0, 0);"><strong>வெ</strong></span>ளியேறிவிடுமாறு நிந்திக்கையில்<br /> மக்குவின் கண்களில்<br /> பேதைமை ஸ்தம்பித்தது.<br /> <br /> அதனுடைய முட்டாள்தனங்களைப்<br /> பட்டியலிடுகையில்<br /> சிறிய புதிய பொம்மைகளைக் <br /> காண்பதான பரவசம் அதன் முகத்தில்.<br /> <br /> மக்குவினாலான மன உளைச்சலை<br /> மோசமான வசவுகளாய் உதிர்க்கையில்<br /> மக்குவுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டது.<br /> <br /> இறுதியிலும் இறுதியாக<br /> அதன் முகத்திலறையும் விதம்<br /> கதவை மூடிவிட்ட பின்<br /> வெகுநேரம் வரை மக்குவின் நிழல்<br /> பூக்களற்றத் தொட்டிச்செடியிடம்<br /> தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தது.</em></p>