<p><em><span style="color: rgb(255, 0, 0);"><strong>நு</strong></span>ரைத்தப் பழங்கஞ்சியாய்ப்<br /> புளிப்பேறிய வயோதிகத்தின் இரவு<br /> ஒரு பாராங்கல்லாய் மார்மீது படுத்துறங்குகிறது<br /> எப்படி இறங்கச் சொல்ல...<br /> எப்படி இறக்கிவிட?<br /> <br /> பாதரசம்போன கண்ணாடி<br /> எனது முகத்தைக் காட்டி இன்றோடு<br /> இருபது வருடங்கள் ஆகிவிட்டன மகளே.<br /> கறையான் அரித்த<br /> நமது குடும்பப் புகைப்படத்திலும்<br /> நீ பார்த்திருக்கக்கூடும் துருவேறிய<br /> எனது மிருகக் கண்களை மட்டும்.<br /> <br /> `இடுப்புல ஆறு மாசம்<br /> வயித்துல மூணு மாசம்<br /> பப்பாளி, எள்ளு, அன்னாசிக்கு<br /> தப்பித் தளச்சவடி நீ' என்ற <br /> கதையைக் கேட்கும்போது<br /> என்னென்ன நினைத்திருப்பாய் மகளே?<br /> <br /> அப்படி என் வயிற்றைப் பார்க்காதே<br /> மயானத்துப் புழுக்கள் முண்டுகின்றன.<br /> அப்படி என் மார்பைப் பார்க்காதே<br /> சீழ் வடிகிறது.<br /> <br /> நான் ஒரு கொலையை இறக்கிவைத்துவிட்டேன்<br /> நீ உன் பிணத்தைச் சுமக்கிறாய்.<br /> <br /> மாசற்ற உன் கண்கள்கொண்டு<br /> அப்படி எனது கண்களைப் பார்க்காதே மகளே<br /> அதற்குப் பதில் மரணத்தை ஒரு மிடறாக்கிப்<br /> பருகக் கொடு.<br /> </em></p>
<p><em><span style="color: rgb(255, 0, 0);"><strong>நு</strong></span>ரைத்தப் பழங்கஞ்சியாய்ப்<br /> புளிப்பேறிய வயோதிகத்தின் இரவு<br /> ஒரு பாராங்கல்லாய் மார்மீது படுத்துறங்குகிறது<br /> எப்படி இறங்கச் சொல்ல...<br /> எப்படி இறக்கிவிட?<br /> <br /> பாதரசம்போன கண்ணாடி<br /> எனது முகத்தைக் காட்டி இன்றோடு<br /> இருபது வருடங்கள் ஆகிவிட்டன மகளே.<br /> கறையான் அரித்த<br /> நமது குடும்பப் புகைப்படத்திலும்<br /> நீ பார்த்திருக்கக்கூடும் துருவேறிய<br /> எனது மிருகக் கண்களை மட்டும்.<br /> <br /> `இடுப்புல ஆறு மாசம்<br /> வயித்துல மூணு மாசம்<br /> பப்பாளி, எள்ளு, அன்னாசிக்கு<br /> தப்பித் தளச்சவடி நீ' என்ற <br /> கதையைக் கேட்கும்போது<br /> என்னென்ன நினைத்திருப்பாய் மகளே?<br /> <br /> அப்படி என் வயிற்றைப் பார்க்காதே<br /> மயானத்துப் புழுக்கள் முண்டுகின்றன.<br /> அப்படி என் மார்பைப் பார்க்காதே<br /> சீழ் வடிகிறது.<br /> <br /> நான் ஒரு கொலையை இறக்கிவைத்துவிட்டேன்<br /> நீ உன் பிணத்தைச் சுமக்கிறாய்.<br /> <br /> மாசற்ற உன் கண்கள்கொண்டு<br /> அப்படி எனது கண்களைப் பார்க்காதே மகளே<br /> அதற்குப் பதில் மரணத்தை ஒரு மிடறாக்கிப்<br /> பருகக் கொடு.<br /> </em></p>