<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மாய பிம்பம்</strong></span><br /> <br /> <strong><span style="color: rgb(255, 102, 0);">சா</span></strong>வு நிகழ்ந்த வீட்டின்<br /> சுவரில் பதித்திருக்கும்<br /> சிறு கண்ணாடி வழியே<br /> கடந்துபோகிறவர்கள் <br /> காணுறாவண்ணம்<br /> தோன்றி மறைந்துகொண்டிருக்கிறது<br /> இறந்துபோனவனின் பிம்பம்.<br /> <br /> <strong><span style="color: rgb(0, 0, 255);">- கே.ஸ்டாலின்</span></strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>முகமறியா வேண்டுதல்</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>நே</strong></span>ற்று ரயிலடியில் இறந்துகிடந்த<br /> சித்ரா சவுண்டு சர்வீஸ் லோகுவின் நினைவுகள்தான்<br /> ஊரை அதிகமாய் ஆக்கிரமித்திருந்தன இன்று.<br /> `லோகானுக்கு சிலாக்கெடுத்த தொண்டைடா<br /> கத்துனான்னா ஏழூர் கேட்கும்’ என்றாள் அம்மா.<br /> `கீச்சுக்கத்தி பொன்னாம் பேரன்னா சும்மாவா’ என<br /> சிலாகித்தனர் ஊரில் சில கிழடுகட்டைகள்<br /> பால்யத்திலேயே பூவரச இலையில்<br /> கொண்டை ஹார்ன் செய்து விளையாடியதை <br /> நினைவுகூர்ந்தார் உடன் படித்த ஒருவர்.<br /> ரத்த சொந்தத்தில் எவர் பெயரும்<br /> சித்ரா என்றில்லாதபோது<br /> சவுண்டு சர்வீஸின் பெயர்க்காரணம்<br /> முழுவீச்சாய் அலசப்பட்டது அன்று மட்டும்.<br /> இறுதி வரை திருமணம் செய்யாது<br /> இறந்துபோன அவரை அறிந்தவர் எவரேனும்<br /> மனதார வேண்டியிருக்கலாம்<br /> `லோகுவின் ஆன்மா சித்ரா அடையட்டும்’ என்று.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- மகிவனி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இசை</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>பா</strong></span>ண்டியாட்டம்<br /> விளையாடத்தான் சென்றாள் ஜானவி<br /> அவள் தத்தித் தத்திக் குதிக்கையில்<br /> கேட்கிறது<br /> பியானோ இசை.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong> - ராம்ப்ரசாத்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கொக்கு</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>வ</strong></span>டிந்த குளத்தில்<br /> தண்ணீருமில்லை மீன்களுமில்லை<br /> பழக்கதோஷத்தில்<br /> வந்து வந்து ஏமாந்துபோகும்<br /> கொக்குக்காகவாவது<br /> ஒரு மழை வேண்டும்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- பிரபு</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கூடவரும் வைக்கோல்</strong></span><br /> <span style="color: rgb(255, 102, 0);"><br /> <strong>இ</strong></span>ருசக்கர வாகனத்தின் பின்சக்கரத்தில் <br /> சிக்கிக்கொண்டு கூடவரும்<br /> ஒரு வைக்கோல் ஞாபகப்படுத்துகிறது...<br /> ஒரு பச்சை வயலை<br /> நாற்று நட்டப் பெண்ணை<br /> சேறு குழப்பிய காளைகளை<br /> வாய்க்கால் சுமந்த தண்ணீரை<br /> தண்ணீருக்காக நடந்த உண்ணாவிரதத்தை<br /> வரப்பிலமர்ந்து உண்ட மத்தியானச் சோற்றை<br /> கோவணத்தோடு ஏரோட்டும் தாத்தாவை<br /> பயத்தை ஏற்படுத்திய சர்ப்பத்தை<br /> வளையல் கரங்களில் விளைந்திருந்த கருக்கருவாளை<br /> வேலாமரத்தில் தொங்கிய தூளியை<br /> மருந்து தெளிப்பானின் சுருதி பிசகாத ஓலத்தை<br /> வயல்களினூடே நேர்க்கோடுகளை <br /> நீட்டியிருக்கும் தண்டவாளத்தை<br /> தண்டவாளத்தில் எப்போதேனும்<br /> தடதடத்துப்போகும் ரயிலை<br /> அறுவடைக் காலத்து மாட்டுவண்டிகளை<br /> வீட்டு முற்றத்தில் கூடு கட்டும் சிட்டுக்குருவியை<br /> இன்னும் தள்ளுபடியாகாத கடனை<br /> வந்துசேராத மானியத்தை<br /> தூக்கிட்டுக்கொண்ட பரமசிவத்தை<br /> கட்டடங்கள் கொலைசெய்த வயல்வெளிகளை.<br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong><br /> - சௌவி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>யாகசாலை</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>கீ</strong></span>ழத்தெரு எம் தாய் மேலத்தெரு உம் தாய்<br /> அறுந்த செருப்பால் நம் தந்தைகளின் நட்பு<br /> நன்கு அறிந்திருந்தோம் நம் குடிகளை<br /> செங்குருதியில் நனைந்து மண்ணுள் உடல்கள்<br /> அன்பு நெஞ்சிற் தஞ்சம்கொண்டதால்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- பூர்ணா</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மாய பிம்பம்</strong></span><br /> <br /> <strong><span style="color: rgb(255, 102, 0);">சா</span></strong>வு நிகழ்ந்த வீட்டின்<br /> சுவரில் பதித்திருக்கும்<br /> சிறு கண்ணாடி வழியே<br /> கடந்துபோகிறவர்கள் <br /> காணுறாவண்ணம்<br /> தோன்றி மறைந்துகொண்டிருக்கிறது<br /> இறந்துபோனவனின் பிம்பம்.<br /> <br /> <strong><span style="color: rgb(0, 0, 255);">- கே.ஸ்டாலின்</span></strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>முகமறியா வேண்டுதல்</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>நே</strong></span>ற்று ரயிலடியில் இறந்துகிடந்த<br /> சித்ரா சவுண்டு சர்வீஸ் லோகுவின் நினைவுகள்தான்<br /> ஊரை அதிகமாய் ஆக்கிரமித்திருந்தன இன்று.<br /> `லோகானுக்கு சிலாக்கெடுத்த தொண்டைடா<br /> கத்துனான்னா ஏழூர் கேட்கும்’ என்றாள் அம்மா.<br /> `கீச்சுக்கத்தி பொன்னாம் பேரன்னா சும்மாவா’ என<br /> சிலாகித்தனர் ஊரில் சில கிழடுகட்டைகள்<br /> பால்யத்திலேயே பூவரச இலையில்<br /> கொண்டை ஹார்ன் செய்து விளையாடியதை <br /> நினைவுகூர்ந்தார் உடன் படித்த ஒருவர்.<br /> ரத்த சொந்தத்தில் எவர் பெயரும்<br /> சித்ரா என்றில்லாதபோது<br /> சவுண்டு சர்வீஸின் பெயர்க்காரணம்<br /> முழுவீச்சாய் அலசப்பட்டது அன்று மட்டும்.<br /> இறுதி வரை திருமணம் செய்யாது<br /> இறந்துபோன அவரை அறிந்தவர் எவரேனும்<br /> மனதார வேண்டியிருக்கலாம்<br /> `லோகுவின் ஆன்மா சித்ரா அடையட்டும்’ என்று.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- மகிவனி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இசை</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>பா</strong></span>ண்டியாட்டம்<br /> விளையாடத்தான் சென்றாள் ஜானவி<br /> அவள் தத்தித் தத்திக் குதிக்கையில்<br /> கேட்கிறது<br /> பியானோ இசை.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong> - ராம்ப்ரசாத்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கொக்கு</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>வ</strong></span>டிந்த குளத்தில்<br /> தண்ணீருமில்லை மீன்களுமில்லை<br /> பழக்கதோஷத்தில்<br /> வந்து வந்து ஏமாந்துபோகும்<br /> கொக்குக்காகவாவது<br /> ஒரு மழை வேண்டும்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- பிரபு</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கூடவரும் வைக்கோல்</strong></span><br /> <span style="color: rgb(255, 102, 0);"><br /> <strong>இ</strong></span>ருசக்கர வாகனத்தின் பின்சக்கரத்தில் <br /> சிக்கிக்கொண்டு கூடவரும்<br /> ஒரு வைக்கோல் ஞாபகப்படுத்துகிறது...<br /> ஒரு பச்சை வயலை<br /> நாற்று நட்டப் பெண்ணை<br /> சேறு குழப்பிய காளைகளை<br /> வாய்க்கால் சுமந்த தண்ணீரை<br /> தண்ணீருக்காக நடந்த உண்ணாவிரதத்தை<br /> வரப்பிலமர்ந்து உண்ட மத்தியானச் சோற்றை<br /> கோவணத்தோடு ஏரோட்டும் தாத்தாவை<br /> பயத்தை ஏற்படுத்திய சர்ப்பத்தை<br /> வளையல் கரங்களில் விளைந்திருந்த கருக்கருவாளை<br /> வேலாமரத்தில் தொங்கிய தூளியை<br /> மருந்து தெளிப்பானின் சுருதி பிசகாத ஓலத்தை<br /> வயல்களினூடே நேர்க்கோடுகளை <br /> நீட்டியிருக்கும் தண்டவாளத்தை<br /> தண்டவாளத்தில் எப்போதேனும்<br /> தடதடத்துப்போகும் ரயிலை<br /> அறுவடைக் காலத்து மாட்டுவண்டிகளை<br /> வீட்டு முற்றத்தில் கூடு கட்டும் சிட்டுக்குருவியை<br /> இன்னும் தள்ளுபடியாகாத கடனை<br /> வந்துசேராத மானியத்தை<br /> தூக்கிட்டுக்கொண்ட பரமசிவத்தை<br /> கட்டடங்கள் கொலைசெய்த வயல்வெளிகளை.<br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong><br /> - சௌவி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>யாகசாலை</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>கீ</strong></span>ழத்தெரு எம் தாய் மேலத்தெரு உம் தாய்<br /> அறுந்த செருப்பால் நம் தந்தைகளின் நட்பு<br /> நன்கு அறிந்திருந்தோம் நம் குடிகளை<br /> செங்குருதியில் நனைந்து மண்ணுள் உடல்கள்<br /> அன்பு நெஞ்சிற் தஞ்சம்கொண்டதால்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- பூர்ணா</strong></span></p>