<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மீட்சி</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>பே</strong></span>ருந்துப் பயணங்களில்<br /> சாலையோரம் நடந்துசெல்கையில்<br /> உறவினர் கூடியிருக்கும் விழாக்களில்<br /> கிடைக்கும் சிறுசிறு இடைவேளைகளில்<br /> தனியே இருக்கையில் என<br /> ஓயாமல் கைப்பேசியின் திரையையே <br /> பார்த்துக்கொண்டிப்பவளைப் பற்றி<br /> உங்களிடம் அநேகக் குற்றச்சாட்டுகள் இருக்கலாம்<br /> அவளிடமும் உங்களுக்குச் சொல்ல சில கதைகளுண்டு<br /> தகாதப் பார்வையைத் தவிர்க்கும் பாவனையாக <br /> தேவையற்று நீளும் உரையாடலைத்<br /> துண்டிக்கும் வழியாக<br /> யாரோ ஒருவரின் குறுஞ்செய்திக்காகக் <br /> காத்திருக்கும் தவிப்பாக<br /> நிரந்தரமாகக் காணாமல்போன ஒருவரின் ஞாபகப் படங்களாய் இருக்கலாம்<br /> அல்லது<br /> அது அவளுக்கு கிடைத்த <br /> ஒரேயொரு மீட்சியாகவும் இருக்கலாம்.</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- சத்யா வேலுசாமி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மாயமும் யதார்த்தமும்</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>ஹ</strong></span>ல்க் பொம்மையின் கரங்களையும்<br /> சூப்பர்மேனின் நெஞ்சையும்<br /> ஸ்பைடர்மேனின் கால்களையும்<br /> ராமானுஜனின் கண்ணாடியையும்<br /> ஒன்றிணைத்த ஓர் உருவத்தைத்<br /> திரையரங்கில் பார்த்துவிட்டு<br /> ஹல்க் ராமானுஜனாகவும்<br /> சூப்பர்மேன் ஸ்பைடர்மேனாகவும்<br /> ராமானுஜன் சூப்பர்மேனாகவும்<br /> ஸ்பைடர்மேன் ஹல்க்காகவும்<br /> திரையரங்குக்கு வெளியே<br /> நடந்துகொண்டிருந்தார்கள்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- ராம்ப்ரசாத்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தலைமான் வீடு</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>பி</strong></span>ரண்டையில் புளிவைத்து அரைத்துச் செய்யும்<br /> வெஞ்சனம் பிசைந்து சோறுண்ட நாளில்<br /> `இப்போது நன்கு பசியெடுக்கிறது’ என்றார் அப்பா.<br /> ரெட்டைச்சுழி உடம்பின் தேக்கு பலத்தைக் குறைத்து<br /> படுக்கையில் தள்ளிய நோய் <br /> ஓர் இலைச்சுருட்டுப் புழுவைப்போல் அவரை உறிஞ்சி எடுத்திருந்தது.<br /> அம்மியை இடுக்கிப் பிடித்திருந்த அம்மாவின் <br /> தொடைகளில் ஏறியிருந்தது அப்பாவை மீட்டெடுக்கும் உறுதி.<br /> குழவிக்கல்லில் நசுங்கிக் குழைந்த உப்பு மிளகு காரம் பூசி<br /> ஊறவைத்த முழு வெடக்கோழியில் இறங்கிக்கொண்டிருந்தது <br /> ஊரையே வளைத்து முடுக்கும் ருசி.<br /> காரம் தூக்கலாக இருக்கும்போது <br /> அப்பாவைச் சாப்பிடவைத்துப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.<br /> கறி பிடிக்காத இளைத்த என் உடம்பைத் தேற்றும் நோக்கில்<br /> சிறுதானியங்கள் விளையும் ஊருக்குச் சென்று<br /> கோழி வாங்கிவரும் அவர் சொல்வது...<br /> `அந்த ஊர் இன்னும் பச்சைப்பசேலென்று இருக்கிறது'.<br /> அப்படிப்பட்ட அப்பாவைத்தான் தூக்கிக் கொடுத்துவிடப் பார்த்தோம்.<br /> வீட்டின் தலைமான் கவலைக்கிடமாகும்போது தோன்றும்<br /> துர்நிமித்தங்கள் தரும் பயத்துடன்கூடிய துயரம்<br /> முட்டைகளோடு தவறிவிழும் கூட்டின் அருகிலேயே <br /> பறந்து தவிக்கும் பறவையின் நிலைக்குக் <br /> குடும்பத்தைத் தள்ளிவிடுகிறது.<br /> தன் மகனை உயிர்ப்பிக்க முலையூட்ட வருமாறு <br /> என்றோ இந்நிலத்துக்குள் உறங்கப்போய்விட்ட<br /> அவரது தாயிடம் வேண்டிக்கொண்டோம்.<br /> அடுத்த சில நாட்களில் நோய்மை அவர் கண்களின் வழியே <br /> இறங்கிப்போயிருந்த தடத்தைக் கண்டோம்.<br /> அவரின் வெளிறிய கண்களில் <br /> லேசாய் ரத்தக்கோடுகள் தெரியத் தொடங்கின.<br /> அப்பா அப்போது ஒரு புதிய பனங்கன்றென <br /> எழுந்து உட்கார்ந்திருந்தார். <br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- மௌனன் யாத்ரீகா</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மீட்சி</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>பே</strong></span>ருந்துப் பயணங்களில்<br /> சாலையோரம் நடந்துசெல்கையில்<br /> உறவினர் கூடியிருக்கும் விழாக்களில்<br /> கிடைக்கும் சிறுசிறு இடைவேளைகளில்<br /> தனியே இருக்கையில் என<br /> ஓயாமல் கைப்பேசியின் திரையையே <br /> பார்த்துக்கொண்டிப்பவளைப் பற்றி<br /> உங்களிடம் அநேகக் குற்றச்சாட்டுகள் இருக்கலாம்<br /> அவளிடமும் உங்களுக்குச் சொல்ல சில கதைகளுண்டு<br /> தகாதப் பார்வையைத் தவிர்க்கும் பாவனையாக <br /> தேவையற்று நீளும் உரையாடலைத்<br /> துண்டிக்கும் வழியாக<br /> யாரோ ஒருவரின் குறுஞ்செய்திக்காகக் <br /> காத்திருக்கும் தவிப்பாக<br /> நிரந்தரமாகக் காணாமல்போன ஒருவரின் ஞாபகப் படங்களாய் இருக்கலாம்<br /> அல்லது<br /> அது அவளுக்கு கிடைத்த <br /> ஒரேயொரு மீட்சியாகவும் இருக்கலாம்.</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- சத்யா வேலுசாமி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மாயமும் யதார்த்தமும்</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>ஹ</strong></span>ல்க் பொம்மையின் கரங்களையும்<br /> சூப்பர்மேனின் நெஞ்சையும்<br /> ஸ்பைடர்மேனின் கால்களையும்<br /> ராமானுஜனின் கண்ணாடியையும்<br /> ஒன்றிணைத்த ஓர் உருவத்தைத்<br /> திரையரங்கில் பார்த்துவிட்டு<br /> ஹல்க் ராமானுஜனாகவும்<br /> சூப்பர்மேன் ஸ்பைடர்மேனாகவும்<br /> ராமானுஜன் சூப்பர்மேனாகவும்<br /> ஸ்பைடர்மேன் ஹல்க்காகவும்<br /> திரையரங்குக்கு வெளியே<br /> நடந்துகொண்டிருந்தார்கள்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- ராம்ப்ரசாத்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தலைமான் வீடு</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>பி</strong></span>ரண்டையில் புளிவைத்து அரைத்துச் செய்யும்<br /> வெஞ்சனம் பிசைந்து சோறுண்ட நாளில்<br /> `இப்போது நன்கு பசியெடுக்கிறது’ என்றார் அப்பா.<br /> ரெட்டைச்சுழி உடம்பின் தேக்கு பலத்தைக் குறைத்து<br /> படுக்கையில் தள்ளிய நோய் <br /> ஓர் இலைச்சுருட்டுப் புழுவைப்போல் அவரை உறிஞ்சி எடுத்திருந்தது.<br /> அம்மியை இடுக்கிப் பிடித்திருந்த அம்மாவின் <br /> தொடைகளில் ஏறியிருந்தது அப்பாவை மீட்டெடுக்கும் உறுதி.<br /> குழவிக்கல்லில் நசுங்கிக் குழைந்த உப்பு மிளகு காரம் பூசி<br /> ஊறவைத்த முழு வெடக்கோழியில் இறங்கிக்கொண்டிருந்தது <br /> ஊரையே வளைத்து முடுக்கும் ருசி.<br /> காரம் தூக்கலாக இருக்கும்போது <br /> அப்பாவைச் சாப்பிடவைத்துப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.<br /> கறி பிடிக்காத இளைத்த என் உடம்பைத் தேற்றும் நோக்கில்<br /> சிறுதானியங்கள் விளையும் ஊருக்குச் சென்று<br /> கோழி வாங்கிவரும் அவர் சொல்வது...<br /> `அந்த ஊர் இன்னும் பச்சைப்பசேலென்று இருக்கிறது'.<br /> அப்படிப்பட்ட அப்பாவைத்தான் தூக்கிக் கொடுத்துவிடப் பார்த்தோம்.<br /> வீட்டின் தலைமான் கவலைக்கிடமாகும்போது தோன்றும்<br /> துர்நிமித்தங்கள் தரும் பயத்துடன்கூடிய துயரம்<br /> முட்டைகளோடு தவறிவிழும் கூட்டின் அருகிலேயே <br /> பறந்து தவிக்கும் பறவையின் நிலைக்குக் <br /> குடும்பத்தைத் தள்ளிவிடுகிறது.<br /> தன் மகனை உயிர்ப்பிக்க முலையூட்ட வருமாறு <br /> என்றோ இந்நிலத்துக்குள் உறங்கப்போய்விட்ட<br /> அவரது தாயிடம் வேண்டிக்கொண்டோம்.<br /> அடுத்த சில நாட்களில் நோய்மை அவர் கண்களின் வழியே <br /> இறங்கிப்போயிருந்த தடத்தைக் கண்டோம்.<br /> அவரின் வெளிறிய கண்களில் <br /> லேசாய் ரத்தக்கோடுகள் தெரியத் தொடங்கின.<br /> அப்பா அப்போது ஒரு புதிய பனங்கன்றென <br /> எழுந்து உட்கார்ந்திருந்தார். <br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- மௌனன் யாத்ரீகா</strong></span></p>