<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஓ</strong></span>வியா, ஒரு நாள் தன் அப்பாவுடன் கடற்கரைக்குச் சென்றிருந்தாள்.<br /> <br /> கடலும் வானமும் மிகவும் அழகாயிருந்தன.<br /> <br /> ‘‘வீட்டுக்குப் போகலாம்மா, வா’’ என்றார் அப்பா.<br /> <br /> ‘‘போப்பா, எனக்கு இன்னும் இந்தக் கடலைப் பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குப்பா’’ என்று சிணுங்கினாள் ஓவியா.</p>.<p>‘‘நீ பள்ளிக்கூடத்துக்குப் போகணும், நான் ஆபீஸுக்குப் போகணும், நேரம் ஆயிடுச்சே’’ என்றார் அப்பா.<br /> <br /> ‘‘அப்படின்னா நான் இந்தக் கடலை ஓவியமாக்கி என்னுடன் எடுத்து வருகிறேன் அப்பா’’ என்றாள் ஓவியா.<br /> <br /> ‘‘ஓ, அப்படியே செய்’’ என்றார் அப்பா.<br /> <br /> ‘‘அடடா, படம் வரைய என்னிடம் தாள் இல்லையே’’, என்று வருத்தப்பட்டாள் ஓவியா.<br /> <br /> ஆனால், அவளுடைய தலையை வருடியது குளிர்ந்த சாரல்.<br /> <br /> ‘‘இதோ, என்னுடைய நீலநிறத் தாள். எடுத்துக்கொள்’’ என்றது கடல்.<br /> <br /> ‘‘ஆனால், வரைவதற்குக் கலர் பென்சில்கள் இல்லையே.’’ <br /> <br /> ‘‘இதோ என்னுடைய ஏழு வண்ணங்களையும் எடுத்துக்கோ’’ என்று தந்தது வானவில்.<br /> <br /> ‘‘வைத்து எழுத அட்டை இல்லையே.’’<br /> <br /> ‘‘இதோ என்னைத் தருகிறேன்’’ என்றது கடற்கரை.<br /> <br /> ஓவியா துள்ளிக்குதித்து மகிழ்ச்சியுடன் கடலை அப்படியே ஓவியமாக வரையத் தொடங்கினாள்.<br /> <br /> எல்லாம் வரைந்தாயிற்று. ஆனால், ஒன்று மட்டும் வரைய முடியவில்லை.<br /> <br /> ‘‘அது என்ன?''<br /> <br /> ‘‘அந்த நேர்க்கோடுதான்.''<br /> <br /> ‘‘எந்த நேர்க்கோடு?’’<br /> <br /> ‘‘கடலையும் வானையும் இணைக்கும் நேர்க்கோடுதான்.’’ அது அந்தக் கோடியிலிருந்து இந்தக்கோடி வரை ஒரே நேராக இருந்தது. <br /> <br /> ஓவியா பென்சிலால் கோடு இழுத்துப் பார்த்தாள். நேராக வரவில்லை. ஏனெனில், அவளிடம் அளவுகோல் இல்லை. உடனே அழத் தொடங்கிவிட்டாள்.<br /> <br /> இதைப்பார்த்துக்கொண்டிருந்த பறவைக்கூட்டம், ‘‘கடலே, கடலே, எங்க ஓவியாவுக்கு அந்த நேர்கோட்டை அளவுகோலாகத் தாருங்களேன்’’ என்று பறவைகள் கேட்டன.<br /> <br /> ‘‘அதை மட்டும் தரமுடியாது’’ என்றன, கடலும் வானமும்.<br /> <br /> ஓவியா இன்னும் பெரிதாக அழத் தொடங்கினாள்.<br /> <br /> அதைப் பார்த்தவுடன் பறவைகள் அந்த நேர்க்கோட்டைத் தங்கள் அலகுகளால் கொத்தித் தூக்கின.<br /> <br /> ‘‘வேண்டாம்... பெரிய ஆபத்து! வேண்டாம்’’ என்று கத்தின கடலும் வானமும்.<br /> <br /> பறவைகள் அதை மதிக்காமல், அந்த நேர்க்கோட்டை உருவித் தூக்கிக்கொண்டு வந்து ஓவியாவிடம் கொடுத்தன. ஓவியாவும் அதை வாங்கி, தாளின் மீது வைத்து கோடு வரையத் தொடங்கினாள். <br /> <br /> ஆனால், எந்த இடத்தில் வரைவது? கடலைப் பார்த்தாள். அங்கே, கடலும் வானும் ஒன்றாகிக் குழம்பித் தெரிந்தன.<br /> <br /> ஏன் தெரியுமா? தடுப்புக்கோட்டை எடுத்தவுடன் எல்லாம் ஒன்றாகிப் போயின.<br /> <br /> ஓவியாவுக்கு ரொம்பவும் பயமாகிவிட்டது.<br /> <br /> ‘‘ஓ..!’’, என்று கத்தினாள். திடுக்கிட்டுக் கண் விழித்தாள். <br /> <br /> ‘‘அட, கனவா?’’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.<br /> <br /> இப்போது, ஓவியாவை அப்பா நிஜமாகவே கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். ஓவியா தேவையான தாள், அட்டை, பென்சில், ரப்பர், அளவுகோல் எல்லாம் எடுத்துக்கொண்டாள்.<br /> <br /> ஓவியத்தை வரைந்தாள் அவளே தலைப்பையும் எழுதினாள். <br /> <br /> கையில் இருக்குக் கடல்... இயற்கைக்கு ஒரு மடல்!</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஓ</strong></span>வியா, ஒரு நாள் தன் அப்பாவுடன் கடற்கரைக்குச் சென்றிருந்தாள்.<br /> <br /> கடலும் வானமும் மிகவும் அழகாயிருந்தன.<br /> <br /> ‘‘வீட்டுக்குப் போகலாம்மா, வா’’ என்றார் அப்பா.<br /> <br /> ‘‘போப்பா, எனக்கு இன்னும் இந்தக் கடலைப் பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குப்பா’’ என்று சிணுங்கினாள் ஓவியா.</p>.<p>‘‘நீ பள்ளிக்கூடத்துக்குப் போகணும், நான் ஆபீஸுக்குப் போகணும், நேரம் ஆயிடுச்சே’’ என்றார் அப்பா.<br /> <br /> ‘‘அப்படின்னா நான் இந்தக் கடலை ஓவியமாக்கி என்னுடன் எடுத்து வருகிறேன் அப்பா’’ என்றாள் ஓவியா.<br /> <br /> ‘‘ஓ, அப்படியே செய்’’ என்றார் அப்பா.<br /> <br /> ‘‘அடடா, படம் வரைய என்னிடம் தாள் இல்லையே’’, என்று வருத்தப்பட்டாள் ஓவியா.<br /> <br /> ஆனால், அவளுடைய தலையை வருடியது குளிர்ந்த சாரல்.<br /> <br /> ‘‘இதோ, என்னுடைய நீலநிறத் தாள். எடுத்துக்கொள்’’ என்றது கடல்.<br /> <br /> ‘‘ஆனால், வரைவதற்குக் கலர் பென்சில்கள் இல்லையே.’’ <br /> <br /> ‘‘இதோ என்னுடைய ஏழு வண்ணங்களையும் எடுத்துக்கோ’’ என்று தந்தது வானவில்.<br /> <br /> ‘‘வைத்து எழுத அட்டை இல்லையே.’’<br /> <br /> ‘‘இதோ என்னைத் தருகிறேன்’’ என்றது கடற்கரை.<br /> <br /> ஓவியா துள்ளிக்குதித்து மகிழ்ச்சியுடன் கடலை அப்படியே ஓவியமாக வரையத் தொடங்கினாள்.<br /> <br /> எல்லாம் வரைந்தாயிற்று. ஆனால், ஒன்று மட்டும் வரைய முடியவில்லை.<br /> <br /> ‘‘அது என்ன?''<br /> <br /> ‘‘அந்த நேர்க்கோடுதான்.''<br /> <br /> ‘‘எந்த நேர்க்கோடு?’’<br /> <br /> ‘‘கடலையும் வானையும் இணைக்கும் நேர்க்கோடுதான்.’’ அது அந்தக் கோடியிலிருந்து இந்தக்கோடி வரை ஒரே நேராக இருந்தது. <br /> <br /> ஓவியா பென்சிலால் கோடு இழுத்துப் பார்த்தாள். நேராக வரவில்லை. ஏனெனில், அவளிடம் அளவுகோல் இல்லை. உடனே அழத் தொடங்கிவிட்டாள்.<br /> <br /> இதைப்பார்த்துக்கொண்டிருந்த பறவைக்கூட்டம், ‘‘கடலே, கடலே, எங்க ஓவியாவுக்கு அந்த நேர்கோட்டை அளவுகோலாகத் தாருங்களேன்’’ என்று பறவைகள் கேட்டன.<br /> <br /> ‘‘அதை மட்டும் தரமுடியாது’’ என்றன, கடலும் வானமும்.<br /> <br /> ஓவியா இன்னும் பெரிதாக அழத் தொடங்கினாள்.<br /> <br /> அதைப் பார்த்தவுடன் பறவைகள் அந்த நேர்க்கோட்டைத் தங்கள் அலகுகளால் கொத்தித் தூக்கின.<br /> <br /> ‘‘வேண்டாம்... பெரிய ஆபத்து! வேண்டாம்’’ என்று கத்தின கடலும் வானமும்.<br /> <br /> பறவைகள் அதை மதிக்காமல், அந்த நேர்க்கோட்டை உருவித் தூக்கிக்கொண்டு வந்து ஓவியாவிடம் கொடுத்தன. ஓவியாவும் அதை வாங்கி, தாளின் மீது வைத்து கோடு வரையத் தொடங்கினாள். <br /> <br /> ஆனால், எந்த இடத்தில் வரைவது? கடலைப் பார்த்தாள். அங்கே, கடலும் வானும் ஒன்றாகிக் குழம்பித் தெரிந்தன.<br /> <br /> ஏன் தெரியுமா? தடுப்புக்கோட்டை எடுத்தவுடன் எல்லாம் ஒன்றாகிப் போயின.<br /> <br /> ஓவியாவுக்கு ரொம்பவும் பயமாகிவிட்டது.<br /> <br /> ‘‘ஓ..!’’, என்று கத்தினாள். திடுக்கிட்டுக் கண் விழித்தாள். <br /> <br /> ‘‘அட, கனவா?’’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.<br /> <br /> இப்போது, ஓவியாவை அப்பா நிஜமாகவே கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். ஓவியா தேவையான தாள், அட்டை, பென்சில், ரப்பர், அளவுகோல் எல்லாம் எடுத்துக்கொண்டாள்.<br /> <br /> ஓவியத்தை வரைந்தாள் அவளே தலைப்பையும் எழுதினாள். <br /> <br /> கையில் இருக்குக் கடல்... இயற்கைக்கு ஒரு மடல்!</p>