<p><strong><span style="color: rgb(255, 0, 0);">கொ</span></strong>டும் வெம்மையில் நகரத்தின் ஒளிச்சிதறல்கள்<br /> எரிக்கும் ஒளிக்கீற்றென மாற்றிவிடும் போலிருந்தது<br /> பசுமையை மரங்களிலிருந்து கருணை துளியுமின்றி<br /> எடுத்துப்போயிருந்தது ஆகாயச் சுடர்<br /> நிலமெங்கும் சுனைகளை பாலைவன வடிவிற்கு<br /> செய்திருந்தது கோடை<br /> தாகமெடுத்த பறவைகள் சிதைந்துகிடந்த நதிகளில்<br /> செத்த மீன்களிடையே நின்றிருந்தன<br /> சூரியன் நிரம்பிய குடங்களுடன் நீர் தேடிய பெண்கள்<br /> வறண்ட நாவுகளில் உழன்றுகொண்டிருந்தனர்<br /> வயலெங்கும் முடிந்த அறுவடையின் மீந்த சருகுகள்<br /> மழைக்கான பாடலைப் பாடுவதுபோலிருந்தது<br /> ஈரமற்ற வெளியில் பிளந்திருந்த மண் பரப்பில்<br /> நெற்பயிர்களின் கனவுகள் ஆழப் புதைந்திருந்தன<br /> கட்டடங்கள் முளைத்த வெளியெங்கும் இறந்துவிட்ட<br /> மரவுடல்கள் தழைக்க வழியற்றிருந்தன<br /> தருக்களைக் கொன்றுவிட்டு கருமுகில்கள் திரளுமெனக்<br /> காத்திருக்கிறது பைத்தியக்காரப் பேருலகு.</p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">கொ</span></strong>டும் வெம்மையில் நகரத்தின் ஒளிச்சிதறல்கள்<br /> எரிக்கும் ஒளிக்கீற்றென மாற்றிவிடும் போலிருந்தது<br /> பசுமையை மரங்களிலிருந்து கருணை துளியுமின்றி<br /> எடுத்துப்போயிருந்தது ஆகாயச் சுடர்<br /> நிலமெங்கும் சுனைகளை பாலைவன வடிவிற்கு<br /> செய்திருந்தது கோடை<br /> தாகமெடுத்த பறவைகள் சிதைந்துகிடந்த நதிகளில்<br /> செத்த மீன்களிடையே நின்றிருந்தன<br /> சூரியன் நிரம்பிய குடங்களுடன் நீர் தேடிய பெண்கள்<br /> வறண்ட நாவுகளில் உழன்றுகொண்டிருந்தனர்<br /> வயலெங்கும் முடிந்த அறுவடையின் மீந்த சருகுகள்<br /> மழைக்கான பாடலைப் பாடுவதுபோலிருந்தது<br /> ஈரமற்ற வெளியில் பிளந்திருந்த மண் பரப்பில்<br /> நெற்பயிர்களின் கனவுகள் ஆழப் புதைந்திருந்தன<br /> கட்டடங்கள் முளைத்த வெளியெங்கும் இறந்துவிட்ட<br /> மரவுடல்கள் தழைக்க வழியற்றிருந்தன<br /> தருக்களைக் கொன்றுவிட்டு கருமுகில்கள் திரளுமெனக்<br /> காத்திருக்கிறது பைத்தியக்காரப் பேருலகு.</p>