<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ரயிலோட்டும் கட்டெறும்புகள்</strong></span><br /> <br /> <strong>நீ</strong>ளும் தண்டவாளத்தில்<br /> ரயில் வராத நேரத்தில்<br /> ரயிலோட்டும் கட்டெறும்புகள்<br /> அதிர்வுகளற்று அதனதன் தூரம் கடக்கின்றன<br /> ஏதேதோ தூக்கிச்செல்லும் எறும்புகள்<br /> சரக்கு ரயிலாகி<br /> உணவைக் கடத்துகின்றன<br /> ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு<br /> ரயில் நிலையங்களற்ற<br /> இந்த ரயில் பயணத்தில்<br /> எறும்புகளே பயணிகளாகவுமிருக்கின்றன<br /> ரயிலாகவுமிருக்கின்றன<br /> பச்சைக்கொடியும் சிவப்புக்கொடியுமற்ற<br /> பயணம்<br /> இரவிலும் பகலிலும்<br /> தொய்வின்றித் தொடர்கிறது<br /> எறும்புகளின் தண்டவாளப் பயணத்துக்கு<br /> பகலில் சூரியனும் இரவில் நட்சத்திரங்களும்<br /> வெளிச்சத் துணையிருப்பதாய்<br /> பெருமை பீற்றுவதை நிராகரித்துவிட்டு<br /> மேகங்கள் வானத்தை மூடிய இரவிலும்<br /> வேகம் குறையாது பயணிக்கின்றன எறும்புகள்<br /> தண்டவாளத்தைத் தாண்டிக் கடக்கும் பொழுதில்<br /> மனசு புகுந்து எழுத்துக்களான எறும்புகள்<br /> கண்ணீர்த்துளிகளாகின்றன<br /> தூரத்தே ரயில்வரும் ஓசை கேட்கிறது<br /> <strong><br /> - சௌவி</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காட்டு விலங்கு </strong></span></p>.<p>ஒரு சிறிய ஓணானைப்போல,<br /> ஒரு சிறிய நத்தையைப்போல,<br /> ஒரு சிறிய எறும்பைப்போல,<br /> ஒரு சிறிய அணிலைப்போல,<br /> அந்த காட்டில்<br /> மழை நீரும்<br /> ஓர் விலங்கைப்போல<br /> அங்குமிங்கும் <br /> ஓடிக்கொண்டிருக்கிறது...<br /> <strong><br /> - ராம்பிரசாத்</strong><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> கிராமம்</strong></span><br /> <br /> <strong>சு</strong>வர் தாண்டி வந்த எலுமிச்சை மரத்தை<br /> வேரோடு பிடுங்கச் சொல்லி<br /> பேச்சுவாக்கில் வலுத்த சண்டையில்<br /> பேச்சு போனது பக்கத்து வீட்டாரோடு.<br /> காய் முற்றி விழுவதாய்<br /> அடியோடு தென்னை மரத்தை<br /> வெட்டச் சொல்லிப் போட்ட சண்டையில்<br /> வெகுநாள்களாய் பேசுவதில்லை பின் வீட்டாரோடு.<br /> குவித்துச் சேர்த்துக் கூட்டிய குப்பைகள்<br /> காற்றில் பறந்து வீட்டுக்குள் விழுவதாய்<br /> எப்போதும் பேசிக்கொள்வதில்லை எதிர் வீட்டாரோடு.<br /> நாங்கள் பேசுகிறோம் <br /> நகரத்தில் அன்னியோன்யம் இல்லை என்று.<br /> <br /> <strong>- எஸ்.நடராஜன்</strong><br /> <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>கூடவே வெளியேறுபவன்</strong></span></p>.<p><strong>இ</strong>றந்தவனோடு<br /> என்றோ நீங்கள் சேர்ந்து<br /> உணவருந்திய உணவகத்தினுள்<br /> தற்செயலாகத்தான்<br /> நுழைகிறீர்கள்<br /> நினைவுகள் பின்னோக்கி இழுக்க குறிப்பாக<br /> அதே இருக்கையை<br /> தேர்ந்தெடுக்கிறீர்கள்<br /> செரிக்காத அவனது<br /> நினைவுகளை நீங்கள்<br /> விழுங்கிக்கொண்டிருக்க<br /> பக்கத்தில் வந்தமரும் ஒருவர் அவனுக்குப்பிடித்த<br /> அதே உணவை<br /> எடுத்துவரப் பணிக்கையில்<br /> சட்டென இறந்தவனின்<br /> சாயல் கொள்கிறார் <br /> கட்டணத்தை கொடுத்துவிட்டு இப்போது<br /> வெளியேறிக்கொண்டிருப்பது நிச்சயமாக நீங்கள்<br /> மட்டுமல்ல.<br /> <strong><br /> - கே.ஸ்டாலின்</strong><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>பறவை</strong></span></p>.<p>நீண்ட நேரமாக<br /> இடைஞ்சலாக இருந்த<br /> அந்தப் பறவையை<br /> என் ஜன்னலில் இருந்து<br /> விரட்டி விட்டு விட்டேன்..<br /> ம்ம்..<br /> இப்போதும்<br /> இடைஞ்சலாகத்தான்<br /> இருக்கிறது.<br /> <br /> <strong>- கிருத்திகா தாஸ்</strong></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ரயிலோட்டும் கட்டெறும்புகள்</strong></span><br /> <br /> <strong>நீ</strong>ளும் தண்டவாளத்தில்<br /> ரயில் வராத நேரத்தில்<br /> ரயிலோட்டும் கட்டெறும்புகள்<br /> அதிர்வுகளற்று அதனதன் தூரம் கடக்கின்றன<br /> ஏதேதோ தூக்கிச்செல்லும் எறும்புகள்<br /> சரக்கு ரயிலாகி<br /> உணவைக் கடத்துகின்றன<br /> ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு<br /> ரயில் நிலையங்களற்ற<br /> இந்த ரயில் பயணத்தில்<br /> எறும்புகளே பயணிகளாகவுமிருக்கின்றன<br /> ரயிலாகவுமிருக்கின்றன<br /> பச்சைக்கொடியும் சிவப்புக்கொடியுமற்ற<br /> பயணம்<br /> இரவிலும் பகலிலும்<br /> தொய்வின்றித் தொடர்கிறது<br /> எறும்புகளின் தண்டவாளப் பயணத்துக்கு<br /> பகலில் சூரியனும் இரவில் நட்சத்திரங்களும்<br /> வெளிச்சத் துணையிருப்பதாய்<br /> பெருமை பீற்றுவதை நிராகரித்துவிட்டு<br /> மேகங்கள் வானத்தை மூடிய இரவிலும்<br /> வேகம் குறையாது பயணிக்கின்றன எறும்புகள்<br /> தண்டவாளத்தைத் தாண்டிக் கடக்கும் பொழுதில்<br /> மனசு புகுந்து எழுத்துக்களான எறும்புகள்<br /> கண்ணீர்த்துளிகளாகின்றன<br /> தூரத்தே ரயில்வரும் ஓசை கேட்கிறது<br /> <strong><br /> - சௌவி</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காட்டு விலங்கு </strong></span></p>.<p>ஒரு சிறிய ஓணானைப்போல,<br /> ஒரு சிறிய நத்தையைப்போல,<br /> ஒரு சிறிய எறும்பைப்போல,<br /> ஒரு சிறிய அணிலைப்போல,<br /> அந்த காட்டில்<br /> மழை நீரும்<br /> ஓர் விலங்கைப்போல<br /> அங்குமிங்கும் <br /> ஓடிக்கொண்டிருக்கிறது...<br /> <strong><br /> - ராம்பிரசாத்</strong><br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> கிராமம்</strong></span><br /> <br /> <strong>சு</strong>வர் தாண்டி வந்த எலுமிச்சை மரத்தை<br /> வேரோடு பிடுங்கச் சொல்லி<br /> பேச்சுவாக்கில் வலுத்த சண்டையில்<br /> பேச்சு போனது பக்கத்து வீட்டாரோடு.<br /> காய் முற்றி விழுவதாய்<br /> அடியோடு தென்னை மரத்தை<br /> வெட்டச் சொல்லிப் போட்ட சண்டையில்<br /> வெகுநாள்களாய் பேசுவதில்லை பின் வீட்டாரோடு.<br /> குவித்துச் சேர்த்துக் கூட்டிய குப்பைகள்<br /> காற்றில் பறந்து வீட்டுக்குள் விழுவதாய்<br /> எப்போதும் பேசிக்கொள்வதில்லை எதிர் வீட்டாரோடு.<br /> நாங்கள் பேசுகிறோம் <br /> நகரத்தில் அன்னியோன்யம் இல்லை என்று.<br /> <br /> <strong>- எஸ்.நடராஜன்</strong><br /> <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>கூடவே வெளியேறுபவன்</strong></span></p>.<p><strong>இ</strong>றந்தவனோடு<br /> என்றோ நீங்கள் சேர்ந்து<br /> உணவருந்திய உணவகத்தினுள்<br /> தற்செயலாகத்தான்<br /> நுழைகிறீர்கள்<br /> நினைவுகள் பின்னோக்கி இழுக்க குறிப்பாக<br /> அதே இருக்கையை<br /> தேர்ந்தெடுக்கிறீர்கள்<br /> செரிக்காத அவனது<br /> நினைவுகளை நீங்கள்<br /> விழுங்கிக்கொண்டிருக்க<br /> பக்கத்தில் வந்தமரும் ஒருவர் அவனுக்குப்பிடித்த<br /> அதே உணவை<br /> எடுத்துவரப் பணிக்கையில்<br /> சட்டென இறந்தவனின்<br /> சாயல் கொள்கிறார் <br /> கட்டணத்தை கொடுத்துவிட்டு இப்போது<br /> வெளியேறிக்கொண்டிருப்பது நிச்சயமாக நீங்கள்<br /> மட்டுமல்ல.<br /> <strong><br /> - கே.ஸ்டாலின்</strong><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>பறவை</strong></span></p>.<p>நீண்ட நேரமாக<br /> இடைஞ்சலாக இருந்த<br /> அந்தப் பறவையை<br /> என் ஜன்னலில் இருந்து<br /> விரட்டி விட்டு விட்டேன்..<br /> ம்ம்..<br /> இப்போதும்<br /> இடைஞ்சலாகத்தான்<br /> இருக்கிறது.<br /> <br /> <strong>- கிருத்திகா தாஸ்</strong></p>