<p><strong><span style="color: rgb(255, 0, 0);">நீ</span></strong>ங்களாகவே உங்கள் கோவணத்தை<br /> உருவியெறிந்ததன் மூலம்<br /> கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததோடு<br /> கஜானாவிற்கு வருமான இழப்பையும் ஏற்படுத்தியதற்காக<br /> உங்கள்மீது கடுங்கோபத்திலிருக்கிறது அரசாங்கம்</p>.<p>உல்லாசம் பீறிடும் கேளிக்கைக்கான ஆவலில்<br /> தன் பரிவாரத்தோடு<br /> உப்பரிகை மாடத்திலிருந்து<br /> மைதானத்தைப் பார்வையிடும் மன்னர்பிரானுக்கு<br /> துயரங்களும் குமுறல்களுமான மன்றாடுதலை<br /> உயிருருகச் சொல்வதற்கு ஒத்திகைப் பார்ப்பதன் மூலம்<br /> மற்றுமொரு குற்றத்தையும் இழைத்தவராகிவிடாதீர்கள்<br /> <br /> தின்பதற்கு எலியும் குடிப்பதற்கு மூத்திரமும்<br /> தட்டுப்பாடின்றி கிடைக்கும் இத்தேசத்துக்கு<br /> விசுவாசம் காட்டும் வாய்ப்புகளை<br /> வேண்டுமென்றே தவறவிடுகிற நீங்கள்<br /> விளைநிலம் வெள்ளாமை என்று உச்சரித்து<br /> தேசவிரோதத்தின் அடர்த்தியை ஏன் கூட்டுகிறீர்கள்<br /> <br /> பிடில் வாசித்துக்கொண்டிருப்பதில்<br /> மன்னரோடு<br /> மக்களும் போட்டியிட்டுவரும் நாட்டில்<br /> சூழும் இக்கொடுநெருப்பை அணைக்க<br /> யாரும் வரப்போவதில்லை<br /> பொசுக்கும் சூட்டுக்குள் சிக்கித் தவிப்போரே<br /> சொந்தக்காலில் தப்பி வாருங்கள்<br /> <br /> கிளம்பிப்போன தடம் மறந்துப்போவதற்குள்<br /> சொந்த ஊர் திரும்புங்கள்<br /> பாளம்பாளமாய் வெடித்துக்கிடக்கும் இந்தப் பாழ்நிலத்தில்<br /> பட்டொளி வீசி பறக்கும்படியாய் நட்டுவையுங்கள்<br /> நம் தேசியக்கொடியை<br /> ஜப்தி செய்ய வருவோரின் கழுத்தை இறுக்குவதற்காவது<br /> அது தேவைப்படும்.</p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">நீ</span></strong>ங்களாகவே உங்கள் கோவணத்தை<br /> உருவியெறிந்ததன் மூலம்<br /> கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததோடு<br /> கஜானாவிற்கு வருமான இழப்பையும் ஏற்படுத்தியதற்காக<br /> உங்கள்மீது கடுங்கோபத்திலிருக்கிறது அரசாங்கம்</p>.<p>உல்லாசம் பீறிடும் கேளிக்கைக்கான ஆவலில்<br /> தன் பரிவாரத்தோடு<br /> உப்பரிகை மாடத்திலிருந்து<br /> மைதானத்தைப் பார்வையிடும் மன்னர்பிரானுக்கு<br /> துயரங்களும் குமுறல்களுமான மன்றாடுதலை<br /> உயிருருகச் சொல்வதற்கு ஒத்திகைப் பார்ப்பதன் மூலம்<br /> மற்றுமொரு குற்றத்தையும் இழைத்தவராகிவிடாதீர்கள்<br /> <br /> தின்பதற்கு எலியும் குடிப்பதற்கு மூத்திரமும்<br /> தட்டுப்பாடின்றி கிடைக்கும் இத்தேசத்துக்கு<br /> விசுவாசம் காட்டும் வாய்ப்புகளை<br /> வேண்டுமென்றே தவறவிடுகிற நீங்கள்<br /> விளைநிலம் வெள்ளாமை என்று உச்சரித்து<br /> தேசவிரோதத்தின் அடர்த்தியை ஏன் கூட்டுகிறீர்கள்<br /> <br /> பிடில் வாசித்துக்கொண்டிருப்பதில்<br /> மன்னரோடு<br /> மக்களும் போட்டியிட்டுவரும் நாட்டில்<br /> சூழும் இக்கொடுநெருப்பை அணைக்க<br /> யாரும் வரப்போவதில்லை<br /> பொசுக்கும் சூட்டுக்குள் சிக்கித் தவிப்போரே<br /> சொந்தக்காலில் தப்பி வாருங்கள்<br /> <br /> கிளம்பிப்போன தடம் மறந்துப்போவதற்குள்<br /> சொந்த ஊர் திரும்புங்கள்<br /> பாளம்பாளமாய் வெடித்துக்கிடக்கும் இந்தப் பாழ்நிலத்தில்<br /> பட்டொளி வீசி பறக்கும்படியாய் நட்டுவையுங்கள்<br /> நம் தேசியக்கொடியை<br /> ஜப்தி செய்ய வருவோரின் கழுத்தை இறுக்குவதற்காவது<br /> அது தேவைப்படும்.</p>