<p><strong>1.</strong><br /> மரத்தினடியில் முளைத்து<br /> சாயங்காலம் வரையிலும்<br /> சிமிட்டிக்கொண்டிருக்கின்றன<br /> வெயில் எழுப்பிய<br /> நிலத்தின் கண்கள்.<br /> <br /> <strong>2.</strong><br /> இலைகள் றெக்கைகள்<br /> ஒவ்வொன்றினடியிலும்<br /> ஓடிவந்து பதுங்கிக்கொண்டது நிழல்.<br /> தற்போது<br /> மரத்தை வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது<br /> வெயில்.</p>.<p><strong>3.</strong><br /> ஆடி<br /> அசைந்து<br /> மிதந்து<br /> பூமி சேர்ந்து<br /> அத்தனையழகாய்<br /> மரணத்தை வாழ்கிறது<br /> சருகொன்று.</p>.<p><strong>4.</strong><br /> குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து<br /> வெயிலைப் பரிகசிக்கிறது<br /> ஒரு குயிலிருள்<br /> ஒரு காகயிருள்<br /> ஒரு ரெட்டைவாலிருள்.<br /> <br /> <strong>5.</strong><br /> மிகுந்த கணத்துடன்<br /> பின்தொடரவேண்டியிருக்கிறது வெயிலுக்கு<br /> ஒரு மூன்று சக்கர வண்டியின் பின்னே,<br /> கைவிடப்பட்ட ஒரு முதியவளின் பின்னே,<br /> சிக்னலில் சிவப்பு விளக்குக்காகக் காத்திருக்கும்<br /> கால்களின் பின்னே.<br /> <br /> <strong>6.</strong><br /> அப்படி ஓர் அடர்த்தியாய்ப்<br /> பொழிந்த வெயிலை<br /> அலைந்து திரிந்து சேகரித்து<br /> அடுப்பினுள் மூட்டிய விறகில்<br /> ஊதிவிடும் அம்மாவின் முத்தம்<br /> ஒருபோதும்<br /> காந்தியதில்லை எங்களுக்கு.</p>
<p><strong>1.</strong><br /> மரத்தினடியில் முளைத்து<br /> சாயங்காலம் வரையிலும்<br /> சிமிட்டிக்கொண்டிருக்கின்றன<br /> வெயில் எழுப்பிய<br /> நிலத்தின் கண்கள்.<br /> <br /> <strong>2.</strong><br /> இலைகள் றெக்கைகள்<br /> ஒவ்வொன்றினடியிலும்<br /> ஓடிவந்து பதுங்கிக்கொண்டது நிழல்.<br /> தற்போது<br /> மரத்தை வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது<br /> வெயில்.</p>.<p><strong>3.</strong><br /> ஆடி<br /> அசைந்து<br /> மிதந்து<br /> பூமி சேர்ந்து<br /> அத்தனையழகாய்<br /> மரணத்தை வாழ்கிறது<br /> சருகொன்று.</p>.<p><strong>4.</strong><br /> குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து<br /> வெயிலைப் பரிகசிக்கிறது<br /> ஒரு குயிலிருள்<br /> ஒரு காகயிருள்<br /> ஒரு ரெட்டைவாலிருள்.<br /> <br /> <strong>5.</strong><br /> மிகுந்த கணத்துடன்<br /> பின்தொடரவேண்டியிருக்கிறது வெயிலுக்கு<br /> ஒரு மூன்று சக்கர வண்டியின் பின்னே,<br /> கைவிடப்பட்ட ஒரு முதியவளின் பின்னே,<br /> சிக்னலில் சிவப்பு விளக்குக்காகக் காத்திருக்கும்<br /> கால்களின் பின்னே.<br /> <br /> <strong>6.</strong><br /> அப்படி ஓர் அடர்த்தியாய்ப்<br /> பொழிந்த வெயிலை<br /> அலைந்து திரிந்து சேகரித்து<br /> அடுப்பினுள் மூட்டிய விறகில்<br /> ஊதிவிடும் அம்மாவின் முத்தம்<br /> ஒருபோதும்<br /> காந்தியதில்லை எங்களுக்கு.</p>