<p><em>மாநகரைப் பாதியாக்கியிருக்கிறது மிக நீண்ட பகல்<br /> நடைமேம்பாலச் சிறுமியின் மெலிந்த பாடலில் ஒளிந்துகொண்டிருந்த நகரவாசிகள்<br /> மிக மெதுவாக வெளியேறுகின்றனர்<br /> அவ்வளவு சிறிய வாழ்விலிருந்து.<br /> இந்த வாரம் காணாமல்போன முதியவர் சரிந்த சுவரொட்டியிலிருந்தபடி<br /> தன்னிருப்பிடம் அழைத்துச்செல்ல அவர்களிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறார்.<br /> எல்லோரையும் வரவேற்றிடும் <br /> வணிக வளாகத்தின் மிகப் பெரிய பொம்மைகளுக்குள்ளிருக்கும்<br /> உயிருள்ள சிறிய இதயத்திற்கு, எப்போதும் மிகவும் பசிக்கிறது</em><br /> <em><em></em></em></p>.<p><em><em></em>இப்பிரபஞ்சத்திலிருந்தே தனித்திருக்க வேண்டுமது<br /> விழுகின்ற மனிதவுருவம் பதித்த சிக்னலுக்கென நிற்பதற்கும் நகர்வதற்கும் <br /> இடையில் சாவதற்கும் எஞ்சியவர்கள் எவரேனுமிருக்கிறார்கள்.<br /> யாரும் யாருடனுமற்ற நெரிசலில்<br /> முழுவதும் காலியான மனிதர்களின் இருப்பை <br /> மிக அவசரமாக நேர்த்தியாக்க வேண்டும் மாநகருக்கு. <br /> காய்ந்த நிலத்தில்<br /> முடியத் தொடங்கிய இன்றையப் பகலில் பசிக்கென ஒற்றைக்காகம் கரைகிறது,<br /> அவ்வளவு தனிமையாக<br /> அவ்வளவு வன்மையாக...<br /> <br /> ஓர் இடைவெளியில் நிறைய்ய காலிசெய்வதற்கென யிருந்த பேரன்புகளை<br /> துண்டு நோட்டீஸென வருவோர்போவோரிடமெல்லாம் விநியோகித்துக்கொண்டிருக்கிறது நகரம்.<br /> ஒவ்வொரு முறையும் விற்கின்ற கத்தும் நாய்பொம்மைகளின் ஞாபகங்களை<br /> நடைபாதையிலே விட்டுச் செல்கிறானவன்.<br /> மதியத்தில் விரைந்திடும் பீட்சாக்காரனின் மோட்டார் சைக்கிளைப் பின்தொடர்கிறது<br /> அந்நகரின் பெரும் பசி.<br /> ஏடிஎம் வரிசையில் மிகக் கடைசியில் நின்றுபார்த்து மகிழ்கிறது எதுவுமற்ற வாழ்வு <br /> திரும்பத் திரும்ப சிரித்தும் அழுதும் தன்னைத் தகவமைத்துக்கொள்கிற தது<br /> அவ்வளவொன்றும் துயரமிருப்பதாய் தெரிவதில்லை<br /> தினசரியின் நோய்கள் எல்லோருக்கும் பழக்கமாகிவிட்டது<br /> நீங்கள் வந்தடைந்திருக்கும் மிகப் பெரிய கட்டடத்திலிருக்கும் சின்ன ஜன்னல் வழியே<br /> நகரைப் பார்த்துக்கொண்டிருப்பதென்பது <br /> மிகப் பெரிய ஆனந்தமானதுதான்.<br /> ஆனால்.<br /> இப்போதிருந்தே ஆரம்பிக்க வேண்டும் எவனைப்போலவோ இந்நிலத்தில். <br /> சற்று கரடுமுரடாக அலைந்து திரிவதற்கு.</em></p>
<p><em>மாநகரைப் பாதியாக்கியிருக்கிறது மிக நீண்ட பகல்<br /> நடைமேம்பாலச் சிறுமியின் மெலிந்த பாடலில் ஒளிந்துகொண்டிருந்த நகரவாசிகள்<br /> மிக மெதுவாக வெளியேறுகின்றனர்<br /> அவ்வளவு சிறிய வாழ்விலிருந்து.<br /> இந்த வாரம் காணாமல்போன முதியவர் சரிந்த சுவரொட்டியிலிருந்தபடி<br /> தன்னிருப்பிடம் அழைத்துச்செல்ல அவர்களிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறார்.<br /> எல்லோரையும் வரவேற்றிடும் <br /> வணிக வளாகத்தின் மிகப் பெரிய பொம்மைகளுக்குள்ளிருக்கும்<br /> உயிருள்ள சிறிய இதயத்திற்கு, எப்போதும் மிகவும் பசிக்கிறது</em><br /> <em><em></em></em></p>.<p><em><em></em>இப்பிரபஞ்சத்திலிருந்தே தனித்திருக்க வேண்டுமது<br /> விழுகின்ற மனிதவுருவம் பதித்த சிக்னலுக்கென நிற்பதற்கும் நகர்வதற்கும் <br /> இடையில் சாவதற்கும் எஞ்சியவர்கள் எவரேனுமிருக்கிறார்கள்.<br /> யாரும் யாருடனுமற்ற நெரிசலில்<br /> முழுவதும் காலியான மனிதர்களின் இருப்பை <br /> மிக அவசரமாக நேர்த்தியாக்க வேண்டும் மாநகருக்கு. <br /> காய்ந்த நிலத்தில்<br /> முடியத் தொடங்கிய இன்றையப் பகலில் பசிக்கென ஒற்றைக்காகம் கரைகிறது,<br /> அவ்வளவு தனிமையாக<br /> அவ்வளவு வன்மையாக...<br /> <br /> ஓர் இடைவெளியில் நிறைய்ய காலிசெய்வதற்கென யிருந்த பேரன்புகளை<br /> துண்டு நோட்டீஸென வருவோர்போவோரிடமெல்லாம் விநியோகித்துக்கொண்டிருக்கிறது நகரம்.<br /> ஒவ்வொரு முறையும் விற்கின்ற கத்தும் நாய்பொம்மைகளின் ஞாபகங்களை<br /> நடைபாதையிலே விட்டுச் செல்கிறானவன்.<br /> மதியத்தில் விரைந்திடும் பீட்சாக்காரனின் மோட்டார் சைக்கிளைப் பின்தொடர்கிறது<br /> அந்நகரின் பெரும் பசி.<br /> ஏடிஎம் வரிசையில் மிகக் கடைசியில் நின்றுபார்த்து மகிழ்கிறது எதுவுமற்ற வாழ்வு <br /> திரும்பத் திரும்ப சிரித்தும் அழுதும் தன்னைத் தகவமைத்துக்கொள்கிற தது<br /> அவ்வளவொன்றும் துயரமிருப்பதாய் தெரிவதில்லை<br /> தினசரியின் நோய்கள் எல்லோருக்கும் பழக்கமாகிவிட்டது<br /> நீங்கள் வந்தடைந்திருக்கும் மிகப் பெரிய கட்டடத்திலிருக்கும் சின்ன ஜன்னல் வழியே<br /> நகரைப் பார்த்துக்கொண்டிருப்பதென்பது <br /> மிகப் பெரிய ஆனந்தமானதுதான்.<br /> ஆனால்.<br /> இப்போதிருந்தே ஆரம்பிக்க வேண்டும் எவனைப்போலவோ இந்நிலத்தில். <br /> சற்று கரடுமுரடாக அலைந்து திரிவதற்கு.</em></p>