<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>எ</em></strong></span><em>ரிக்கும் வெயிலில் உலர்திராட்சைகள்போல் ஆகிவிட்ட உதடுகள்<br /> மீண்டும் கனிந்துவிட ஒரு முத்தம் கேட்டேன்.<br /> நீயோ நெம்பிவிட முடியாத ஒரு பாறையின்<br /> ஸ்திரத்தன்மையிலிருந்துகொண்டு மறுத்துவிட்டாய்.<br /> என்னிதயம் நெருப்பில் வேகும் இரும்பைப்போல கனன்றுவிட்டது<br /> கோடையில் புழுங்கும் உடலில் உன் ஸ்பரிசமற்றிருப்பது<br /> பெருந்துயரென நீயேன் அறியவில்லை<br /> உன் விரலின் சின்னத் தொடுதல்கூட இல்லாத<br /> இந்தத் தீம்பிழம்பான நாட்களை<br /> எப்படிக் கடந்துவிடுவேன் எனத் தெரியவில்லை</em></p>.<p><em><br /> உன் ஒரு முத்தமென்பது என் ஆயுட்காலத்தில்<br /> எத்தனை வருடங்கள் நீட்டிக்குமென்பதை நீ தெரிந்திருக்கவில்லை<br /> ஆம், நீயென்பது வெறும் நீயாகிய உருவம் மட்டுமில்லை<br /> என் வாழ்வையே உயிர்க்கவைத்திருக்கும்<br /> கடவுளைப் போன்றதொரு பேரியக்கம்.<br /> உன்னைக் கண்டுவிட்ட பொழுதிலிருந்து<br /> என் மரணம் தள்ளிப்போயிருப்பதை உணர்ந்திருக்க மாட்டாய்<br /> நீ என் செதில்கள் அலைபாயும் கடல்<br /> உன் ஒவ்வொரு துளியின் தொடுவுணர்விலும்<br /> என் காதல் விஸ்வரூபமெடுக்கும்<br /> அகம் புறம் என யாவும் மறைந்துவிடும் ஆழ்மனதில்<br /> நீ மட்டுமே விழித்திருக்கிறாய்<br /> உன்னைத் தவிரவும் வேறொருவரும் இல்லாத பொழுதுகள்<br /> வாய்க்கப் பெற்ற நான் உன் ஒரு முத்தத்திற்கென<br /> பல நூற்றாண்டுக்கால எரிமலையின் வாயைப்போல<br /> கொதித்து வறண்ட இதழ்களோடு காத்திருப்பேன்.</em></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>எ</em></strong></span><em>ரிக்கும் வெயிலில் உலர்திராட்சைகள்போல் ஆகிவிட்ட உதடுகள்<br /> மீண்டும் கனிந்துவிட ஒரு முத்தம் கேட்டேன்.<br /> நீயோ நெம்பிவிட முடியாத ஒரு பாறையின்<br /> ஸ்திரத்தன்மையிலிருந்துகொண்டு மறுத்துவிட்டாய்.<br /> என்னிதயம் நெருப்பில் வேகும் இரும்பைப்போல கனன்றுவிட்டது<br /> கோடையில் புழுங்கும் உடலில் உன் ஸ்பரிசமற்றிருப்பது<br /> பெருந்துயரென நீயேன் அறியவில்லை<br /> உன் விரலின் சின்னத் தொடுதல்கூட இல்லாத<br /> இந்தத் தீம்பிழம்பான நாட்களை<br /> எப்படிக் கடந்துவிடுவேன் எனத் தெரியவில்லை</em></p>.<p><em><br /> உன் ஒரு முத்தமென்பது என் ஆயுட்காலத்தில்<br /> எத்தனை வருடங்கள் நீட்டிக்குமென்பதை நீ தெரிந்திருக்கவில்லை<br /> ஆம், நீயென்பது வெறும் நீயாகிய உருவம் மட்டுமில்லை<br /> என் வாழ்வையே உயிர்க்கவைத்திருக்கும்<br /> கடவுளைப் போன்றதொரு பேரியக்கம்.<br /> உன்னைக் கண்டுவிட்ட பொழுதிலிருந்து<br /> என் மரணம் தள்ளிப்போயிருப்பதை உணர்ந்திருக்க மாட்டாய்<br /> நீ என் செதில்கள் அலைபாயும் கடல்<br /> உன் ஒவ்வொரு துளியின் தொடுவுணர்விலும்<br /> என் காதல் விஸ்வரூபமெடுக்கும்<br /> அகம் புறம் என யாவும் மறைந்துவிடும் ஆழ்மனதில்<br /> நீ மட்டுமே விழித்திருக்கிறாய்<br /> உன்னைத் தவிரவும் வேறொருவரும் இல்லாத பொழுதுகள்<br /> வாய்க்கப் பெற்ற நான் உன் ஒரு முத்தத்திற்கென<br /> பல நூற்றாண்டுக்கால எரிமலையின் வாயைப்போல<br /> கொதித்து வறண்ட இதழ்களோடு காத்திருப்பேன்.</em></p>