<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அன்பு எனும் நான்</strong></span><br /> <br /> <strong>எ</strong>ன் அன்பு<br /> ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின் கைத்தடி<br /> மனமுவந்து பெறும் திருநங்கையின் ஆசி<br /> குஷ்டரோகியின் நாற்பட்ட புண்ணுக்கான களிம்பு<br /> நிறைமாதக் கர்ப்பிணியின் மசக்கை<br /> முதிர்கன்னி எதிர்நோக்கும் ஆளரவமற்ற தனிமை<br /> ஊமைச்சிறுமி யாசகம் பெற்ற ஐந்து ரூபாய் பணம்<br /> மடி முட்டிக் கவ்வும் மறியின் காம்பு <br /> இளங்கன்று மேனியை வருடும் பசுவின் நா<br /> வானம் பார்த்த வறண்ட பூமியின் முதல் தூத்தல்<br /> கால்கடுக்கக் காத்திருக்கும் முதியவளின் கடைசிப்பேருந்து<br /> தடம் மறந்த குட்டியானைச் செவிமடுக்கும்<br /> தாய் யானைப் பிளிறல் சத்தம்<br /> கலைமான்கள் அருந்தும் காட்டுச்சுனை<br /> இணைக்கென பாதியிரவில் பார்சலாகும் மூன்று பரோட்டா<br /> முதுகாவலாளியின் குட்டித் தூக்கம்<br /> இறுதிவரை சொல்லப்படாத ஒருதலைக் காதல்<br /> கண்ணீர்த்துளி பெருக்கும் இரவின் கனிவான பாடல்<br /> பைத்தியம் கையேந்தும் அதிகாலைத் தேநீர்<br /> நோய்வாய்ப்பட்ட வயோதிகன் விரும்பிக் கேட்கும்<br /> விடுதலை மரணம்<br /> என் அன்பு…<br /> <br /> <strong>- தர்மராஜ் பெரியசாமி</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஓவியக்காரி</strong></span><br /> <br /> <strong>சு</strong>வரெல்லாம் கிறுக்கத் தொடங்கிய<br /> லாவண் குட்டி<br /> முதலில் காடு வரைந்தாள்<br /> மரக்கிளையில் மீன் வரைந்தாள்<br /> நதி வரைந்தாள்<br /> அதன் நீரில் விலங்குகள் வரைந்தாள்<br /> வானம் வரைந்தாள்<br /> அதன்மேலே படகு வரைந்தாள்<br /> கடல் வரைந்தாள்<br /> அதன் மேலே விமானம் வரைந்தாள்<br /> அடுத்து என்ன வரைவதென<br /> யோசித்துக்கொண்டே தூங்கிப்போனவள்<br /> கனவிலும் எதையோ<br /> வரைந்துகொண்டிருப்பாள்.<br /> <strong><br /> - கோ.பகவான்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காதல் காலம்</strong></span><br /> <br /> <strong>இ</strong>ன்றும்கூட சட்டை காலரில்<br /> கர்சீப்பை வைத்துக்கொண்டு போகும்<br /> ஆண்களின் முகத்தை<br /> வலிய வந்து பார்க்கிறாள்<br /> விமலா அக்கா;<br /> இன்றும்கூட நம்பிக் கொண்டிருக்கிறாள்<br /> ரயில்வே டிராக்கில் அடிபட்டு செத்த<br /> முகமழிந்த பிணம்<br /> வில்லியம் அண்ணா இல்லையென;<br /> இன்னும்கூட நின்று கொண்டிருக்கிறது<br /> அந்தப் பேருந்து நிழற்குடையும்<br /> தட்டச்சுப் பயிலக பாதாம் மரமும்<br /> காவியக் காதலுக்கு சாட்சியாய்;<br /> இன்றும்கூட உயிரோடிருக்கிறார்<br /> ஊர்ப் பெரியவர் சதாசிவம் <br /> தான் எப்போதோ செய்துவிட்ட <br /> பாதகங்களுக்கு<br /> கோயில்தோறும் பாதயாத்திரை <br /> செய்து பிராயச்சித்தம் தேடிக்கொண்டு;<br /> இன்றும்கூட எங்கோ வளர்கிறது <br /> வில்லியம் அண்ணாவின் வெளிர் நிறத்தில்<br /> விமலா அக்காவின் அழகான கண்களுடன்<br /> ஓர் அனாதைப் பிள்ளை;<br /> இன்னும்கூட எங்கோ மூலையில் கிடக்கிறது<br /> அந்த ரெஜிஸ்டர் ஆபீஸ் தடி நோட்டில் <br /> விமலா.s வில்லியம்.j என்ற பெயர்கள்...<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> - கோஸ்ரீதரன்</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அன்பு எனும் நான்</strong></span><br /> <br /> <strong>எ</strong>ன் அன்பு<br /> ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின் கைத்தடி<br /> மனமுவந்து பெறும் திருநங்கையின் ஆசி<br /> குஷ்டரோகியின் நாற்பட்ட புண்ணுக்கான களிம்பு<br /> நிறைமாதக் கர்ப்பிணியின் மசக்கை<br /> முதிர்கன்னி எதிர்நோக்கும் ஆளரவமற்ற தனிமை<br /> ஊமைச்சிறுமி யாசகம் பெற்ற ஐந்து ரூபாய் பணம்<br /> மடி முட்டிக் கவ்வும் மறியின் காம்பு <br /> இளங்கன்று மேனியை வருடும் பசுவின் நா<br /> வானம் பார்த்த வறண்ட பூமியின் முதல் தூத்தல்<br /> கால்கடுக்கக் காத்திருக்கும் முதியவளின் கடைசிப்பேருந்து<br /> தடம் மறந்த குட்டியானைச் செவிமடுக்கும்<br /> தாய் யானைப் பிளிறல் சத்தம்<br /> கலைமான்கள் அருந்தும் காட்டுச்சுனை<br /> இணைக்கென பாதியிரவில் பார்சலாகும் மூன்று பரோட்டா<br /> முதுகாவலாளியின் குட்டித் தூக்கம்<br /> இறுதிவரை சொல்லப்படாத ஒருதலைக் காதல்<br /> கண்ணீர்த்துளி பெருக்கும் இரவின் கனிவான பாடல்<br /> பைத்தியம் கையேந்தும் அதிகாலைத் தேநீர்<br /> நோய்வாய்ப்பட்ட வயோதிகன் விரும்பிக் கேட்கும்<br /> விடுதலை மரணம்<br /> என் அன்பு…<br /> <br /> <strong>- தர்மராஜ் பெரியசாமி</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஓவியக்காரி</strong></span><br /> <br /> <strong>சு</strong>வரெல்லாம் கிறுக்கத் தொடங்கிய<br /> லாவண் குட்டி<br /> முதலில் காடு வரைந்தாள்<br /> மரக்கிளையில் மீன் வரைந்தாள்<br /> நதி வரைந்தாள்<br /> அதன் நீரில் விலங்குகள் வரைந்தாள்<br /> வானம் வரைந்தாள்<br /> அதன்மேலே படகு வரைந்தாள்<br /> கடல் வரைந்தாள்<br /> அதன் மேலே விமானம் வரைந்தாள்<br /> அடுத்து என்ன வரைவதென<br /> யோசித்துக்கொண்டே தூங்கிப்போனவள்<br /> கனவிலும் எதையோ<br /> வரைந்துகொண்டிருப்பாள்.<br /> <strong><br /> - கோ.பகவான்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காதல் காலம்</strong></span><br /> <br /> <strong>இ</strong>ன்றும்கூட சட்டை காலரில்<br /> கர்சீப்பை வைத்துக்கொண்டு போகும்<br /> ஆண்களின் முகத்தை<br /> வலிய வந்து பார்க்கிறாள்<br /> விமலா அக்கா;<br /> இன்றும்கூட நம்பிக் கொண்டிருக்கிறாள்<br /> ரயில்வே டிராக்கில் அடிபட்டு செத்த<br /> முகமழிந்த பிணம்<br /> வில்லியம் அண்ணா இல்லையென;<br /> இன்னும்கூட நின்று கொண்டிருக்கிறது<br /> அந்தப் பேருந்து நிழற்குடையும்<br /> தட்டச்சுப் பயிலக பாதாம் மரமும்<br /> காவியக் காதலுக்கு சாட்சியாய்;<br /> இன்றும்கூட உயிரோடிருக்கிறார்<br /> ஊர்ப் பெரியவர் சதாசிவம் <br /> தான் எப்போதோ செய்துவிட்ட <br /> பாதகங்களுக்கு<br /> கோயில்தோறும் பாதயாத்திரை <br /> செய்து பிராயச்சித்தம் தேடிக்கொண்டு;<br /> இன்றும்கூட எங்கோ வளர்கிறது <br /> வில்லியம் அண்ணாவின் வெளிர் நிறத்தில்<br /> விமலா அக்காவின் அழகான கண்களுடன்<br /> ஓர் அனாதைப் பிள்ளை;<br /> இன்னும்கூட எங்கோ மூலையில் கிடக்கிறது<br /> அந்த ரெஜிஸ்டர் ஆபீஸ் தடி நோட்டில் <br /> விமலா.s வில்லியம்.j என்ற பெயர்கள்...<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> - கோஸ்ரீதரன்</strong></span></p>