<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>மு</em></strong></span><em>த்தரப்பு பேச்சு வார்த்தைகள் முடிந்திருந்தன<br /> எருமைகளின் பரிணாமத்தில்<br /> கொம்புகள் எனப் பெயர் பெற்றது<br /> உண்மையில் அதன் கால்நகங்களே<br /> <br /> அதன்படி பன்றி மற்றும் யானையின் தந்தங்கள்<br /> அவற்றின் வாய்நகங்கள் என்றும்<br /> மனித நகங்கள் ஒருவரையொருவர் கீறிக்கொள்ளப் பயன்படும்<br /> காதலுக்கான பிரச்சனை என்றதும்<br /> பலத்த கரவொலி எழுந்தது</em></p>.<p><em><br /> <br /> மீன்களின் செதிள்கள் சிப்பிகள்<br /> பாம்புகளின் சட்டை ஆமைகளின் முதுகு<br /> பறவைகளின் அலகுகள் முட்டைகளின் ஓடுகள்<br /> குறித்து மறுசுற்றில் பேசலாம் என்றார்கள்<br /> <br /> வாழைப்பூ மடல் வரகரிசித் தவுடு<br /> பனையின் மட்டைகள் மக்காச்சோளக் கோதுகள்<br /> கொட்டைகளின் மூடி இருவிதையிலைத் தோல்கள் யாவும்<br /> ஈரம் காயாதிருக்க வேண்டித் துளிர்த்த<br /> இறந்த காலங்களா என்றொரு விவாதம் முன்வைக்கப்பட்டது<br /> <br /> அண்டம் பிண்டம் கண்டம் தண்டம்<br /> என்றொருவர் எழுந்து கத்தினார்<br /> <br /> அப்படியெனில் வானுயர்ந்த இக்கோபுரங்கள்தான் <br /> இப்பூமியின் கொம்புகளா சரி அவற்றின் நகங்கள் எங்கே? <br /> எனவும் வெடித்தெழுந்த ஒருவர்<br /> மிக அபத்தமான கேள்வியெனக் கோபித்து வெளியேறினார்<br /> கனத்த மௌனம் நிலவ<br /> அரங்கத்தின் மூலையில் மெல்ல ஆடைவிலக்கி<br /> தங்கள் கீறல்களைப் பார்த்து குறும்பாய்ச் சிரிக்கத்துவங்கியிருந்தது ஒரு கூட்டம்.</em></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>மு</em></strong></span><em>த்தரப்பு பேச்சு வார்த்தைகள் முடிந்திருந்தன<br /> எருமைகளின் பரிணாமத்தில்<br /> கொம்புகள் எனப் பெயர் பெற்றது<br /> உண்மையில் அதன் கால்நகங்களே<br /> <br /> அதன்படி பன்றி மற்றும் யானையின் தந்தங்கள்<br /> அவற்றின் வாய்நகங்கள் என்றும்<br /> மனித நகங்கள் ஒருவரையொருவர் கீறிக்கொள்ளப் பயன்படும்<br /> காதலுக்கான பிரச்சனை என்றதும்<br /> பலத்த கரவொலி எழுந்தது</em></p>.<p><em><br /> <br /> மீன்களின் செதிள்கள் சிப்பிகள்<br /> பாம்புகளின் சட்டை ஆமைகளின் முதுகு<br /> பறவைகளின் அலகுகள் முட்டைகளின் ஓடுகள்<br /> குறித்து மறுசுற்றில் பேசலாம் என்றார்கள்<br /> <br /> வாழைப்பூ மடல் வரகரிசித் தவுடு<br /> பனையின் மட்டைகள் மக்காச்சோளக் கோதுகள்<br /> கொட்டைகளின் மூடி இருவிதையிலைத் தோல்கள் யாவும்<br /> ஈரம் காயாதிருக்க வேண்டித் துளிர்த்த<br /> இறந்த காலங்களா என்றொரு விவாதம் முன்வைக்கப்பட்டது<br /> <br /> அண்டம் பிண்டம் கண்டம் தண்டம்<br /> என்றொருவர் எழுந்து கத்தினார்<br /> <br /> அப்படியெனில் வானுயர்ந்த இக்கோபுரங்கள்தான் <br /> இப்பூமியின் கொம்புகளா சரி அவற்றின் நகங்கள் எங்கே? <br /> எனவும் வெடித்தெழுந்த ஒருவர்<br /> மிக அபத்தமான கேள்வியெனக் கோபித்து வெளியேறினார்<br /> கனத்த மௌனம் நிலவ<br /> அரங்கத்தின் மூலையில் மெல்ல ஆடைவிலக்கி<br /> தங்கள் கீறல்களைப் பார்த்து குறும்பாய்ச் சிரிக்கத்துவங்கியிருந்தது ஒரு கூட்டம்.</em></p>