<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>ம</em></strong></span><em>னிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது<br /> அவனது தாய் முன் செல்கிறாள்<br /> சூரியனின் எதிர் நிறத்தில் <br /> அவள் சருமம் <br /> அலைகளை எழுப்புகிறது<br /> கருப்பு நதி அவள்…<br /> முன் செல்கிறாள்<br /> படிக விசும்பில் முழுத் தணுப்பு<br /> வானில் மீன்.<br /> <br /> மனிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது<br /> அவனது நதி முன் செல்கிறது<br /> கபில நிறத்தில் அதன் பரப்பின்<br /> நெட்டலையில் கோணுகிறது <br /> அவன் முகமும் இரண்டு கரையும்<br /> அவன் தாயென்றழைத்ததும் <br /> திரும்பிப் பார்த்த நதியில் மீன்.<br /> <br /> மனிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது<br /> மானின் இதயத்தைக் <br /> கிழித்தளித்துவிட்டு <br /> பதிலுக்கும் சில கற்களை</em></p>.<p style="text-align: left;"><em><br /> தானமாய் பெறுகிறான் தகப்பன்<br /> நிலைத்த மேகமென விரைத்த<br /> மானின் விழிகளில் சிவந்த மீன்<br /> <br /> மனிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது<br /> விழிபட்ட நிலத்திலெல்லாம் பூக்கிறது <br /> தானியங்கள் பால் சுரப்பிகளுடன்<br /> தண்டுகள் நைந்து நெளிய <br /> கணுக்களில் முட்டித் ததும்புகிற<br /> முடிவிலை இலைகளின் படபடப்பில் <br /> மிதக்கிறது பச்சய மீன்<br /> <br /> மனிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது<br /> தோளில் ஆட்டை சுமந்த தாயை<br /> நட்டுவைக்கிறான் நதியோரத்து மணலில்<br /> புலுக்கைச்சுவை நீரில் கொதிக்கிறது உலை<br /> உவர்ப்பைக் கண்டுவிட்ட போதத்தை<br /> சுருட்டிய இலையில் அடைக்கிறான்<br /> ஈரம் பாரித்த தாயின் இடுப்பிலிருந்து<br /> பிய்ந்து விழுகிறது வெளிர்மஞ்சள் நிற மீன்<br /> <br /> மனிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது<br /> உலோகங்களுக்குக் காதுகள் முளைக்கின்றன<br /> சேவகம் புரிகிற பாவனையில் <br /> நதிகளைக் குடிக்கிறது அவை<br /> விசும்பின் வளைகளில் ஊறும் கோள் நண்டுகள்<br /> அவனது நாக்குகளைத் தாமிரமென திரிக்கிறது<br /> நாவல்நிறக் கழிவுகள் அனைத்தாலும் <br /> அச்சிடப்படுகிறது உலகம் முழுக்க <br /> சிறகு முளைத்த காகித மீன்<br /> <br /> மனிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது<br /> அவனது சட்டைப் பையிலிருந்து<br /> ஒரு பறவையை எடுக்கிறான்<br /> அவனுக்கான சாத்தியங்களைப் <br /> பட்டியலிடுகிறது அந்த மிளிர் சாம்பல் பறவை<br /> அவன் தன்னைத்தானே வியந்துகொள்கிறான்<br /> நெகிழி மலைக்கு ஒரு கடவுச்சீட்டை கோருகிறான்<br /> சிகரெட்டிலிருந்து தெறித்த பொறியில்<br /> தீயும் அந்த மலையில் கசியும் வாடையில்<br /> தனது நினைவுகளைப் பரப்புகிறது<br /> பழுப்பு நிற ஆதி மீன்.<br /> <br /> மனிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது<br /> சாலை முடக்கில் நின்று <br /> தலையைத் தூக்கிப் பார்க்கிறான்<br /> ஒளிப்பதிவுக் கருவி ஒன்று<br /> அவனைக் கூர்ந்து நோக்கியதும்<br /> அவன் சட்டையைத் தூக்குகிறான்<br /> தொப்புளுக்கு பதிலாக சாவித்துவாரம் இருப்பது<br /> உறுதி செய்யப்படுகிறது. பீப் சத்தத்திற்குப் பிறகு<br /> அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் <br /> ஏழு மீன்களைக் கக்கிவிட்டு <br /> நடக்கிறான் பச்சை விளக்கு எரியும் சாலையில்.<br /> <br /> மனிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது.</em></p>
<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>ம</em></strong></span><em>னிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது<br /> அவனது தாய் முன் செல்கிறாள்<br /> சூரியனின் எதிர் நிறத்தில் <br /> அவள் சருமம் <br /> அலைகளை எழுப்புகிறது<br /> கருப்பு நதி அவள்…<br /> முன் செல்கிறாள்<br /> படிக விசும்பில் முழுத் தணுப்பு<br /> வானில் மீன்.<br /> <br /> மனிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது<br /> அவனது நதி முன் செல்கிறது<br /> கபில நிறத்தில் அதன் பரப்பின்<br /> நெட்டலையில் கோணுகிறது <br /> அவன் முகமும் இரண்டு கரையும்<br /> அவன் தாயென்றழைத்ததும் <br /> திரும்பிப் பார்த்த நதியில் மீன்.<br /> <br /> மனிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது<br /> மானின் இதயத்தைக் <br /> கிழித்தளித்துவிட்டு <br /> பதிலுக்கும் சில கற்களை</em></p>.<p style="text-align: left;"><em><br /> தானமாய் பெறுகிறான் தகப்பன்<br /> நிலைத்த மேகமென விரைத்த<br /> மானின் விழிகளில் சிவந்த மீன்<br /> <br /> மனிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது<br /> விழிபட்ட நிலத்திலெல்லாம் பூக்கிறது <br /> தானியங்கள் பால் சுரப்பிகளுடன்<br /> தண்டுகள் நைந்து நெளிய <br /> கணுக்களில் முட்டித் ததும்புகிற<br /> முடிவிலை இலைகளின் படபடப்பில் <br /> மிதக்கிறது பச்சய மீன்<br /> <br /> மனிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது<br /> தோளில் ஆட்டை சுமந்த தாயை<br /> நட்டுவைக்கிறான் நதியோரத்து மணலில்<br /> புலுக்கைச்சுவை நீரில் கொதிக்கிறது உலை<br /> உவர்ப்பைக் கண்டுவிட்ட போதத்தை<br /> சுருட்டிய இலையில் அடைக்கிறான்<br /> ஈரம் பாரித்த தாயின் இடுப்பிலிருந்து<br /> பிய்ந்து விழுகிறது வெளிர்மஞ்சள் நிற மீன்<br /> <br /> மனிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது<br /> உலோகங்களுக்குக் காதுகள் முளைக்கின்றன<br /> சேவகம் புரிகிற பாவனையில் <br /> நதிகளைக் குடிக்கிறது அவை<br /> விசும்பின் வளைகளில் ஊறும் கோள் நண்டுகள்<br /> அவனது நாக்குகளைத் தாமிரமென திரிக்கிறது<br /> நாவல்நிறக் கழிவுகள் அனைத்தாலும் <br /> அச்சிடப்படுகிறது உலகம் முழுக்க <br /> சிறகு முளைத்த காகித மீன்<br /> <br /> மனிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது<br /> அவனது சட்டைப் பையிலிருந்து<br /> ஒரு பறவையை எடுக்கிறான்<br /> அவனுக்கான சாத்தியங்களைப் <br /> பட்டியலிடுகிறது அந்த மிளிர் சாம்பல் பறவை<br /> அவன் தன்னைத்தானே வியந்துகொள்கிறான்<br /> நெகிழி மலைக்கு ஒரு கடவுச்சீட்டை கோருகிறான்<br /> சிகரெட்டிலிருந்து தெறித்த பொறியில்<br /> தீயும் அந்த மலையில் கசியும் வாடையில்<br /> தனது நினைவுகளைப் பரப்புகிறது<br /> பழுப்பு நிற ஆதி மீன்.<br /> <br /> மனிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது<br /> சாலை முடக்கில் நின்று <br /> தலையைத் தூக்கிப் பார்க்கிறான்<br /> ஒளிப்பதிவுக் கருவி ஒன்று<br /> அவனைக் கூர்ந்து நோக்கியதும்<br /> அவன் சட்டையைத் தூக்குகிறான்<br /> தொப்புளுக்கு பதிலாக சாவித்துவாரம் இருப்பது<br /> உறுதி செய்யப்படுகிறது. பீப் சத்தத்திற்குப் பிறகு<br /> அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் <br /> ஏழு மீன்களைக் கக்கிவிட்டு <br /> நடக்கிறான் பச்சை விளக்கு எரியும் சாலையில்.<br /> <br /> மனிதன் நடக்கிறான்<br /> பசிக்கிறது.</em></p>