<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>ஒ</em></strong></span><em>ரு மொக்கவிழ்வதுபோல் ஞாபகம் விரிந்து<br /> நினைவு மடிப்புகளில் உறுத்துகிறது<br /> கடந்துவந்த ஒரு குற்றம்<br /> அத்தருணத்தின் பலவீன மனதை<br /> சிக்கரி கலக்காத தூய சுயநலத்தை<br /> செய்யத் தூண்டி பெருகிய வன்மத்தை<br /> நினைவில் அறைந்தபடி<br /> அது குதித்து வந்து நிற்கிறது <br /> உடன்<br /> வெளிறிப்போய் எடுத்தயெடுப்பில்<br /> அதைத் தடவிக்கொடுத்து கழுத்து நெறிக்க<br /> மயிற்தோகை தேடி அலைகிறோம்<br /> அதுவோ<br /> கண்ணிகளில் சிக்காமல் கானகவெளி பாயும்</em></p>.<p><em><br /> கறுப்பு முயல்<br /> வெகுதொலைவில் நின்றபடி<br /> நம் குற்றமுகம் பதிந்த<br /> வரலாற்றின் பதாகையை உயர்த்திப் பிடிக்கிறது<br /> அங்கம் பதறும்படி நீரிலமிழ்ந்து<br /> கொதிக்கும் சிரசைக் குளிர்விக்க முனைகிறோம்<br /> நம் கண்களை நோக்கி ஒரு மீன்குஞ்சென<br /> நீந்திவருகிறது அக்குற்றம்<br /> அருகில் காணக் கூசும் அதை<br /> இத்தனைகாலம் எங்கிருந்தாயென்கிற<br /> வெற்று அங்கலாய்ப்பு<br /> கொல்லுந்துணிவைத் தரப்போவதில்லை<br /> தவிர<br /> துருத்தும் சிறுமடிப்பைச் சீவியெறிய<br /> கொலைவாள் வேண்டுமா<br /> ஒரு குறுங்கத்தி போதும்தானே.</em></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>ஒ</em></strong></span><em>ரு மொக்கவிழ்வதுபோல் ஞாபகம் விரிந்து<br /> நினைவு மடிப்புகளில் உறுத்துகிறது<br /> கடந்துவந்த ஒரு குற்றம்<br /> அத்தருணத்தின் பலவீன மனதை<br /> சிக்கரி கலக்காத தூய சுயநலத்தை<br /> செய்யத் தூண்டி பெருகிய வன்மத்தை<br /> நினைவில் அறைந்தபடி<br /> அது குதித்து வந்து நிற்கிறது <br /> உடன்<br /> வெளிறிப்போய் எடுத்தயெடுப்பில்<br /> அதைத் தடவிக்கொடுத்து கழுத்து நெறிக்க<br /> மயிற்தோகை தேடி அலைகிறோம்<br /> அதுவோ<br /> கண்ணிகளில் சிக்காமல் கானகவெளி பாயும்</em></p>.<p><em><br /> கறுப்பு முயல்<br /> வெகுதொலைவில் நின்றபடி<br /> நம் குற்றமுகம் பதிந்த<br /> வரலாற்றின் பதாகையை உயர்த்திப் பிடிக்கிறது<br /> அங்கம் பதறும்படி நீரிலமிழ்ந்து<br /> கொதிக்கும் சிரசைக் குளிர்விக்க முனைகிறோம்<br /> நம் கண்களை நோக்கி ஒரு மீன்குஞ்சென<br /> நீந்திவருகிறது அக்குற்றம்<br /> அருகில் காணக் கூசும் அதை<br /> இத்தனைகாலம் எங்கிருந்தாயென்கிற<br /> வெற்று அங்கலாய்ப்பு<br /> கொல்லுந்துணிவைத் தரப்போவதில்லை<br /> தவிர<br /> துருத்தும் சிறுமடிப்பைச் சீவியெறிய<br /> கொலைவாள் வேண்டுமா<br /> ஒரு குறுங்கத்தி போதும்தானே.</em></p>