<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>ம</em></strong></span><em>னநலக் காப்பக வாயிலில்<br /> ரோஸுக்கு மாத்திரைகள் கொடுக்க <br /> முதியவர் காத்திருக்கிறார்<br /> <br /> ரோஸ் அவரையும்<br /> இசை நாற்காலி விளையாட்டையும் <br /> மட்டுமே அறிந்தவள்<br /> <br /> இரவுகள் அவளது உறக்கத்தை<br /> விநோதமான ஓரிடத்தில் ஒளித்திருந்தன<br /> </em></p>.<p><em><br /> தனது மத்திம வயதிலும்<br /> அவ்விடத்தை அவள் தேடிக்கொண்டுதானிருக்கிறாள்<br /> <br /> ஓசைகள் நிரம்பிய செவிகளுக்குள்<br /> தனது கீதத்தைத் தொலைத்திருந்தாள்<br /> <br /> பட்சிகள் நிறைந்த கண்களுக்குள்<br /> தனது வனத்தைத் தொலைத்திருந்தாள்<br /> <br /> கீதத்தையும் வனத்தையும்<br /> முதியவர் மாத்திரைகளாக மாற்றித்<br /> தன்னிடத்தில் வருவதாக<br /> எண்ணிக்கொள்வாள்<br /> <br /> பருக்கைகளையவள் தும்பைப்பூக்களாகப்<br /> பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் <br /> நிறங்களிழந்த வண்ணத்துப்பூச்சியை<br /> வாலில் நூல்கட்டி சிறுவனொருவன்<br /> விளையாடிக்கொண்டிருந்தான்<br /> <br /> ரோஸின் இமைகளை அவ்வண்ணத்துப் பூச்சிதான்<br /> நெடுநேரம் இமைக்கவிடாமல் செய்திருந்தது<br /> சிறுவன் வண்ணத்துப்பூச்சியோடு<br /> மறைந்துபோன பிற்பாடே<br /> இமைகள் மூடும்<br /> <br /> இமைகள் மூடப்பட்ட அவ்விருளில்<br /> தவறவிட்ட உறக்கத்தை அவள்<br /> கண்டடையவில்லை<br /> <br /> ரோஸ் பேரிளம்பெண் - அவளது <br /> செய்கைகள் குழந்தைகளினுடையவை<br /> ரோஸ் குழந்தை - அவளது<br /> செய்கைகள் பேரிளம் பெண்ணுடையவை<br /> ரோஸ் முதியவள் - அவளது<br /> கண்கள் மட்டும் குழந்தைகளினுடையவை.</em></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>ம</em></strong></span><em>னநலக் காப்பக வாயிலில்<br /> ரோஸுக்கு மாத்திரைகள் கொடுக்க <br /> முதியவர் காத்திருக்கிறார்<br /> <br /> ரோஸ் அவரையும்<br /> இசை நாற்காலி விளையாட்டையும் <br /> மட்டுமே அறிந்தவள்<br /> <br /> இரவுகள் அவளது உறக்கத்தை<br /> விநோதமான ஓரிடத்தில் ஒளித்திருந்தன<br /> </em></p>.<p><em><br /> தனது மத்திம வயதிலும்<br /> அவ்விடத்தை அவள் தேடிக்கொண்டுதானிருக்கிறாள்<br /> <br /> ஓசைகள் நிரம்பிய செவிகளுக்குள்<br /> தனது கீதத்தைத் தொலைத்திருந்தாள்<br /> <br /> பட்சிகள் நிறைந்த கண்களுக்குள்<br /> தனது வனத்தைத் தொலைத்திருந்தாள்<br /> <br /> கீதத்தையும் வனத்தையும்<br /> முதியவர் மாத்திரைகளாக மாற்றித்<br /> தன்னிடத்தில் வருவதாக<br /> எண்ணிக்கொள்வாள்<br /> <br /> பருக்கைகளையவள் தும்பைப்பூக்களாகப்<br /> பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் <br /> நிறங்களிழந்த வண்ணத்துப்பூச்சியை<br /> வாலில் நூல்கட்டி சிறுவனொருவன்<br /> விளையாடிக்கொண்டிருந்தான்<br /> <br /> ரோஸின் இமைகளை அவ்வண்ணத்துப் பூச்சிதான்<br /> நெடுநேரம் இமைக்கவிடாமல் செய்திருந்தது<br /> சிறுவன் வண்ணத்துப்பூச்சியோடு<br /> மறைந்துபோன பிற்பாடே<br /> இமைகள் மூடும்<br /> <br /> இமைகள் மூடப்பட்ட அவ்விருளில்<br /> தவறவிட்ட உறக்கத்தை அவள்<br /> கண்டடையவில்லை<br /> <br /> ரோஸ் பேரிளம்பெண் - அவளது <br /> செய்கைகள் குழந்தைகளினுடையவை<br /> ரோஸ் குழந்தை - அவளது<br /> செய்கைகள் பேரிளம் பெண்ணுடையவை<br /> ரோஸ் முதியவள் - அவளது<br /> கண்கள் மட்டும் குழந்தைகளினுடையவை.</em></p>