<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>த</em></strong></span><em>ம் இறக்கைகளை சற்றே ஒதுக்கி<br /> குஞ்சுகள் வீடடைய இடம் தரும்<br /> சின்னஞ்சிறிய பறவைக்கே வாழ்வின் மீது<br /> அத்தனை பிடித்தமிருக்கும்போது…<br /> நடுங்கும் உன் விரல்களை <br /> அமைதிப்படுத்திக்கொண்டு<br /> என் கைகளுக்குள் விழி மூடு மகளே!<br /> <br /> நேற்றிரவு நீ உறங்கிக்கொண்டிருந்தபோது<br /> உன் குடிசை கொளுத்தப்பட்டது.<br /> தன் கத்திரிப்பூ நிற பாவாடையைத் தூக்கிப் பிடித்து<br /> கன்றுக்குட்டியின் முதல் துள்ளலோடு<br /> இச்சேரி முழுக்க உன்னோடு ஓடி விளையாடிய<br /> மஞ்சுக்குட்டி குடிசையோடு பொசுங்கிப்போனாள்.<br /> <br /> உண்மைதான்.<br /> <br /> சூடு பொறுக்காத அவளது அழுகுரல்<br /> உன் மூளையில் ஒலிக்கிறதா?<br /> பொசுங்கிய அவளது உடல்கறியின் நெடி<br /> உன் இதயத்தின் அடியாழத்தில் பிரட்டுகிறதா?<br /> <br /> அதனாலென்ன மகளே...<br /> நாளைய விடியலின் நிறம் எதுவாகவும் இருக்கட்டும்.<br /> இன்றிரவு நீ விழி மூடு.<br /> <br /> நீ பிறந்ததிலிருந்து - இது பத்தாவது முறை.</em></p>.<p><em><br /> பத்து வயதுக்காரி சொல்வதற்கு<br /> பத்து குடிசையெரிப்புக் கதைகள்!<br /> இந்தச் சேரி வாழ்வு<br /> உனை அனுபவங்களுக்குப் பழக்கவில்லை மகளே<br /> சாவுக்குப் பழக்குகிறது.<br /> <br /> ராசுத் தாத்தாவைப்போல<br /> மல்லிகா அக்காவைப்போல<br /> பாபு அண்ணாவின்<br /> பெயர் வைக்கப்படாத <br /> பச்சிளம்பிள்ளையைப்போல<br /> நேற்று பொசுங்கிப்போன <br /> மஞ்சுக்குட்டியைப்போல<br /> ஒருநாள் நீயும் பொசுங்கிப்போவாய் என<br /> சாவுக்குப் பழக உனை நிர்பந்திக்கிறது<br /> <br /> “நிராகரிக்கப்பட்ட வாழ்வே சாவெனும் பாடத்தைக்<br /> கற்றுக்கொண்டு அமைதி பெறு.”<br /> <br /> மகளே... நாளையின் மணம்<br /> பொசுங்கிய நெடிகொண்டதாகவே இருக்கட்டும்.<br /> வெளிச்சம் மறையும் ஒவ்வோர் இரவும்<br /> உனக்காக நான் புனையும் பாடலின் முதல் வரி<br /> ‘இன்றிரவு நீ உறங்கிவிடு’ என்பதே!<br /> <br /> உன் பிள்ளைகளுக்கு நீ பாட <br /> நான் கைமாற்றிக் கொடுக்கும்<br /> ஒற்றைச் சொத்தும் இதுதான்.<br /> <br /> நடுங்கும் உன் விரல்களை<br /> அமைதிப்படுத்திக்கொண்டு - இன்றிரவு<br /> என் கைகளுக்குள் விழி மூடு மகளே.</em></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>த</em></strong></span><em>ம் இறக்கைகளை சற்றே ஒதுக்கி<br /> குஞ்சுகள் வீடடைய இடம் தரும்<br /> சின்னஞ்சிறிய பறவைக்கே வாழ்வின் மீது<br /> அத்தனை பிடித்தமிருக்கும்போது…<br /> நடுங்கும் உன் விரல்களை <br /> அமைதிப்படுத்திக்கொண்டு<br /> என் கைகளுக்குள் விழி மூடு மகளே!<br /> <br /> நேற்றிரவு நீ உறங்கிக்கொண்டிருந்தபோது<br /> உன் குடிசை கொளுத்தப்பட்டது.<br /> தன் கத்திரிப்பூ நிற பாவாடையைத் தூக்கிப் பிடித்து<br /> கன்றுக்குட்டியின் முதல் துள்ளலோடு<br /> இச்சேரி முழுக்க உன்னோடு ஓடி விளையாடிய<br /> மஞ்சுக்குட்டி குடிசையோடு பொசுங்கிப்போனாள்.<br /> <br /> உண்மைதான்.<br /> <br /> சூடு பொறுக்காத அவளது அழுகுரல்<br /> உன் மூளையில் ஒலிக்கிறதா?<br /> பொசுங்கிய அவளது உடல்கறியின் நெடி<br /> உன் இதயத்தின் அடியாழத்தில் பிரட்டுகிறதா?<br /> <br /> அதனாலென்ன மகளே...<br /> நாளைய விடியலின் நிறம் எதுவாகவும் இருக்கட்டும்.<br /> இன்றிரவு நீ விழி மூடு.<br /> <br /> நீ பிறந்ததிலிருந்து - இது பத்தாவது முறை.</em></p>.<p><em><br /> பத்து வயதுக்காரி சொல்வதற்கு<br /> பத்து குடிசையெரிப்புக் கதைகள்!<br /> இந்தச் சேரி வாழ்வு<br /> உனை அனுபவங்களுக்குப் பழக்கவில்லை மகளே<br /> சாவுக்குப் பழக்குகிறது.<br /> <br /> ராசுத் தாத்தாவைப்போல<br /> மல்லிகா அக்காவைப்போல<br /> பாபு அண்ணாவின்<br /> பெயர் வைக்கப்படாத <br /> பச்சிளம்பிள்ளையைப்போல<br /> நேற்று பொசுங்கிப்போன <br /> மஞ்சுக்குட்டியைப்போல<br /> ஒருநாள் நீயும் பொசுங்கிப்போவாய் என<br /> சாவுக்குப் பழக உனை நிர்பந்திக்கிறது<br /> <br /> “நிராகரிக்கப்பட்ட வாழ்வே சாவெனும் பாடத்தைக்<br /> கற்றுக்கொண்டு அமைதி பெறு.”<br /> <br /> மகளே... நாளையின் மணம்<br /> பொசுங்கிய நெடிகொண்டதாகவே இருக்கட்டும்.<br /> வெளிச்சம் மறையும் ஒவ்வோர் இரவும்<br /> உனக்காக நான் புனையும் பாடலின் முதல் வரி<br /> ‘இன்றிரவு நீ உறங்கிவிடு’ என்பதே!<br /> <br /> உன் பிள்ளைகளுக்கு நீ பாட <br /> நான் கைமாற்றிக் கொடுக்கும்<br /> ஒற்றைச் சொத்தும் இதுதான்.<br /> <br /> நடுங்கும் உன் விரல்களை<br /> அமைதிப்படுத்திக்கொண்டு - இன்றிரவு<br /> என் கைகளுக்குள் விழி மூடு மகளே.</em></p>