<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>விழுந்து உடையும் ஊர்க்குளம் </strong></span><br /> <br /> <em>விடுமுறை நாளில் மல்லாந்து கிடக்கும் <br /> பளிங்குக் குளத்தின் மீதேறி <br /> ஈர நடனம் புரிகிறார்கள் <br /> குழந்தைகளும் பெரியவர்களும் <br /> மணிக்கு ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது.<br /> குளத்தில் நீலம் பாவித்துத் தளும்பும் வானத்தை <br /> குழந்தைகள் குடித்துச் செருமுகின்றன. <br /> தாமரைக் கொடிகள் இல்லை <br /> நீர்க்காகங்களின் முக்குளிப்பில்லை<br /> கரை தொட்டு நிற்கும் மரங்களில்லை<br /> மீன்களில்லை<br /> மீனுண்ணிப் பறவைகளில்லை<br /> குளம்போல் ஒரு குளம் மட்டும் இருக்கிறது. <br /> மழை ஒரு பொருட்டில்லை அதற்கு <br /> குழாய் வழி பெருகிவந்து குழாய் வழியாகவே <br /> வெளியேறிவிடுகிறது. <br /> ஊர்க்குளம் ஒன்று வானத்தின் கரிய <br /> மேகத்திற்குள் நின்றபடி மெல்லக் குமுறுகிறது. <br /> நீச்சல் அறியாத அலைகளில் விழுந்து உடைகின்றன <br /> சொட்டுகள் சில.</em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- காடன்</em></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>உயிரோடிருக்கும் அறை </strong></span><br /> <br /> <em>அந்த அறையின் நாற்றத்தை<br /> இனி நீங்கள் சுவாசிக்க வேண்டியதில்லை<br /> <br /> அந்த அறையின் முனகல்களால்<br /> இனி உங்கள் துயில் கலையப்போவதில்லை<br /> <br /> அந்த அறையில் மேலும் பல கிரீஸ் டப்பாக்களை<br /> இனி நீங்கள் அடுக்கி வைத்துக்கொள்ளலாம்<br /> <br /> அந்த அறை புறக்கணிக்கப்பட்டது பற்றி<br /> இனி உங்களை யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை<br /> <br /> ஒரே ஒரு கோரிக்கை<br /> <br /> அந்த அறையை சுத்தப்படுத்திய அவளை<br /> இனியேனும் உங்கள் அறைக்குள் அனுமதியுங்கள்<br /> <br /> இன்னும் உயிரோடுதான் இருக்கிறது<br /> அறைகளற்ற அவள் வீடு.</em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- சுபா செந்தில்குமார்</em></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கடைசி அந்தி நிறத்திலான உடை</strong></span><br /> <br /> <em>இறந்தவன் என்றோ பரிசளித்த ஆடையொன்றை <br /> அணிந்து செல்லும் நாளொன்றில் அவனது <br /> நினைவுகளால் நெய்யப்படுகிறோம்.<br /> எல்லா வண்ணங்களின் மீதும் கருமை பூசி <br /> நமது அன்றையச் சூரியனை <br /> இருளச்செய்கிறான்.<br /> பணிச்சுமைகளுக்கிடையே <br /> துருத்திக்கொண்டு நிற்கும் <br /> அவனது ஞாபகங்கள் <br /> நமது அன்றைய நாளை மேலும் இறுகச்செய்கிறது <br /> அல்லது தளர்த்திவிடுகிறது <br /> அவ்வாடையைக் களையும் <br /> நாளின் இறுதியில் <br /> அவனைச் சிதையிலிறக்கி <br /> திரும்பிய மழைக்கால <br /> அந்தியொன்றை மீட்டுத்தருகிறான்.<br /> அன்றைய இரவில் <br /> நமது போர்வைக்குள் <br /> கதகதத்துக்கொண்டிருப்பது <br /> நாம் அவ்வப்போது ஸ்பரிசித்த அவனது <br /> உள்ளங்கைகளின்றி வேறென்ன?</em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- கே.ஸ்டாலின்</em></span><br /> </p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>விழுந்து உடையும் ஊர்க்குளம் </strong></span><br /> <br /> <em>விடுமுறை நாளில் மல்லாந்து கிடக்கும் <br /> பளிங்குக் குளத்தின் மீதேறி <br /> ஈர நடனம் புரிகிறார்கள் <br /> குழந்தைகளும் பெரியவர்களும் <br /> மணிக்கு ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது.<br /> குளத்தில் நீலம் பாவித்துத் தளும்பும் வானத்தை <br /> குழந்தைகள் குடித்துச் செருமுகின்றன. <br /> தாமரைக் கொடிகள் இல்லை <br /> நீர்க்காகங்களின் முக்குளிப்பில்லை<br /> கரை தொட்டு நிற்கும் மரங்களில்லை<br /> மீன்களில்லை<br /> மீனுண்ணிப் பறவைகளில்லை<br /> குளம்போல் ஒரு குளம் மட்டும் இருக்கிறது. <br /> மழை ஒரு பொருட்டில்லை அதற்கு <br /> குழாய் வழி பெருகிவந்து குழாய் வழியாகவே <br /> வெளியேறிவிடுகிறது. <br /> ஊர்க்குளம் ஒன்று வானத்தின் கரிய <br /> மேகத்திற்குள் நின்றபடி மெல்லக் குமுறுகிறது. <br /> நீச்சல் அறியாத அலைகளில் விழுந்து உடைகின்றன <br /> சொட்டுகள் சில.</em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- காடன்</em></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>உயிரோடிருக்கும் அறை </strong></span><br /> <br /> <em>அந்த அறையின் நாற்றத்தை<br /> இனி நீங்கள் சுவாசிக்க வேண்டியதில்லை<br /> <br /> அந்த அறையின் முனகல்களால்<br /> இனி உங்கள் துயில் கலையப்போவதில்லை<br /> <br /> அந்த அறையில் மேலும் பல கிரீஸ் டப்பாக்களை<br /> இனி நீங்கள் அடுக்கி வைத்துக்கொள்ளலாம்<br /> <br /> அந்த அறை புறக்கணிக்கப்பட்டது பற்றி<br /> இனி உங்களை யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை<br /> <br /> ஒரே ஒரு கோரிக்கை<br /> <br /> அந்த அறையை சுத்தப்படுத்திய அவளை<br /> இனியேனும் உங்கள் அறைக்குள் அனுமதியுங்கள்<br /> <br /> இன்னும் உயிரோடுதான் இருக்கிறது<br /> அறைகளற்ற அவள் வீடு.</em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- சுபா செந்தில்குமார்</em></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கடைசி அந்தி நிறத்திலான உடை</strong></span><br /> <br /> <em>இறந்தவன் என்றோ பரிசளித்த ஆடையொன்றை <br /> அணிந்து செல்லும் நாளொன்றில் அவனது <br /> நினைவுகளால் நெய்யப்படுகிறோம்.<br /> எல்லா வண்ணங்களின் மீதும் கருமை பூசி <br /> நமது அன்றையச் சூரியனை <br /> இருளச்செய்கிறான்.<br /> பணிச்சுமைகளுக்கிடையே <br /> துருத்திக்கொண்டு நிற்கும் <br /> அவனது ஞாபகங்கள் <br /> நமது அன்றைய நாளை மேலும் இறுகச்செய்கிறது <br /> அல்லது தளர்த்திவிடுகிறது <br /> அவ்வாடையைக் களையும் <br /> நாளின் இறுதியில் <br /> அவனைச் சிதையிலிறக்கி <br /> திரும்பிய மழைக்கால <br /> அந்தியொன்றை மீட்டுத்தருகிறான்.<br /> அன்றைய இரவில் <br /> நமது போர்வைக்குள் <br /> கதகதத்துக்கொண்டிருப்பது <br /> நாம் அவ்வப்போது ஸ்பரிசித்த அவனது <br /> உள்ளங்கைகளின்றி வேறென்ன?</em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><em>- கே.ஸ்டாலின்</em></span><br /> </p>