<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>கா</em></strong></span><em>லை நடைப்பயிற்சிக்குச் செல்லும் பூங்கா அது.<br /> அலுவலகம் சென்றுவரும் பரிச்சயமான வழி அது.<br /> அன்றாடம் பல நூறு வாகனங்கள் கடந்து செல்லும் பாதை அது.<br /> கலையோ கட்டடமோ என<br /> செந்நிறச் சுவர்களுடன் மையத்தில் நிற்கும் <br /> மிகப்பழைய நூலகம்.<br /> மாலையில் தந்தையருடன் குழந்தைகள் விளையாடும் பூங்கா அது.<br /> சுற்றுலாப் பயணிகள் தவறவிடாத இடம் அது.</em></p>.<p><em><br /> பள்ளிப் பிள்ளைகள் பேருந்தில் – தம்<br /> ஆசிரியர்களுடன் வரும் இடம் அது.<br /> மனம் கவரும் பூஞ்செடிகள் அழகு சிந்தும் இடம் அது.<br /> கோடைகளில் நிழல் பரவும் பெருமரங்கள் நிறைந்திருக்கும் இடம் அது.<br /> நாளைய நிழல் தரும் தருக்களை விற்கும்<br /> நாற்றங்கால்களைக் கொண்ட இடம் அது.<br /> நேற்று முன்தினம் என் சிறு மகளோடு<br /> செல்லநடை பயின்ற இடம் அது.<br /> யாரோ ஒருவரின் செல்ல மகளாக வளர்ந்துவிட்ட பெண் அங்கு<br /> சிதைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் ஏதுமற்று<br /> பசிய வெளிச்சத்தில் பொலிந்து நின்றது.<br /> இத்தனை நாள் நான் அறியவில்லை –<br /> இரவுக்கு வேறு முகம்<br /> இரவுக்கு வேறு குணம்<br /> இப்போது அங்கு உதிர்கிற<br /> இலைகளின் மலர்களின் <br /> சாயல் கொஞ்சம் மாறிவிட்டது.<br /> இன்று அவ்விடத்தைக் கடக்கையில் கண்டேன்<br /> நடுங்கிக்கொண்டு வீழ்ந்த ஒரு சூரிய கிரணத்தை.</em></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>கா</em></strong></span><em>லை நடைப்பயிற்சிக்குச் செல்லும் பூங்கா அது.<br /> அலுவலகம் சென்றுவரும் பரிச்சயமான வழி அது.<br /> அன்றாடம் பல நூறு வாகனங்கள் கடந்து செல்லும் பாதை அது.<br /> கலையோ கட்டடமோ என<br /> செந்நிறச் சுவர்களுடன் மையத்தில் நிற்கும் <br /> மிகப்பழைய நூலகம்.<br /> மாலையில் தந்தையருடன் குழந்தைகள் விளையாடும் பூங்கா அது.<br /> சுற்றுலாப் பயணிகள் தவறவிடாத இடம் அது.</em></p>.<p><em><br /> பள்ளிப் பிள்ளைகள் பேருந்தில் – தம்<br /> ஆசிரியர்களுடன் வரும் இடம் அது.<br /> மனம் கவரும் பூஞ்செடிகள் அழகு சிந்தும் இடம் அது.<br /> கோடைகளில் நிழல் பரவும் பெருமரங்கள் நிறைந்திருக்கும் இடம் அது.<br /> நாளைய நிழல் தரும் தருக்களை விற்கும்<br /> நாற்றங்கால்களைக் கொண்ட இடம் அது.<br /> நேற்று முன்தினம் என் சிறு மகளோடு<br /> செல்லநடை பயின்ற இடம் அது.<br /> யாரோ ஒருவரின் செல்ல மகளாக வளர்ந்துவிட்ட பெண் அங்கு<br /> சிதைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் ஏதுமற்று<br /> பசிய வெளிச்சத்தில் பொலிந்து நின்றது.<br /> இத்தனை நாள் நான் அறியவில்லை –<br /> இரவுக்கு வேறு முகம்<br /> இரவுக்கு வேறு குணம்<br /> இப்போது அங்கு உதிர்கிற<br /> இலைகளின் மலர்களின் <br /> சாயல் கொஞ்சம் மாறிவிட்டது.<br /> இன்று அவ்விடத்தைக் கடக்கையில் கண்டேன்<br /> நடுங்கிக்கொண்டு வீழ்ந்த ஒரு சூரிய கிரணத்தை.</em></p>