<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காத்திருந்த கண்கள்</strong></span><em><br /> <br /> `வா என்றது உருவம் <br /> நீ போ என்றது நாணம்’<br /> பாடல் ஓடிக்கொண்டிருந்தது.<br /> வெங்காயம் நறுக்கிக்கொண்டிருந்த<br /> அம்மா, அப்பாவை ஆழமாய்<br /> பார்க்கத்துவங்கினாள்<br /> பேப்பர் படித்துக்கொண்டிருந்தவர்<br /> பார்வையை விலக்கவேயில்லை<br /> `மனம் கொண்டது கலக்கம்<br /> இனி வருமோ இல்லையோ உறக்கம்’<br /> என்ற வரிகளில் <br /> அம்மா கண்கலங்கினாளா <br /> அல்லது வெங்காய விளைவா என <br /> இனம் காணவே முடியவில்லை.<br /> சடுதியில் பேப்பரை தூர எறிந்தவர்<br /> `உன்னால முடில நான் நறுக்கறேன்’<br /> என வாங்கி நறுக்க ஆரம்பித்தார்.<br /> அம்மா இன்னமும் அவரையே <br /> பார்த்துக்கொண்டிருக்கிறாள்.<br /> கடந்த ஆறு வருடத்தில்<br /> அப்பா அம்மாவிடம் பேசி <br /> இன்றுதான் பார்த்தோம்.<br /> `ஒருநாள் ஒருவரைக் கண்டேன்<br /> அவர் உயிரைத் தொடர்ந்தே சென்றேன்’<br /> என்ற வரிகளை உதடுகளைக் குவித்து <br /> சீட்டி அடித்தார் அப்பா.<br /> கூடவே மெலிதாய் ஹம் செய்தாள் அம்மா.<br /> அழ வைத்த அரைக்கிலோ வெங்காயம் <br /> துண்டு துண்டாய் கிடக்கிறது.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);">- கோ.ஸ்ரீதரன்</span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>விடுப்புக்கடிதம்</strong></span><em><br /> <br /> ஒரு மழை நடைக்கான <br /> அழைப்பு வந்துகொண்டே இருக்கிறது.<br /> உயிர்வெளியிலிருந்து<br /> தனித்தலைதலின் <br /> இனிமையை எடுத்துக்கூறிக் <br /> கொண்டிருக்கிறது<br /> அழைப்பின் வசீகரம்.<br /> யதார்த்த வாழ்க்கையின் <br /> இரும்புக்குண்டுகளை<br /> அவிழ்த்தெறியவே நினைக்கிறேன்<br /> சில நாள்களுக்காகவாது<br /> கடன் அட்டை வசூல் தேதிக்குள்<br /> போய் வந்துவிட வேண்டும்<br /> ஒரு மழைநடை.<br /> <span style="color: rgb(0, 0, 255);"><br /> -அனலோன்</span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஒரு ப்ளூவேல் கனவு</strong></span><em><br /> <br /> என் பொற்காசுகளை உண்டியலில் போட்டுவிடச் சொன்னார்கள்<br /> நான் அரசனாகிவிட்டதாகச் சொன்னார்கள்<br /> ஒவ்வொரு விடியலிலும் நான் <br /> இந்தத் தேசத்தின் <br /> பிரஜைதானா என்பதை <br /> உறுதி செய்யச் சொன்னார்கள்<br /> என் கழுதைகளே மிரளும் வகையில்<br /> ஆதார மணி ஒன்றை அணிவித்தார்கள்<br /> பொதுவாகத் திமிங்கலங்கள் மூச்சு வாங்கக் கடலுக்கு மேலே வரும் <br /> இந்தத் திமிங்கலத்தை நான்தான் கரைக்கு அழைத்து வந்தேன்<br /> இது என் கடலையே இரையாய்க் கேட்கிறது<br /> இந்தக் கனவு சீக்கிரம் கலைந்துவிட வேண்டும்<br /> யாரேனும் விழிப்பின் அலாரங்களை உரக்க ஒலிக்க வையுங்களேன்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);">- ரா.பிரசன்னா</span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மிச்சம்</strong></span><em><br /> <br /> முதலில் சில நெல்மணிகளை<br /> எங்கள் கருப்பையில் பயிரிட<br /> அனுமதி கேட்டீர்கள்.<br /> அவை தோதாய் வளருங்கால்<br /> அத்துணை வசதியும் ஈந்தீர்கள்.<br /> பயிர் கருகினாலும்<br /> பாழாகாமல் மேய்ந்துவிட<br /> குதிரைகளையும் பரிசளித்தீர்கள்.<br /> நீர் பாய்ச்ச தோண்டிக் <br /> களைக்கும்போதெல்லாம் <br /> குளிர்பானம் தந்து<br /> இளைப்பாறச் சொன்னீர்கள்.<br /> தாய்மையின் அடிவாரத்திலிருந்து<br /> சூரிய வெளிச்சம் <br /> தூயதாய்ப் பருகிய<br /> பால்கதிரை <br /> நக இடுக்கில் நசுக்கியபடி<br /> நெல்மணிகள் வேண்டாமென<br /> எங்கள் கருப்பையை <br /> கடன் கேட்கிறீர்கள்.<br /> யோசிக்கத் திராணியற்ற<br /> எங்கள் கண்களில்<br /> நீங்கள் நசுக்கிப் பார்த்த<br /> பால்கதிரிலிருந்து<br /> மெல்லப் பனிக்கிறது<br /> நெல்லின் குருதி.<br /> <br /> </em><span style="color: rgb(0, 0, 255);"><em>- ந.சிவநேசன்</em></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காத்திருந்த கண்கள்</strong></span><em><br /> <br /> `வா என்றது உருவம் <br /> நீ போ என்றது நாணம்’<br /> பாடல் ஓடிக்கொண்டிருந்தது.<br /> வெங்காயம் நறுக்கிக்கொண்டிருந்த<br /> அம்மா, அப்பாவை ஆழமாய்<br /> பார்க்கத்துவங்கினாள்<br /> பேப்பர் படித்துக்கொண்டிருந்தவர்<br /> பார்வையை விலக்கவேயில்லை<br /> `மனம் கொண்டது கலக்கம்<br /> இனி வருமோ இல்லையோ உறக்கம்’<br /> என்ற வரிகளில் <br /> அம்மா கண்கலங்கினாளா <br /> அல்லது வெங்காய விளைவா என <br /> இனம் காணவே முடியவில்லை.<br /> சடுதியில் பேப்பரை தூர எறிந்தவர்<br /> `உன்னால முடில நான் நறுக்கறேன்’<br /> என வாங்கி நறுக்க ஆரம்பித்தார்.<br /> அம்மா இன்னமும் அவரையே <br /> பார்த்துக்கொண்டிருக்கிறாள்.<br /> கடந்த ஆறு வருடத்தில்<br /> அப்பா அம்மாவிடம் பேசி <br /> இன்றுதான் பார்த்தோம்.<br /> `ஒருநாள் ஒருவரைக் கண்டேன்<br /> அவர் உயிரைத் தொடர்ந்தே சென்றேன்’<br /> என்ற வரிகளை உதடுகளைக் குவித்து <br /> சீட்டி அடித்தார் அப்பா.<br /> கூடவே மெலிதாய் ஹம் செய்தாள் அம்மா.<br /> அழ வைத்த அரைக்கிலோ வெங்காயம் <br /> துண்டு துண்டாய் கிடக்கிறது.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);">- கோ.ஸ்ரீதரன்</span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>விடுப்புக்கடிதம்</strong></span><em><br /> <br /> ஒரு மழை நடைக்கான <br /> அழைப்பு வந்துகொண்டே இருக்கிறது.<br /> உயிர்வெளியிலிருந்து<br /> தனித்தலைதலின் <br /> இனிமையை எடுத்துக்கூறிக் <br /> கொண்டிருக்கிறது<br /> அழைப்பின் வசீகரம்.<br /> யதார்த்த வாழ்க்கையின் <br /> இரும்புக்குண்டுகளை<br /> அவிழ்த்தெறியவே நினைக்கிறேன்<br /> சில நாள்களுக்காகவாது<br /> கடன் அட்டை வசூல் தேதிக்குள்<br /> போய் வந்துவிட வேண்டும்<br /> ஒரு மழைநடை.<br /> <span style="color: rgb(0, 0, 255);"><br /> -அனலோன்</span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஒரு ப்ளூவேல் கனவு</strong></span><em><br /> <br /> என் பொற்காசுகளை உண்டியலில் போட்டுவிடச் சொன்னார்கள்<br /> நான் அரசனாகிவிட்டதாகச் சொன்னார்கள்<br /> ஒவ்வொரு விடியலிலும் நான் <br /> இந்தத் தேசத்தின் <br /> பிரஜைதானா என்பதை <br /> உறுதி செய்யச் சொன்னார்கள்<br /> என் கழுதைகளே மிரளும் வகையில்<br /> ஆதார மணி ஒன்றை அணிவித்தார்கள்<br /> பொதுவாகத் திமிங்கலங்கள் மூச்சு வாங்கக் கடலுக்கு மேலே வரும் <br /> இந்தத் திமிங்கலத்தை நான்தான் கரைக்கு அழைத்து வந்தேன்<br /> இது என் கடலையே இரையாய்க் கேட்கிறது<br /> இந்தக் கனவு சீக்கிரம் கலைந்துவிட வேண்டும்<br /> யாரேனும் விழிப்பின் அலாரங்களை உரக்க ஒலிக்க வையுங்களேன்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);">- ரா.பிரசன்னா</span></em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மிச்சம்</strong></span><em><br /> <br /> முதலில் சில நெல்மணிகளை<br /> எங்கள் கருப்பையில் பயிரிட<br /> அனுமதி கேட்டீர்கள்.<br /> அவை தோதாய் வளருங்கால்<br /> அத்துணை வசதியும் ஈந்தீர்கள்.<br /> பயிர் கருகினாலும்<br /> பாழாகாமல் மேய்ந்துவிட<br /> குதிரைகளையும் பரிசளித்தீர்கள்.<br /> நீர் பாய்ச்ச தோண்டிக் <br /> களைக்கும்போதெல்லாம் <br /> குளிர்பானம் தந்து<br /> இளைப்பாறச் சொன்னீர்கள்.<br /> தாய்மையின் அடிவாரத்திலிருந்து<br /> சூரிய வெளிச்சம் <br /> தூயதாய்ப் பருகிய<br /> பால்கதிரை <br /> நக இடுக்கில் நசுக்கியபடி<br /> நெல்மணிகள் வேண்டாமென<br /> எங்கள் கருப்பையை <br /> கடன் கேட்கிறீர்கள்.<br /> யோசிக்கத் திராணியற்ற<br /> எங்கள் கண்களில்<br /> நீங்கள் நசுக்கிப் பார்த்த<br /> பால்கதிரிலிருந்து<br /> மெல்லப் பனிக்கிறது<br /> நெல்லின் குருதி.<br /> <br /> </em><span style="color: rgb(0, 0, 255);"><em>- ந.சிவநேசன்</em></span></p>