<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>க</em></strong></span><em>றுத்த காய்களுடன் ஆடத்தலைப்பட்டவன் <br /> குதிரையை முடுக்கிவிட்டான்<br /> ஓங்காராமாய் கனைக்க முற்பட்ட அதன் மூச்சில் <br /> நெகிழியின் வீச்சமிருந்தது<br /> ஆங்கில எல் வடிவில் நாற்புறமும் சுழன்றாடிய <br /> அதன் குளம்பசைவில்<br /> சிதறியது மேசை மீதிருந்த தேநீர்<br /> மூன்று வெள்ளை சிப்பாய்களையும் <br /> ஒரு மந்திரியையும் காவு வாங்கிப் பின் G4ல் ஓய்வெடுத்தது<br /> சுற்றி இருந்த வெள்ளைநிறக் குதிரையோ யானையையோ கண்டு அது அச்சப்படவில்லை<br /> H5 கறுத்த சிப்பாயும் F6ல் தன் இணைப்புரவியும் காவலிருக்க<br /> படுகளத்தில் வேடிக்கை பார்த்தபடி நிற்ககூசி <br /> ஆடுபவனை நோட்டமிட்டது<br /> தன் லகானை சொடுக்கி E5க்கோ F2க்கோ <br /> தன்னைக் கொண்டு செல்ல இறைஞ்சியது<br /> கறுத்த ராணியை முன்னகர்த்தி அவள் வெளுத்த யானையால் வெட்டுண்டபோது<br /> அவனின் முட்டாள்தனத்தால் அதிர்ந்துபோனது<br /> போர்த்தந்திரம் அறியாப் பேதையை <br /> நம்பிக் களம் புகுந்ததாய் புலம்பிற்று<br /> எஞ்சிய கறுஞ்சிப்பாய்களும் மந்திரியும் யானையும் <br /> சிவந்த ராணியால் கொல்லப்பட்டு<br /> தான் மட்டும் இறுதிவரை வெட்டுப்படாமல் இருப்பது குறித்து வெட்கம் கொண்டது<br /> கறுத்த ராஜா செக்மேட் செய்யப்பட்ட கணத்தில்<br /> கழிவிரக்கத்தால் தலைகுனிந்த புரவி <br /> மீண்டும் அவன் விளையாட்டைத் துவக்கியபோது<br /> பெயரிடப்படாத ஒரு போர்க்களத்தில் பிடறி சிலும்ப B8ல் நின்றிருந்தது.</em></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>க</em></strong></span><em>றுத்த காய்களுடன் ஆடத்தலைப்பட்டவன் <br /> குதிரையை முடுக்கிவிட்டான்<br /> ஓங்காராமாய் கனைக்க முற்பட்ட அதன் மூச்சில் <br /> நெகிழியின் வீச்சமிருந்தது<br /> ஆங்கில எல் வடிவில் நாற்புறமும் சுழன்றாடிய <br /> அதன் குளம்பசைவில்<br /> சிதறியது மேசை மீதிருந்த தேநீர்<br /> மூன்று வெள்ளை சிப்பாய்களையும் <br /> ஒரு மந்திரியையும் காவு வாங்கிப் பின் G4ல் ஓய்வெடுத்தது<br /> சுற்றி இருந்த வெள்ளைநிறக் குதிரையோ யானையையோ கண்டு அது அச்சப்படவில்லை<br /> H5 கறுத்த சிப்பாயும் F6ல் தன் இணைப்புரவியும் காவலிருக்க<br /> படுகளத்தில் வேடிக்கை பார்த்தபடி நிற்ககூசி <br /> ஆடுபவனை நோட்டமிட்டது<br /> தன் லகானை சொடுக்கி E5க்கோ F2க்கோ <br /> தன்னைக் கொண்டு செல்ல இறைஞ்சியது<br /> கறுத்த ராணியை முன்னகர்த்தி அவள் வெளுத்த யானையால் வெட்டுண்டபோது<br /> அவனின் முட்டாள்தனத்தால் அதிர்ந்துபோனது<br /> போர்த்தந்திரம் அறியாப் பேதையை <br /> நம்பிக் களம் புகுந்ததாய் புலம்பிற்று<br /> எஞ்சிய கறுஞ்சிப்பாய்களும் மந்திரியும் யானையும் <br /> சிவந்த ராணியால் கொல்லப்பட்டு<br /> தான் மட்டும் இறுதிவரை வெட்டுப்படாமல் இருப்பது குறித்து வெட்கம் கொண்டது<br /> கறுத்த ராஜா செக்மேட் செய்யப்பட்ட கணத்தில்<br /> கழிவிரக்கத்தால் தலைகுனிந்த புரவி <br /> மீண்டும் அவன் விளையாட்டைத் துவக்கியபோது<br /> பெயரிடப்படாத ஒரு போர்க்களத்தில் பிடறி சிலும்ப B8ல் நின்றிருந்தது.</em></p>