<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>நீ</em></strong></span><em>திகேட்கும் பயணத்தில்<br /> மற்றவர்களுக்கு என்ன நடந்ததோ<br /> அதுதான் அனிதாவுக்கும் நடந்தது<br /> நீண்ட காயம்பட்ட இரவுகளுக்குப் பின்<br /> கழுத்து அறுபட்ட பறவையாக<br /> பாதி திறந்த கண்களுடன்<br /> தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறாள்<br /> <br /> அனிதா ஒரு மூட்டை தூக்குபவரின்<br /> மகளாக இருந்தாள்<br /> தங்கள் மேல் சுமத்தப்பட்ட<br /> வரலாற்றுச் சுமையை<br /> இறக்கிவைக்க விரும்பினாள்<br /> நூற்றாண்டுகளாக<br /> மூட்டை தூக்குபவர்கள்<br /> தங்கள் விதியின் சுமையினால்<br /> முதுகு வளைந்தவர்களாக இருந்தார்கள்<br /> அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும்<br /> முதுகு வளைந்தே பிறந்தார்கள்<br /> அவர்கள் எப்போதும் <br /> ஒரு கடைமட்ட வேலையின்<br /> நுகத்தடியில் பிணைக்கப்பட்டார்கள்</em></p>.<p><em>வரலாற்றின் இந்த நோய்க்குத்தான்<br /> அனிதா சிகிச்சையளிக்க விரும்பினாள்<br /> அவளுக்கு வளைந்த முதுகுடன்<br /> தாழ்ந்த கண்களுடன் நடந்துபோக விருப்பமில்லை<br /> ஒரு மருத்துவராகி<br /> அந்த நோய்க்குச் சிகிச்சையளிக்க விரும்பினாள்<br /> <br /> மூட்டை தூக்குபவர்களின் பரம்பரையில்<br /> எவரும் சுமந்திராத<br /> அத்தனை கனத்த கனவை<br /> சுமந்துகொண்டாள் அனிதா<br /> நீங்கள் அவளை<br /> எவ்வளவு எளிதாக அந்தரத்தில்<br /> தொங்கவிட்டுவிட்டீர்கள்<br /> <br /> சமமற்ற குதிரைகளுக்கிடையே<br /> நீங்கள் நடத்திய<br /> சமமற்ற ஒரு போலி பந்தயத்தில்<br /> தோற்ற குதிரையைச் சுட்டுக்கொல்வதுபோல<br /> அனிதாவை நீங்கள் கொலை செய்திருக்கிறீர்கள்<br /> அவளுக்கு வைக்கப்பட்ட<br /> எல்லா சவால்களிலும்<br /> அனிதா வெற்றி பெற்றாள்<br /> அவள் உயர்தரமான நவீன வகுப்பறைகளில் <br /> படிக்கவில்லை<br /> காற்றோட்டமான வீடுகளிலோ<br /> அவளுக்கென்று தனி அறைகளிலோ<br /> அவள் வசிக்கவில்லை<br /> ஷாப்பிங் மால்களிலும்<br /> திரையரங்குகளிலும்<br /> கேளிக்கை விடுதிகளிலும் <br /> தங்கள் மாணவ பருவத்தைக் கொண்டாடுபவர்களில்<br /> அவள் ஒருத்தி அல்ல<br /> ஊட்டச்சத்து குறைந்த உணவுடன்<br /> மங்கலான வெளிச்சத்தில் <br /> இரவெல்லாம் கண் விழித்து <br /> சிறுகச் சிறுக உருவாக்கிய<br /> கனவு அது<br /> ஒரு எறும்பு ரகசியமாக இழுத்துச்சென்ற<br /> இனிப்பு மலை அது<br /> <br /> ஒரு காகிதத்தை<br /> கசக்குவதுபோல <br /> அந்தக் கனவை கசக்கினீர்கள்<br /> அவள் ஏறிச்சென்ற<br /> ஒரு சிகரத்தின் விளிம்பிலிருந்து<br /> அவள் எதிர்பாராத ஒரு தருணத்தில்<br /> அவளைத் தலைகுப்புறக் கீழே தள்ளினீர்கள்<br /> மூட்டை தூக்குபவர்களின் மகன்கள்<br /> மூட்டை தூக்குபவர்களாகவே இருக்க வேண்டும்<br /> வீட்டுவேலை செய்பவர்களின் மகள்கள்<br /> வீட்டு வேலைக்காரிகளாகத்தான் இருக்க வேண்டும்<br /> அதை மீற முயல்கிறவர்கள்<br /> தூக்கில் தொங்க வேண்டும்<br /> <br /> அனிதா அவளது<br /> அறையில் தூக்கிட்டுக்கொள்ளவில்லை<br /> நீதிமன்றத்தின் முற்றத்தில்<br /> அதிகாரத்தின் தூக்குமேடைக்கு<br /> தேசமே பார்க்கும்படி<br /> நீங்ககள்தான் அவளை<br /> அழைத்துச் சென்றீர்கள்<br /> <br /> இந்தத் தேசத்தில் <br /> பொது நுழைவுத்தேர்வு என்ற பெயரால் நடத்தப்பட்ட<br /> மாபெரும் துரோகத்தின் சூதாட்டம் அது<br /> சாவை நோக்கி<br /> அத்தனை உறுதியாக<br /> அனிதாவை வழிநடத்தினீர்கள்<br /> ரோஹித் வெமூலாவை எப்படி வழி நடத்தினீர்களோ <br /> அதேபோல <br /> <br /> வாடிவாசல் திறக்கத் தெருக்களில்<br /> கூடியவர்கள்<br /> ஒரு வரலாற்று அநீதியின் வழியே<br /> சாவுக்களத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட<br /> தங்கள் மகள்களுக்கு<br /> தங்கள் மகன்களுக்கு<br /> தூக்கில் தொங்கும் அனிதாக்களுக்கு<br /> நீதி கேட்க மறுத்து ஏன் மெளனம் காக்கிறார்கள்?<br /> ஏன் தங்கள் முகங்களை<br /> திருப்பிக்கொள்கிறார்கள்?<br /> <br /> அனிதாக்களின் சிதையில் எரியும் நெருப்பை<br /> அவர்களின் கனவுகள்மேல் எரியும் நெருப்பை <br /> அங்கேயே விட்டுவிட்டு<br /> வீடு திரும்பப் போகிறோமா?<br /> </em></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>நீ</em></strong></span><em>திகேட்கும் பயணத்தில்<br /> மற்றவர்களுக்கு என்ன நடந்ததோ<br /> அதுதான் அனிதாவுக்கும் நடந்தது<br /> நீண்ட காயம்பட்ட இரவுகளுக்குப் பின்<br /> கழுத்து அறுபட்ட பறவையாக<br /> பாதி திறந்த கண்களுடன்<br /> தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறாள்<br /> <br /> அனிதா ஒரு மூட்டை தூக்குபவரின்<br /> மகளாக இருந்தாள்<br /> தங்கள் மேல் சுமத்தப்பட்ட<br /> வரலாற்றுச் சுமையை<br /> இறக்கிவைக்க விரும்பினாள்<br /> நூற்றாண்டுகளாக<br /> மூட்டை தூக்குபவர்கள்<br /> தங்கள் விதியின் சுமையினால்<br /> முதுகு வளைந்தவர்களாக இருந்தார்கள்<br /> அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும்<br /> முதுகு வளைந்தே பிறந்தார்கள்<br /> அவர்கள் எப்போதும் <br /> ஒரு கடைமட்ட வேலையின்<br /> நுகத்தடியில் பிணைக்கப்பட்டார்கள்</em></p>.<p><em>வரலாற்றின் இந்த நோய்க்குத்தான்<br /> அனிதா சிகிச்சையளிக்க விரும்பினாள்<br /> அவளுக்கு வளைந்த முதுகுடன்<br /> தாழ்ந்த கண்களுடன் நடந்துபோக விருப்பமில்லை<br /> ஒரு மருத்துவராகி<br /> அந்த நோய்க்குச் சிகிச்சையளிக்க விரும்பினாள்<br /> <br /> மூட்டை தூக்குபவர்களின் பரம்பரையில்<br /> எவரும் சுமந்திராத<br /> அத்தனை கனத்த கனவை<br /> சுமந்துகொண்டாள் அனிதா<br /> நீங்கள் அவளை<br /> எவ்வளவு எளிதாக அந்தரத்தில்<br /> தொங்கவிட்டுவிட்டீர்கள்<br /> <br /> சமமற்ற குதிரைகளுக்கிடையே<br /> நீங்கள் நடத்திய<br /> சமமற்ற ஒரு போலி பந்தயத்தில்<br /> தோற்ற குதிரையைச் சுட்டுக்கொல்வதுபோல<br /> அனிதாவை நீங்கள் கொலை செய்திருக்கிறீர்கள்<br /> அவளுக்கு வைக்கப்பட்ட<br /> எல்லா சவால்களிலும்<br /> அனிதா வெற்றி பெற்றாள்<br /> அவள் உயர்தரமான நவீன வகுப்பறைகளில் <br /> படிக்கவில்லை<br /> காற்றோட்டமான வீடுகளிலோ<br /> அவளுக்கென்று தனி அறைகளிலோ<br /> அவள் வசிக்கவில்லை<br /> ஷாப்பிங் மால்களிலும்<br /> திரையரங்குகளிலும்<br /> கேளிக்கை விடுதிகளிலும் <br /> தங்கள் மாணவ பருவத்தைக் கொண்டாடுபவர்களில்<br /> அவள் ஒருத்தி அல்ல<br /> ஊட்டச்சத்து குறைந்த உணவுடன்<br /> மங்கலான வெளிச்சத்தில் <br /> இரவெல்லாம் கண் விழித்து <br /> சிறுகச் சிறுக உருவாக்கிய<br /> கனவு அது<br /> ஒரு எறும்பு ரகசியமாக இழுத்துச்சென்ற<br /> இனிப்பு மலை அது<br /> <br /> ஒரு காகிதத்தை<br /> கசக்குவதுபோல <br /> அந்தக் கனவை கசக்கினீர்கள்<br /> அவள் ஏறிச்சென்ற<br /> ஒரு சிகரத்தின் விளிம்பிலிருந்து<br /> அவள் எதிர்பாராத ஒரு தருணத்தில்<br /> அவளைத் தலைகுப்புறக் கீழே தள்ளினீர்கள்<br /> மூட்டை தூக்குபவர்களின் மகன்கள்<br /> மூட்டை தூக்குபவர்களாகவே இருக்க வேண்டும்<br /> வீட்டுவேலை செய்பவர்களின் மகள்கள்<br /> வீட்டு வேலைக்காரிகளாகத்தான் இருக்க வேண்டும்<br /> அதை மீற முயல்கிறவர்கள்<br /> தூக்கில் தொங்க வேண்டும்<br /> <br /> அனிதா அவளது<br /> அறையில் தூக்கிட்டுக்கொள்ளவில்லை<br /> நீதிமன்றத்தின் முற்றத்தில்<br /> அதிகாரத்தின் தூக்குமேடைக்கு<br /> தேசமே பார்க்கும்படி<br /> நீங்ககள்தான் அவளை<br /> அழைத்துச் சென்றீர்கள்<br /> <br /> இந்தத் தேசத்தில் <br /> பொது நுழைவுத்தேர்வு என்ற பெயரால் நடத்தப்பட்ட<br /> மாபெரும் துரோகத்தின் சூதாட்டம் அது<br /> சாவை நோக்கி<br /> அத்தனை உறுதியாக<br /> அனிதாவை வழிநடத்தினீர்கள்<br /> ரோஹித் வெமூலாவை எப்படி வழி நடத்தினீர்களோ <br /> அதேபோல <br /> <br /> வாடிவாசல் திறக்கத் தெருக்களில்<br /> கூடியவர்கள்<br /> ஒரு வரலாற்று அநீதியின் வழியே<br /> சாவுக்களத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட<br /> தங்கள் மகள்களுக்கு<br /> தங்கள் மகன்களுக்கு<br /> தூக்கில் தொங்கும் அனிதாக்களுக்கு<br /> நீதி கேட்க மறுத்து ஏன் மெளனம் காக்கிறார்கள்?<br /> ஏன் தங்கள் முகங்களை<br /> திருப்பிக்கொள்கிறார்கள்?<br /> <br /> அனிதாக்களின் சிதையில் எரியும் நெருப்பை<br /> அவர்களின் கனவுகள்மேல் எரியும் நெருப்பை <br /> அங்கேயே விட்டுவிட்டு<br /> வீடு திரும்பப் போகிறோமா?<br /> </em></p>