<p><em>தாயும் மகளும்<br /> பிழைப்பு தேடி<br /> இந்நகர்க்கு வந்திருக்கிறார்கள்.<br /> <br /> தனியொருவராய்<br /> இந்நகர்க்கு வருவோரின் நோக்கம்<br /> கண்டுபிடிக்கப்பட முடியாதது.<br /> அத்தனியாள்<br /> வண்டி விட்டிறங்கியதும்<br /> விறுவிறுவென்று கூட்டம் கலப்பார்.<br /> <br /> இருவராய் மூவராய்<br /> வந்திறங்குவோரின் தவிப்பை<br /> எளிதில் அறியலாம்.<br /> <br /> பேணுதற்கு யாருமில்லா ஊரில்<br /> பெருவாழ்வை நாடவைத்த<br /> ஊழ் மிரட்சியை<br /> அவர்கள் கண்களில்<br /> தயங்கி நடக்கும் கால்களில்<br /> இறுக்கிப் பற்றிய கட்டைப் பைகளில்<br /> காணலாம்.<br /> <br /> வந்திறங்குவோரின்<br /> முதல்நிலை அறியாமை<br /> இவ்வூரின் திசைநிலைக் குழப்பம்.<br /> <br /> வரச்சொல்லி எண் தந்த<br /> பள்ளித் தோழியின் வீட்டுக்கு<br /> எவ்வழி நகர்தல் என்னும் ஆற்றுப்படாமை.<br /> <br /> இவ்வுலகின்<br /> எல்லாத் தீமைகளையும் கண்டுவிட்ட<br /> தாயின் கண்கள். <br /> அவள் கையைப் பிடித்திருக்கும்<br /> சிறுமிக்கு<br /> ஞாலத்தின் எக்குறையும்<br /> புலப்படாக் கண்கள்.<br /> <br /> இவ்விருவரும்<br /> இனி இந்நகரில் விளங்கவிருப்பவர்.<br /> <br /> இங்குள்ள ஆயிரம் தொழிற்கூடங்களிலும் <br /> தாய்க்கு ஓர் இடமுண்டு.<br /> <br /> தரமுயர்த்தப்பட்ட<br /> நடுநிலைப்பள்ளியொன்றில்<br /> அச்சிறுமிக்கு நுழைவுண்டு.<br /> <br /> வாழ்வுடைய ஓரூர்<br /> இப்படித்தான் ஒருவரை ஏற்றுக்கொள்கிறது.<br /> <br /> எங்கோ தொலைவில்<br /> நாக்கசந்த ஒருவர்க்கு<br /> நம்பிக்கை ஊட்டிவிடுகிறது.<br /> <br /> வா நானிருக்கிறேன் என்று<br /> பெருந்தகப்பனைப்போல் இருமி அழைக்கிறது.<br /> <br /> இரண்டு மாற்றுடைகளோடு<br /> தாயும் மகளும்<br /> தந்தையும் பிள்ளையும்<br /> காதலனும் காதலியும்<br /> கனவுகளோடு வந்துவிடுகிறார்கள்.<br /> <br /> மனைவியைத் தேடி கணவனும்<br /> மகளைத் தேடி தந்தையும் <br /> அண்ணனைத் தேடி தம்பியும்<br /> வந்தபடியே இருக்கிறார்கள். <br /> வந்தவர்கள் <br /> பெரும்பாலும் திரும்புவதில்லை <br /> <br /> வாழ்விலாப் பெரியவர்கள்<br /> இன்று துறவேற்பதில்லை.<br /> <br /> கால்கடுக்க நிற்கும் திறன் போதும்,<br /> உடற்பொருந்தாச் சீருடை அணிந்து<br /> நகரக் கட்டடத்தில்<br /> காவலுக்கு நிற்கலாம்.<br /> <br /> இப்படி எல்லாரும் வருகின்றார்கள்.<br /> மீதமுள்ளவர்களும் வந்துவிடுவார்கள்.<br /> <br /> நகரம்தான்<br /> இன்றைய கடைசி நம்பிக்கை.<br /> நகரம்தான்<br /> இன்றைய ஒரே புகலிடம். </em></p>
<p><em>தாயும் மகளும்<br /> பிழைப்பு தேடி<br /> இந்நகர்க்கு வந்திருக்கிறார்கள்.<br /> <br /> தனியொருவராய்<br /> இந்நகர்க்கு வருவோரின் நோக்கம்<br /> கண்டுபிடிக்கப்பட முடியாதது.<br /> அத்தனியாள்<br /> வண்டி விட்டிறங்கியதும்<br /> விறுவிறுவென்று கூட்டம் கலப்பார்.<br /> <br /> இருவராய் மூவராய்<br /> வந்திறங்குவோரின் தவிப்பை<br /> எளிதில் அறியலாம்.<br /> <br /> பேணுதற்கு யாருமில்லா ஊரில்<br /> பெருவாழ்வை நாடவைத்த<br /> ஊழ் மிரட்சியை<br /> அவர்கள் கண்களில்<br /> தயங்கி நடக்கும் கால்களில்<br /> இறுக்கிப் பற்றிய கட்டைப் பைகளில்<br /> காணலாம்.<br /> <br /> வந்திறங்குவோரின்<br /> முதல்நிலை அறியாமை<br /> இவ்வூரின் திசைநிலைக் குழப்பம்.<br /> <br /> வரச்சொல்லி எண் தந்த<br /> பள்ளித் தோழியின் வீட்டுக்கு<br /> எவ்வழி நகர்தல் என்னும் ஆற்றுப்படாமை.<br /> <br /> இவ்வுலகின்<br /> எல்லாத் தீமைகளையும் கண்டுவிட்ட<br /> தாயின் கண்கள். <br /> அவள் கையைப் பிடித்திருக்கும்<br /> சிறுமிக்கு<br /> ஞாலத்தின் எக்குறையும்<br /> புலப்படாக் கண்கள்.<br /> <br /> இவ்விருவரும்<br /> இனி இந்நகரில் விளங்கவிருப்பவர்.<br /> <br /> இங்குள்ள ஆயிரம் தொழிற்கூடங்களிலும் <br /> தாய்க்கு ஓர் இடமுண்டு.<br /> <br /> தரமுயர்த்தப்பட்ட<br /> நடுநிலைப்பள்ளியொன்றில்<br /> அச்சிறுமிக்கு நுழைவுண்டு.<br /> <br /> வாழ்வுடைய ஓரூர்<br /> இப்படித்தான் ஒருவரை ஏற்றுக்கொள்கிறது.<br /> <br /> எங்கோ தொலைவில்<br /> நாக்கசந்த ஒருவர்க்கு<br /> நம்பிக்கை ஊட்டிவிடுகிறது.<br /> <br /> வா நானிருக்கிறேன் என்று<br /> பெருந்தகப்பனைப்போல் இருமி அழைக்கிறது.<br /> <br /> இரண்டு மாற்றுடைகளோடு<br /> தாயும் மகளும்<br /> தந்தையும் பிள்ளையும்<br /> காதலனும் காதலியும்<br /> கனவுகளோடு வந்துவிடுகிறார்கள்.<br /> <br /> மனைவியைத் தேடி கணவனும்<br /> மகளைத் தேடி தந்தையும் <br /> அண்ணனைத் தேடி தம்பியும்<br /> வந்தபடியே இருக்கிறார்கள். <br /> வந்தவர்கள் <br /> பெரும்பாலும் திரும்புவதில்லை <br /> <br /> வாழ்விலாப் பெரியவர்கள்<br /> இன்று துறவேற்பதில்லை.<br /> <br /> கால்கடுக்க நிற்கும் திறன் போதும்,<br /> உடற்பொருந்தாச் சீருடை அணிந்து<br /> நகரக் கட்டடத்தில்<br /> காவலுக்கு நிற்கலாம்.<br /> <br /> இப்படி எல்லாரும் வருகின்றார்கள்.<br /> மீதமுள்ளவர்களும் வந்துவிடுவார்கள்.<br /> <br /> நகரம்தான்<br /> இன்றைய கடைசி நம்பிக்கை.<br /> நகரம்தான்<br /> இன்றைய ஒரே புகலிடம். </em></p>