<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>அ</em></strong></span><em>வ்வளவும் நாம்.<br /> நான் யாரென்ற சிந்தனையில் <br /> நானிருக்கும் போதெல்லாம் <br /> அநேகமாக என் அப்பா<br /> ஓர் ஆட்டுக்குட்டியோடுதான் விளையாடிக்கொண்டிருப்பார்<br /> ஆட்டுக்குட்டியின் கேள்விகளை நான் கேட்பேன்<br /> மேய்ப்பனின் பதில்களை அவர் சொல்வார்<br /> <br /> அப்பா நாம் யார்<br /> நாம் நொண்டிபெருமாளின் வாரிசுகள்<br /> அப்பா அதற்குமுன் நாம் யார்<br /> கிழவன் பரியேறும்பெருமாளின் வாரிசுகள்<br /> அப்பா அதற்குமுன் நாம் யார்<br /> சம்போரையன் ஐயரின் உழவர்கள்<br /> அப்பா உழவனாவதற்கு முன் நாம் யாராக இருந்தோம்<br /> உழவனாவதற்கு முன் நாம் நிலமாக இருந்தோம்<br /> வயல் வரப்பு வாய்க்கால் பறவைக்கூட்டமெனவும் நாமே இருந்தோம்<br /> காடாக இருந்த நினைவும் பல கனவுகளில் உண்டு<br /> நதியாகக் கடல் வந்தடைந்த வழித்தடமும் பாடத்தில் உண்டு<br /> மொத்தத்தில் நாம் எல்லோருக்கும் எல்லாமுமாக இருந்தோம்<br /> போதுமா என் மகனே<br /> </em></p>.<p><em>இதுமட்டும்தானா அப்பா அப்படியெனில்<br /> நாம் அரசனாக இருந்த நினைவில்லையா உனக்கு<br /> வாள் வீரம் போர் மகுடம் கோபுரமென<br /> செங்கோல் ஏந்தி நாம் வாழ்ந்த கதையில்லையா உன்னிடம்<br /> அப்படியொரு கதை நிச்சயமாய் இருந்திருக்கும்<br /> மன்னித்துக்கொள் மகனே<br /> பேராசைகளை பெருந்துரோகங்களை <br /> ஆண்ட பெருமைகளை<br /> அடக்கிய உயிர்களைச் சொல்லும் கதைகளை<br /> நாம் நினைவில் வைத்துக்கொள்ளவே கூடாது மகனே <br /> அப்படியெனில் அப்பா<br /> நாம் அரசனாக இருந்தோமென்ற நினைவு உன் நெஞ்சை நிமிர்த்தவேயில்லையா<br /> நிச்சயமாக இல்லை மகனே<br /> நாம் எல்லாமுமாக இருந்தோமென்ற நினைவே என்னை<br /> இந்த ஆட்டுக்குட்டியோடு விளையாடச் சொல்கிறது<br /> <br /> சரி அப்பா<br /> இந்த ஆட்டுக்குட்டிக்கு நாம் இப்போது யார்<br /> எஜமானர்களாக இருக்கலாம்<br /> தோல் வியாபாரிகளாக இருக்கலாம்<br /> இறைச்சிக் கடைக்காரராக இருக்கலாம்<br /> மேய்ப்பர்களாக இருக்கலாம்<br /> சக வழிப்போக்கர்களாகவும் இருக்கலாம்<br /> இன்னொரு ஆட்டுகுட்டியாகவும் இருக்கலாம்<br /> ஆனால், சரியான பதில் நம்மிடத்தில் இல்லை மகனே<br /> அது அந்த ஆட்டுகுட்டியின் கண்களில் இருக்கிறது<br /> போதும் அப்பா இப்போது சொல்லுங்கள்<br /> நான் யார்<br /> நீ என் விதை<br /> நீங்கள் இல்லாமல் நான் யார்<br /> என் பயிர்களின் நிலம்<br /> விளையாடாதீர்கள் அப்பா இன்னொருவருக்கு நாம் யார்<br /> இன்னொருவருக்கு நாம் இன்னொருவர்<br /> ஐயோ அப்பா <br /> அவ்வளவுதானா நாம்<br /> ஐயோ மகனே<br /> அவ்வளவும் நாம். <br /> </em></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><em>அ</em></strong></span><em>வ்வளவும் நாம்.<br /> நான் யாரென்ற சிந்தனையில் <br /> நானிருக்கும் போதெல்லாம் <br /> அநேகமாக என் அப்பா<br /> ஓர் ஆட்டுக்குட்டியோடுதான் விளையாடிக்கொண்டிருப்பார்<br /> ஆட்டுக்குட்டியின் கேள்விகளை நான் கேட்பேன்<br /> மேய்ப்பனின் பதில்களை அவர் சொல்வார்<br /> <br /> அப்பா நாம் யார்<br /> நாம் நொண்டிபெருமாளின் வாரிசுகள்<br /> அப்பா அதற்குமுன் நாம் யார்<br /> கிழவன் பரியேறும்பெருமாளின் வாரிசுகள்<br /> அப்பா அதற்குமுன் நாம் யார்<br /> சம்போரையன் ஐயரின் உழவர்கள்<br /> அப்பா உழவனாவதற்கு முன் நாம் யாராக இருந்தோம்<br /> உழவனாவதற்கு முன் நாம் நிலமாக இருந்தோம்<br /> வயல் வரப்பு வாய்க்கால் பறவைக்கூட்டமெனவும் நாமே இருந்தோம்<br /> காடாக இருந்த நினைவும் பல கனவுகளில் உண்டு<br /> நதியாகக் கடல் வந்தடைந்த வழித்தடமும் பாடத்தில் உண்டு<br /> மொத்தத்தில் நாம் எல்லோருக்கும் எல்லாமுமாக இருந்தோம்<br /> போதுமா என் மகனே<br /> </em></p>.<p><em>இதுமட்டும்தானா அப்பா அப்படியெனில்<br /> நாம் அரசனாக இருந்த நினைவில்லையா உனக்கு<br /> வாள் வீரம் போர் மகுடம் கோபுரமென<br /> செங்கோல் ஏந்தி நாம் வாழ்ந்த கதையில்லையா உன்னிடம்<br /> அப்படியொரு கதை நிச்சயமாய் இருந்திருக்கும்<br /> மன்னித்துக்கொள் மகனே<br /> பேராசைகளை பெருந்துரோகங்களை <br /> ஆண்ட பெருமைகளை<br /> அடக்கிய உயிர்களைச் சொல்லும் கதைகளை<br /> நாம் நினைவில் வைத்துக்கொள்ளவே கூடாது மகனே <br /> அப்படியெனில் அப்பா<br /> நாம் அரசனாக இருந்தோமென்ற நினைவு உன் நெஞ்சை நிமிர்த்தவேயில்லையா<br /> நிச்சயமாக இல்லை மகனே<br /> நாம் எல்லாமுமாக இருந்தோமென்ற நினைவே என்னை<br /> இந்த ஆட்டுக்குட்டியோடு விளையாடச் சொல்கிறது<br /> <br /> சரி அப்பா<br /> இந்த ஆட்டுக்குட்டிக்கு நாம் இப்போது யார்<br /> எஜமானர்களாக இருக்கலாம்<br /> தோல் வியாபாரிகளாக இருக்கலாம்<br /> இறைச்சிக் கடைக்காரராக இருக்கலாம்<br /> மேய்ப்பர்களாக இருக்கலாம்<br /> சக வழிப்போக்கர்களாகவும் இருக்கலாம்<br /> இன்னொரு ஆட்டுகுட்டியாகவும் இருக்கலாம்<br /> ஆனால், சரியான பதில் நம்மிடத்தில் இல்லை மகனே<br /> அது அந்த ஆட்டுகுட்டியின் கண்களில் இருக்கிறது<br /> போதும் அப்பா இப்போது சொல்லுங்கள்<br /> நான் யார்<br /> நீ என் விதை<br /> நீங்கள் இல்லாமல் நான் யார்<br /> என் பயிர்களின் நிலம்<br /> விளையாடாதீர்கள் அப்பா இன்னொருவருக்கு நாம் யார்<br /> இன்னொருவருக்கு நாம் இன்னொருவர்<br /> ஐயோ அப்பா <br /> அவ்வளவுதானா நாம்<br /> ஐயோ மகனே<br /> அவ்வளவும் நாம். <br /> </em></p>