<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இரவைத் தைத்தல்</strong></span><br /> <br /> <em>இந்தத் தேநீரின் <br /> முதல் மிடறில் <br /> ஒட்டிக் <br /> கரைந்தது கொஞ்சம் அந்தி.<br /> ஒரு விமானம் <br /> தாழப் பறக்கிறது <br /> ட்யூசனுக்கு சைக்கிளில் செல்பவன் <br /> அவ்வப்போது கைகளை காற்றில் விரித்து <br /> பறக்கிறான்.<br /> விபத்தில் மிஞ்சிய <br /> கண்ணாடிச்சில்லில் மின்னுகிறது <br /> முதல் விண்மீன்.<br /> ஒற்றைச் செருப்பணிந்து <br /> நிற்பவனின் <br /> அறுந்த செருப்பைத் தைக்கிறவன் <br /> ஊசியில் இரவு நுழைகிறது.<br /> குறிப்பிட்ட <br /> பிரசவநாளைத் தாண்டியவளைத் <br /> தாங்கிய ஆட்டோ <br /> திட்டுகளை வாங்கியபடி <br /> அத்தனை மெதுவாய் நகர்கிறது.<br /> ஒரு பள்ளத்தில் <br /> ஒரு மேட்டில் <br /> இறங்கி <br /> மேலேறுகிறது <br /> பிரபஞ்சம்.<br /> <br /> - பிராங்ளின் குமார்</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அறுந்த வலையின் அலைகள்</strong></span><br /> <br /> <em>சூடேறும் மணற்பரப்பில் படர்ந்து கிடக்கும் பச்சைக்கொடியில்<br /> அசையும் புழு<br /> வெப்பமற்ற இடம் தேடுகிறது.<br /> நெளி ஓவியமென நீர்ம விளையாட்டைத் தொடங்குகிறது கானல்.<br /> படகு நிழலில் மதுப்புட்டியைத் திறந்தவன்<br /> இரு நெகிழிக் குவளைகளில் <br /> சமமாய்ப் பங்கிட <br /> கடைசிச் சொட்டுத் தீர்ந்த போத்தலை <br /> மீண்டும் மீண்டும் சாய்த்துப் பின் தூக்கியெறிகிறான்.<br /> மணலில் பாதி புதைந்து வெளித் துருத்தித் தெரிகிறது அது.<br /> அமாவாசைக்கென தர்ப்பணம் செய்த இடத்தில்<br /> சிந்திய பிண்டத்தைக் கொத்தும் காக்கைகள் <br /> பித்ருக்களுக்குள் மோதலை உண்டாக்கின.<br /> கூட்டமாய் மேய்ந்த புறாக்களில்<br /> வெள்ளைப் புறாவொன்று அறுந்த வலையில் சிக்கிப் போராடுகிறது.<br /> அஞ்சிய புறாக்கள் பறந்தோடுகின்றன<br /> கரை சேர்ந்த படகிலிருந்து இறங்கியோடுபவர்களின் பதற்றம்<br /> கடற்கரையில் பெரும்கூட்டத்துக்கு வகை செய்கிறது.<br /> அழுது புரள்பவர்களின் ஓசையை இழுத்துப்போகிறது அலை.<br /> <br /> - யாழி கிரிதரன்</em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>காருண்யத் தூரிகை </strong></span><br /> <br /> <em>பாதையில் சரிந்து கிடந்த ஒருவரைக் கண்டதும்<br /> உடுக்கை இழந்தவன் கைப்போல <br /> அவன் உதவியபோது பூலோகம் <br /> முழுவதும் அவன் இதயம் விரிந்து <br /> கிடந்தது.<br /> கடற்கரை சாலையில் காலுடைந்து நொண்டிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை<br /> அள்ளியெடுத்து வந்தவனின் ஓயாத கருணையைப்போல்<br /> அந்த அலைகள் ஒடிக்கொண்டிருக்கின்றன.<br /> எப்போதோ நண்பர்கள் சந்தித்துக்கொண்ட <br /> குழுப்புகைப்படத்தில் உள்ளங்கைப்பற்றிக் கபடமில்லா<br /> புன்னகையெனப் படிந்திருப்பது அவன் இதயம்தான்<br /> அன்பின் வாசங்களென அவன் நட்டுவைத்த<br /> மலர்ச்செடிகள் அவன் துடிப்பெனத்தான் <br /> அசைந்துகொண்டிருக்கின்றன. <br /> பூக்கள் சொல்லாகப் பொழியும் ஒரு கவிதையில் <br /> உயிரினங்கள்மீது காருண்யம் வேண்டி <br /> அவன் இதயத்தைத்தான் அந்தத் தாளில் வரைந்திருந்தான்<br /> நீங்கள்தான் அவன் மாரடைப்பில் <br /> இறந்துவிட்டதாய் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். <br /> <br /> - நா.திங்களன்</em><br /> </p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இரவைத் தைத்தல்</strong></span><br /> <br /> <em>இந்தத் தேநீரின் <br /> முதல் மிடறில் <br /> ஒட்டிக் <br /> கரைந்தது கொஞ்சம் அந்தி.<br /> ஒரு விமானம் <br /> தாழப் பறக்கிறது <br /> ட்யூசனுக்கு சைக்கிளில் செல்பவன் <br /> அவ்வப்போது கைகளை காற்றில் விரித்து <br /> பறக்கிறான்.<br /> விபத்தில் மிஞ்சிய <br /> கண்ணாடிச்சில்லில் மின்னுகிறது <br /> முதல் விண்மீன்.<br /> ஒற்றைச் செருப்பணிந்து <br /> நிற்பவனின் <br /> அறுந்த செருப்பைத் தைக்கிறவன் <br /> ஊசியில் இரவு நுழைகிறது.<br /> குறிப்பிட்ட <br /> பிரசவநாளைத் தாண்டியவளைத் <br /> தாங்கிய ஆட்டோ <br /> திட்டுகளை வாங்கியபடி <br /> அத்தனை மெதுவாய் நகர்கிறது.<br /> ஒரு பள்ளத்தில் <br /> ஒரு மேட்டில் <br /> இறங்கி <br /> மேலேறுகிறது <br /> பிரபஞ்சம்.<br /> <br /> - பிராங்ளின் குமார்</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அறுந்த வலையின் அலைகள்</strong></span><br /> <br /> <em>சூடேறும் மணற்பரப்பில் படர்ந்து கிடக்கும் பச்சைக்கொடியில்<br /> அசையும் புழு<br /> வெப்பமற்ற இடம் தேடுகிறது.<br /> நெளி ஓவியமென நீர்ம விளையாட்டைத் தொடங்குகிறது கானல்.<br /> படகு நிழலில் மதுப்புட்டியைத் திறந்தவன்<br /> இரு நெகிழிக் குவளைகளில் <br /> சமமாய்ப் பங்கிட <br /> கடைசிச் சொட்டுத் தீர்ந்த போத்தலை <br /> மீண்டும் மீண்டும் சாய்த்துப் பின் தூக்கியெறிகிறான்.<br /> மணலில் பாதி புதைந்து வெளித் துருத்தித் தெரிகிறது அது.<br /> அமாவாசைக்கென தர்ப்பணம் செய்த இடத்தில்<br /> சிந்திய பிண்டத்தைக் கொத்தும் காக்கைகள் <br /> பித்ருக்களுக்குள் மோதலை உண்டாக்கின.<br /> கூட்டமாய் மேய்ந்த புறாக்களில்<br /> வெள்ளைப் புறாவொன்று அறுந்த வலையில் சிக்கிப் போராடுகிறது.<br /> அஞ்சிய புறாக்கள் பறந்தோடுகின்றன<br /> கரை சேர்ந்த படகிலிருந்து இறங்கியோடுபவர்களின் பதற்றம்<br /> கடற்கரையில் பெரும்கூட்டத்துக்கு வகை செய்கிறது.<br /> அழுது புரள்பவர்களின் ஓசையை இழுத்துப்போகிறது அலை.<br /> <br /> - யாழி கிரிதரன்</em><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>காருண்யத் தூரிகை </strong></span><br /> <br /> <em>பாதையில் சரிந்து கிடந்த ஒருவரைக் கண்டதும்<br /> உடுக்கை இழந்தவன் கைப்போல <br /> அவன் உதவியபோது பூலோகம் <br /> முழுவதும் அவன் இதயம் விரிந்து <br /> கிடந்தது.<br /> கடற்கரை சாலையில் காலுடைந்து நொண்டிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை<br /> அள்ளியெடுத்து வந்தவனின் ஓயாத கருணையைப்போல்<br /> அந்த அலைகள் ஒடிக்கொண்டிருக்கின்றன.<br /> எப்போதோ நண்பர்கள் சந்தித்துக்கொண்ட <br /> குழுப்புகைப்படத்தில் உள்ளங்கைப்பற்றிக் கபடமில்லா<br /> புன்னகையெனப் படிந்திருப்பது அவன் இதயம்தான்<br /> அன்பின் வாசங்களென அவன் நட்டுவைத்த<br /> மலர்ச்செடிகள் அவன் துடிப்பெனத்தான் <br /> அசைந்துகொண்டிருக்கின்றன. <br /> பூக்கள் சொல்லாகப் பொழியும் ஒரு கவிதையில் <br /> உயிரினங்கள்மீது காருண்யம் வேண்டி <br /> அவன் இதயத்தைத்தான் அந்தத் தாளில் வரைந்திருந்தான்<br /> நீங்கள்தான் அவன் மாரடைப்பில் <br /> இறந்துவிட்டதாய் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். <br /> <br /> - நா.திங்களன்</em><br /> </p>